ClicK Like ت

ClicK Like ت Friends.! In this page,
GK update
joke update
health update
love & friendship msg update
story update
lyric update
amazing news update

by Ji Sathish

பல்லி சாஸ்திரப்படி,பல்லி நம் உடலில்எங்கே விழுந்தால்என்ன அர்த்தம் என்றுதெரியுமா?இந்திய புராணத்தின்படி, மிருகங்கள்என்பது எ...
14/07/2015

பல்லி சாஸ்திரப்படி,
பல்லி நம் உடலில்
எங்கே விழுந்தால்
என்ன அர்த்தம் என்று
தெரியுமா?
இந்திய புராணத்தின்
படி, மிருகங்கள்
என்பது என்றுமே ஒரு
நல்ல இடத்தை
பிடித்துள்ளது.
ஆனால் அதில் நமக்கு
மிகவும் பிடிக்காத
ஒன்று உள்ளது
என்றால் அது தான்
வீட்டில் காணப்படும்
பல்லி. ஊர்ந்து
செல்லும் உயிரின
வகைகளில் நாம்
அதிகமாக வெறுப்பது
இந்த வீட்டு பல்லியாக
தான் இருக்கும்.
சிவபுராணத்தின் படி
அப்படி நாம் வீட்டில்
பல்லியை பார்க்கும்
போது, நாம் உடனே
கொடுக்கும் ரியாக்ஷன்
- அருவருப்பாக
உணர்வது. அதோடு
நில்லாமல் அதனை
விரட்டுவதில்
குறியாக இருப்போம்.
ஆனால் நம் பண்டைய
இந்திய புராணத்தில்
இதற்கனவே ஒரு
படிப்பு இருந்தது
உங்களுக்கு
தெரியுமா? அது தான்
பல்லி சாஸ்திரம்.

