CPIM Theni DC

CPIM Theni DC Official page of CPIM Theni District Committee

22/08/2026
நாளை 22-08-26. தேதி மாலை 5மணிக்கு கம்பம் நகரில் நடைபெறுகிறது தோழர்  கே.பாலபாரதி ExMla.அவர்கள் பங்கேற்கிறார் திரளாக பங்கே...
21/08/2026

நாளை 22-08-26. தேதி மாலை 5மணிக்கு கம்பம் நகரில் நடைபெறுகிறது தோழர் கே.பாலபாரதி ExMla.அவர்கள் பங்கேற்கிறார் திரளாக பங்கேற்போம்

தேனி மாவட்டம் மேகமலை உட்பட 9 ஊராட்சிக்குட்பட்ட 98 கிராமங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் சுமார்...
17/08/2026

தேனி மாவட்டம் மேகமலை உட்பட 9 ஊராட்சிக்குட்பட்ட 98 கிராமங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் சுமார் 100 ஆண்டுகளாக, 4 தலைமுறைகளுக்கு மேலாக பருத்தி, இலவம்பஞ்சு உட்பட பயிர்களைப் பயிர் செய்து விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். கிராம விவசாயிகளுக்கு செம்பட்டாவும், வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ப்பதற்கு புல்வரி அனுமதிச் சீட்டும் வழங்கி இருக்கிறார்கள். தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இப்பகுதியில் சாலை வசதி, போக்குவரத்து வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, பள்ளிக்கூடம், சமுதாயக்கூடங்கள், ரேஷன் கடைகள் ஆகியவை செய்துகொடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் கிராம சபாவில் எவ்வித தீர்மானங்களும் நிறைவேற்றாமலேயே வனத்துறை காப்புக்காடுகள் என அறிவித்தனர். இதனால் வனத்துறையின் கெடுபிடி அதிகமாகி விவசாய விளைபொருள்கள் சந்தைக்கு எடுத்து செல்லக் கூட வனதுறையினர் தடைகள் ஏற்படுத்தப்பட்டதால், பகுதி மக்களிடம் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான வழக்கில் 24.03.2026 அன்று உச்ச நீதிமன்றம் 98 கிராமங்களில் 4,601 விவசாயக் குடும்பங்களையும், 4,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு காவல்துறை பயன்படுத்த முடியாது என்று சொன்னால் துணை ராணுவப்படையைக் கூட பயன்படுத்துங்கள் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டியிருக்கிறது. இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2006 வன உரிமைச் சட்டம் சுட்டிக்காட்டிய விஷயங்களையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் இப்படிப்பட்ட ஒரு மோசமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

இதன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் ஒன்றன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழக அரசின் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்வதோடு, அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணைநிற்கும் என்பதையும் தெரிவித்து அமைகிறேன். – தோழர் ஆர்.செல்லசுவாமி, எம்.எல்.ஏ., சட்டமன்றக்குழு தலைவர்

More: https://youtube.com/shorts/tr0SUSp

கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அரசியல் பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதையும், ...
28/05/2026

கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அரசியல் பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதையும், இதனை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர்களை அராஜகமாக கைது செய்ததை கண்டித்து சார்பில் #உத்தமபாளத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

26.05.2026அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல! சிபிஐ(எம்) விமர்சன...
26/05/2026

26.05.2026

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல! சிபிஐ(எம்) விமர்சனம்!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென்று ராஜினாமா செய்திருப்பதும், உடனடியாக அவர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்திருப்பதும் தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் அடுக்கடுக்கான குழப்பமும், கோஷ்டி மோதலும் ஏற்பட்டு ராஜினாமா என்ற நிலைக்கு வந்துள்ளது.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் சேர்ந்திருப்பது அவர்கள் விரும்பி மேற்கொண்ட முடிவு என்று சொன்னாலும், எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இயல்பாக நடந்த செயலாக கருத இயலவில்லை. இத்தகைய போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றது அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

ஏற்கனவே, சட்டப்பேரவையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகி இருக்கிறார்கள். இருப்பினும் உடனடியாக அவர்களை தவெகவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை தவெக ஊக்குவிப்பதாகவே கருத வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, இந்த போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

(பெ.சண்முகம்)
மாநில செயலாளர்
Shanmugam Perumal Theekkathir Chief Minister of Tamil Nadu TVK விஜய் CPIM Tamilnadu

சி.பி.ஐ.(எம்) கட்சி தனது தேர்தல் உத்தியை எதனடிப்படையில் தீர்மானிக்கிறது?*நபர் சார்ந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில...
22/05/2026

சி.பி.ஐ.(எம்) கட்சி தனது தேர்தல் உத்தியை எதனடிப்படையில் தீர்மானிக்கிறது?

*நபர் சார்ந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் சிபிஐ(எம்) ஒருபோதும் தேர்தல் உடன்பாடு கொள்வதில்லை.* *இன்றைக்கு நாட்டில் நிலவும் மிகப்பெரிய அபாயம் எது என்பதைக் கேள்விக்குள்ளாக்கி, அதற்கு விடையளிக்கும் வகையிலேயே அரசியல் உத்தியைக் கட்சி தீர்மானிக்கிறது.*

தோழர்.எஸ்.கண்ணன்
மாநிலச் செயற்குழு உறுப்பினர்.
சி.பி.ஐ.(எம்)

Address

Com. Kasthuri Ninaivagam, 72, White House First Street, NRT Nagar
Theni
625531

Telephone

+914546255525

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Theni DC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIM Theni DC:

Shortcuts

Share