1/12
பல்லி - கேது
பல்லி என்பது
கேதுவை
குறிக்கிறது. கேது
என்பது ஸ்வரபானு
அசுரனின் உடலாகும்.
அவனுடைய தலையை
வெட்டியது விஷ்ணு
பகவானாகும். பல்லி
கத்துவது முதல், அது
நம் உடலில் எங்கே
விழுகிறது என்பது
வரை பல
முக்கியத்துவத்தை
கொண்டுள்ளது.
ஒவ்வொன்றும் ஓர்
அர்த்தத்தை நமக்கு
எடுத்துக்காட்டுகிறது.
தீபாவளியன்று
வீட்டில் பல்லியை
காணவில்லை என்றால்
வெளிச்சங்களின்
பண்டிகையான
தீபாவளி முழுமை
பெறுவதில்லை.
தீபாவளி அன்று
பல்லியை காண
நேர்ந்தால்
குடும்பத்திற்கு
செல்வமும் வளமும்
வந்து சேரும் என
நம்பப்படுகிறது.
2/12
பல்லி தலையில்
விழுவதன் அர்த்தம்
பல்லி ஒருவரின்
தலையில் விழுந்தால்,
வரப்போகும் கெட்ட
நேரத்திற்கு அவர்
தன்னை தானே
தேற்றிக் கொள்ள
வேண்டும்.
இவர்களுக்கு
மற்றவர்களிடம்
இருந்து கடும்
எதிர்ப்பு,
அலைக்கழிக்கப்பட்ட
மன நிம்மதி அல்லது
குடும்பத்தில் மரணம்
ஏற்படலாம். ஆனால்
தலையில்
விழுவதற்கு பதிலாக
முடியின் மீது
விழுந்தால் ஏதோ
வகையிலான நன்மை
கிட்டும்.
3/12
முக பகுதியில்
புருவம், கன்னத்தில்
விழுந்தால்...
ஒருவரின் முகத்தில்
பல்லி விழுந்தால்,
சீக்கிரமே உங்கள்
வீட்டு கதவை
உறவினர் தட்டலாம்.
உங்கள் புருவத்தின்
மீது விழுந்தால், ராஜ
பதவியில்
இருப்பவரிடம்
இருந்து உங்களுக்கு
உதவி கிடைக்கும்.
ஆனால் அதுவே
உங்கள் கன்னம்
அல்லது கண்களில்
விழுந்தால், ஏதோ
ஒன்றுக்காக நீங்கள்
தண்டிக்கப்படுவீர்கள்.
4/12
மேல் உதடு, கீழ் உதடு,
மூக்கு, வலது காதில்
விழுந்தால்...
மேல் உதட்டின் மீது
விழும் போது செல்வ
இழப்பு ஏற்படும்.
அதுவே கீழ் உதடு
என்றால் சொத்து
பெருகும் என
அர்த்தமாகும். உங்கள்
மூக்கின் மீது பல்லி
விழுந்தால், நீங்கள்
நோய்வாய் படலாம்.
வலது காதின் மீது
பல்லி விழுந்தால்
நீண்ட ஆரோக்கியமான
வாழ்வை நீங்கள்
வாழ்வீர்கள் என
அர்த்தமாகும்.
5/12
வாயில் அல்லது
கழுத்தில்
விழுந்தால்...
உங்கள் வாயின் மீது
விழுந்தால், ஏதோ
ஒன்றை கண்டு நீங்கள்
பயப்பட போகிறீர்கள் என
அர்த்தமாகும். ஆனால்
கழுத்தின் மீது
விழுந்தால் உங்கள்
விரோதிகள்
அழிக்கப்படுவார்கள்.
6/12
இடது கை அல்லது
வலது கையில்
விழுந்தால்...
இடது கையின் மீது
பல்லி விழுந்தால்,
உங்களுக்கு பாலியல்
ரீதியான சந்தோஷங்கள்
கிடைக்கும். இதுவே
வலது கை என்றால்
உங்கள் உடல்நலம்
பெருவாரியாக
பாதிக்கப்படும்.
7/12
வலது மணிக்கட்டு,
தொப்புள், தொடை,
முட்டி, கணுக்கால்,
பிட்டம்
வலது மணிக்கட்டில்
விழுந்தால், ஏதோ
வகையில் பிரச்சனை
எழலாம். பல்லி விழும்
இடம் உங்கள் தொப்புள்
என்றால் உங்களுக்கு
மதிப்புமிக்க
கற்களும்,
ரத்தினங்களும்
கிடைக்கும்.
மறுபுறம், அது
உங்கள் தொடையில்
விழுந்தால் உங்கள்
பெற்றோருக்கு நீங்கள்
வருத்தத்தை
ஏற்படுத்துவீர்கள்.
முட்டி, கணுக்கால்
மற்றும் பிட்டத்தின்
மீது விழுந்தால்
பொதுவான நன்மை
ஏற்படும்.
8/12
பாதத்தில் அல்லது
பிறப்புறுப்பில்
விழுந்தால்...
பாதத்தில் பல்லி
விழுந்தால்
வருங்காலத்தில்
பயணம்
மேற்கொள்வீர்கள்.
பிறப்புறுப்பின் மீது
விழுந்தால்
கஷ்டகாலம் மற்றும்
வறுமையை அது
குறிக்கும்.
9/12
குறிப்பு
மேற்கூறிய பட்டியல்
ஒரு சாராம்சம்
மட்டுமே. காரணம்
பல்லி விழுந்தால் ஏதோ
பலன் உண்டு என்பதை
குறிக்கும் வகையில்
நம் உடலில் 65-க்கும்
அதிகமான
உறுப்புகள் உள்ளது.
அதே போல் ஒருவரின்
பாலினத்தை
பொருத்தும் இது
மாறுபடும்.
10/12
பல்லி கத்துவது
பல்லி கத்துவதையும்
கூட இந்த வகையில்
கூறலாம். எந்த
திசையில் இருந்து
உங்களுக்கு சத்தம்
கேட்கிறது, அந்த
நாளின் நேரம், அந்த
வாரத்தின் நாள் போன்ற
சில
விஷயங்களையும்
நீங்கள் கருத
வேண்டும். அப்போது
தான் அதன் சரியான
அர்த்தம் புரியும்.
11/12
பரிகாரம்
பல்லி விழுவதால்
ஏற்படும்
தீமைகளுக்கு
பரிகாரம் உள்ளது என
ஏடுகள் கூறுகிறது.
அதற்கு நீங்கள் செய்ய
வேண்டியது உடனே
குளித்து விட்டு
கோவிலுக்கு செல்ல
வேண்டும். அப்படி
இல்லையென்றால்,
உங்கள் பூஜை
அறையில் விளக்கு
ஏற்றலாம்,
ம்ரித்யுன்ஜெய
மந்திரத்தை
ஜெபிக்கலாம்,
பஞ்சகவ்யா
உண்ணலாம்,
தங்கத்தை தானமாக
அளிக்கலாம்,
விளக்கெண்ணெய்
கொண்டு மண்
விளக்குகள் ஏற்றலாம்.
காஞ்சிபுரத்தில் உள்ள
வரதராஜ பெருமாள்
கோவிலில் தங்கம்
மற்றும் வெள்ளியில்
செய்யப்பட்ட பல்லி
உள்ளது. அதனுடன்
சூரியன் மற்றும்
சந்திரனின்
சித்திரத்தையும்
காணலாம். அந்த
பள்ளிகளை
தொடுவதால் நம்
மீதுள்ள தீய
தாக்கங்கள் மற்றும்
முன்னாள் மற்றும்
வருங்காலத்தில்
வரப்போகும் தோஷங்கள்
நீங்கும்.

[Technology update]iPhone-ல் அப்படி என்னதான் இருக்கு..?இன்று உலகத்தில் அதிகளவு பயன்படுத்தபடும் மொபைல் Android இருந்தாலும...
22/03/2015

[Technology update]

iPhone-ல் அப்படி என்னதான் இருக்கு..?

இன்று உலகத்தில் அதிகளவு பயன்படுத்தபடும் மொபைல் Android இருந்தாலும் ஐபோன் பாதுகாப்பில் மிஞ்ச எதுவும் இல்லை. நம்ம ஐபோன் பயன்படுத்துவோம் ஆனால் அதன் வேலைகள் என்ன? என்ன ? என்று தெரியாது இருந்தாலும் ஐபோன் பற்றி சில தகவல் உங்களுக்கு.

ஐபோன் சார்ஜ் - Charge:
உங்களுடைய ஐபோன் சார்ஜ் செய்யும் போது மிகவும் வேகமாக சார்ஜ் செய்வதுக்கு உங்களுடைய மொபைல் Air Plan Mode போட்டு சார்ஜ் செய்தால் மிகவும் வேகமாக சார்ஜ் செய்யும்.

Siri
சிறி என்பது உங்களுடைய மொபைல் நீங்கள் தொடாமல் குரல் மூலம் உங்களுடைய மொபைல் தேவைகளை நிறைவேற்ற உதவும். இது Home Button Long press பண்ணுவதன் மூலம் Activate ஆகும்.(முதலில் செட்டிங்ஸ் Siri on பண்ணி இருக்க வேண்டும்)

ஐபோன் என்றாலே அது பாதுகாப்புதான் இருந்தாலும் உங்களுடைய மொபைலில் i Cloud யில் Finder on செய்து இருந்தால் மொபைலை Restore செய்யக்கூடாது அவ்வாறு செய்தால் உங்களுடைய மொபைல் Lock ஆகிவிடும் ( உங்களுடைய Apple ID & Password தெரிஞ்சால் இந்த பிரச்சினை இல்லை ).

மியூசிக் - Music :
டிமேர் மூலம் உங்களுடைய ஐபோன் பாடல்கலை நிறுத்த முடியும்.

போட்டோ - Photo :
ஐபோன் போட்டோ எடுக்க உங்களுடைய மொபைல் உள்ள Volume keyum பயன்படுத்த முடியும்.

Screen Shot :
ஐபோனில் Settings அல்லது பாடல்கள் செல்லும்போது ஸ்க்ரீன் சாட் எடுக்க வேண்டும் என்றால் POWER ON + HOME press செய்தால் ஸ்க்ரீன் சாட் எடுக்கும்

Undo - அன்டு :
ஐபோன் ஒரு விடயத்தை Type செய்யும் போது எழுதிய விடயம் பிழையானால் உங்களுடைய மொபைல் அசைத்தால் முதல் செய்த Undo Option உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் சில இரகசியமான குறியீடுகள் :
01. IMEI Number | Code: * #06 #
02. Field Test | Code: *3001 #12345 #* + ‘Call
03. Call Barring | Status: * #33 # | Turn ON: *33*pin # | Turn OFF: #33*pin #
04. Call Waiting | Status: * #43 # | Enable: *43 # | Disable: #43 #
05. Call Forwarding | Status – All: * #21 # – Unreachable: * #62 # – When Busy: * #67 # | Disable All
Forwarding: # #002 # + ‘Call’
06. Outgoing Call Anonymity | Status: * #31 # + | Current Call: #31 -number + ‘Call’
07. Incoming Call Presentation | Status: * #30 # + ‘Call’
08. SMS Message Center Number | Check: * #5005*7672 # + ‘Call’
09. EFR Mode | Code: *3370 # + ‘Call’

Thank yOu

[ Sentimental sMs update ]பெற்றோரின் வேதனை.!எனக்கு தள்ளிப்போன  அந்நாள்உன் வருகையை உறுதிசெய்த பொன்நாள்..!உனக்கான எங்கள் க...
14/03/2015

[ Sentimental sMs update ]

பெற்றோரின் வேதனை.!

எனக்கு தள்ளிப்போன அந்நாள்
உன் வருகையை உறுதிசெய்த பொன்நாள்..!
உனக்கான எங்கள் கனவுகளை
இதய பெட்டிக்குள் நிறைத்துவைத்திருந்தோம்...!
நீ இப்பூவுகில் ஜனித்த நாள்
வார்த்தைகள் இல்லை அவ்வின்பத்தை வரையறுக்க..!
அன்று முதல் உன் ஆசை எங்களுடையதாய் மாற்றிக்கொண்டோம்..
உன் கனவை எங்கள் நினைவுகளாய் ஏற்றுக்கொண்டோம்...!
நீ சிரித்த முதல் சிரிப்பு
நீ கொடுத்த முதல் முத்தம் என
நீ செய்த முதல் செயல் யாவும்
எங்களின் பொக்கிஷமாய் பொதிந்துகிடக்கிறது எங்களுக்குள்...!
இரவு பகல் பார்த்ததில்லை
பாசத்தில் குறைவைத்ததில்லை...!
பட்டினியாய் கிடந்திருக்கிறோம் என்றும்
உன்னை பட்டினியாய் விட்டதில்லை...!
முடிச்சுவச்ச ஒத்த ரூபாயக்கூட மிச்சம் வைக்காம
கொடுத்திருக்கே உன் படிப்பிற்கு....!
கை பிடித்து நடந்த நீ காளையனாக
கன்னி ஒருவள் கைபிடித்துத் தர
எங்கள் கைகளை ஒதறிவிட்டு சென்றாய்....!!
அவள் ஒருவள் மட்டுமே உலகம் என்றாய்
இவ்வுலகை காட்டிய எங்களிடம்....!
முதுமை எங்களை பற்றிக்கொள்ள
முடியாமை எங்களை ஏளனம் செய்ய.....!
ஒரு வேளை சோற்றுக்கும்
சொர்ப்ப ஆசைக்கும் வழியில்லாமல் நாங்கள்....!
எங்கள் இளமையின் உழைப்பில் சேர்த்துவைத்த சொத்து நீ
இன்று எங்களுக்கு உரிமை இல்லை எங்கிறாய்...!
வலிக்காது என தெரியாமல் உதைத்தாய் உன் பிஞ்சு விரல்களால்
நான் அழுவதாய் நடித்தேன்...!
வலிக்கும் என் தெரிந்தே உதைக்கிறாய் இன்று
உண்மையிலேயே நான் அழுகிறேன் நடிக்கிறேன் எங்கிறாய்...!
முதுமையில் பிடி சோறு போடுவாய் என நினைத்தோம்
தள்ளாடும் நிலையிலும் எழுந்து நிற்க கைகளைக்கூட தர மறுக்கிறாய்....!
உன் முகத்தில் வெளிச்சத்தை மட்டுமே பார்த்த நாங்கள்
வாட்டத்தை பார்க்க மனமில்லை.....!
பெற்றோரை கைவிட்ட பிள்ளை எனும் பேரு உனக்கு வேண்டாம்...
புறம்தள்ளிவிட்டாய் புண்பட்ட மனதுடன் புறப்படுகிறோம்...
அங்கே நல்ல மனிதன் ஒருவர் கட்டியிருக்கிறார்
முதியோர் இல்லம் எனும் கூடு
அந்த கூட்டின் வாயில் திறந்திருக்கும் எங்களுக்காக...!!
மகனே எங்களின் கடைசீ ஆசை
நாங்கள் இறந்ததாய்செய்தி வந்தால்
ஒரு சொட்டு கண்ணீர் விடவேண்டாம்
அடக்கம் செய்ய மகனாகவாவது வருவாயா......???

25/02/2015

[ joke update ]

ஆசிரியர் : யானை,எறும்பு இதுல எது பெரியது.?

மாணவர் : அப்படி உடனே சொல்லிட முடியாது...யானை,எறும்போட பிறந்த தேதி சொல்லுங்க. . .

ஆசிரியர் : ??!!

[ amazing news update ]செவ்வாயிலேயே குடியிருக்கப் போகும் 3 இந்தியர்கள்.!செவ்வாய் கிரக ஒரு வழி பயணத்துக்கு தேர்வு செய்யப்...
19/02/2015

[ amazing news update ]

செவ்வாயிலேயே குடியிருக்கப் போகும் 3 இந்தியர்கள்.!

செவ்வாய் கிரக ஒரு வழி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட பட்டியலில் 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் இடம் பெற்றனர்.
செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் திட்டத்தை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி சுமார் 40 பேரை கொண்ட ஒரு கொலனியை அங்கு நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது.
நெதர்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமான ‘மார்ஸ் ஒன்’ அமைப்பு, இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளி பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணிகளை இந்த நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது.
இதற்கான அறிவிப்பு வெளியான உடனே, உலகம் முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் செவ்வாய் பயண திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். இதில் ஏராளமான இந்தியர்களும் அடக்கம்.
இது ஒரு வழி பயணம் ஆகும். செவ்வாய் கிரகத்துக்கு பத்திரமாக போய் சேர்ந்தால் அங்கு இருந்து திரும்பி வர முடியாது.
இந்த வினோத பயணத்திற்காக உலகம் முழுவதும் இருந்து விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் இருந்து 3 சுற்று சோதனைகள் நடத்தி, 50 ஆண்கள், 50 பெண்கள் கொண்ட 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவில் இருந்து 39 பேர், ஐரோப்பியர் 31, ஆசியாவில் இருந்து 16, ஆபிரிக்கா மற்றும் ஓசியானியாவில் இருந்து தலா 7 பேர் அடங்குவர்.
இந்த பட்டியலில் புளோரிடாவில் ஆய்வுக்கல்வி பயின்று வரும் தரண்ஜீத் சிங் (வயது 29), துபாயில் வசித்து வரும் ரித்திகா சிங் (29), கேரளாவை சேர்ந்த இளம்பெண் சாரதா பிரசாத் (19) ஆகிய 3 இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர்.
முன்னதாக 2–வது சுற்றின் முடிவில் 44 இந்தியர்கள் (17 பெண்கள்) உள்பட 660 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் மார்ஸ் ஒன் நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி நார்பர்ட் கிராப்ட் நடத்திய தனிப்பட்ட ஆன்லைன் நேர்காணலில் 100 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
இது குறித்து நார்பர்ட் கூறுகையில், ‘எவ்வளவு வலிமையான பங்கேற்பாளர்கள் இந்த நேர்காணலில் பங்கு பெற்றிருக்கிறார்கள்? உண்மையிலேயே நாங்கள் அசந்துபோனோம். இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்தது’ என்று கூறினார்.
தற்போது தேர்வு செய்யப்பட்டவர்களிடம் இன்னும் சில கடினமான சோதனைகள் நடத்தப்பட்டு இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும். அந்த பட்டியலில் இடம் பிடிப்போருக்கு 7 ஆண்டுகள் விண்வெளி பயிற்சி அளிக்கப்படும்.
பின்னர் 2024–ம் ஆண்டு முதல் 4 பேர் வீதம் அவர்கள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

[GK update]மனித மூளையின் வளர்‌ச்சிபிறக்கும் போது 340 கிராம்6வது மாதத்தில் 750 கிராம்1 வயதில் 970 கிராம்2 வயதில் 1150 கிர...
31/01/2015

[GK update]
மனித மூளையின் வளர்‌ச்சி

பிறக்கும் போது 340 கிராம்
6வது மாதத்தில் 750 கிராம்
1 வயதில் 970 கிராம்
2 வயதில் 1150 கிராம்
3 வயதில் 1200 கிராம்
6 வயதில் 1250 கிராம்
9 வயதில் 1300 கிராம்
12 வயதில் 1350 கிராம், 20 வயதில் 1400 கிராம்..

12 வயது முதல் 20 வயது வரை 8 ஆண்டுகள்..
ஆனால் மூளை 8 ஆண்டுகள் வரை 50 கிராமே வளர்கிறது..

அதனாலதான் டீன் ஏஜ்ல மூளை வேலை செய்ய மாட்டுதோ..?

Address

Thirumanur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ClicK Like ت posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category