08/09/2025
மக்கள் உயிரின் மீது அக்கறையில்லாத குடவாசல் தீயணைப்புத்துறை.
கடந்த ஒரு வாரங்களுக்கு முன்னதாக திருவாரூர் மாவட்டம், அபிவிருத்தீஸ்வரம்,பள்ளிவாசல் தெருவில் உள்ள ஒரு வீட்டு மாடியில் கதண்டு (எனும் உயிர் கொல்லி பூச்சி ) இருப்பதாக ஊராட்சி மன்ற அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் நேரில் வந்து ஆய்வு செய்தார்கள். அடுத்த நாள் காலையில் மறு ஆய்வு செய்யும்போது பூச்சி குறைவாக இருந்ததன் அடிப்படையில் ஓரிரு தினங்கள் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என முடிவுகள் எடுக்கப்பட்டது.
மீண்டும் வியாழக்கிழமை அன்று பூச்சி அதிகமாக இருப்பதால் உடனடியாக வந்து சரி செய்து தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சில அவசர வேலை இருப்பதால் நாளை வருவதாக தீயணைப்புத் துறையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்று வரை அதற்கான முன்னெடுப்பில் தயக்கமாகவே இருந்து வருகிறார்கள். அருகிலுள்ள வீடுகளிலும் இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. இதை SDPI கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக செய்யத் தவறினால் அடுத்த கட்டம் குறித்து விவாதித்து போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கதண்டு அடிப்பதாக கணக்கில் காட்டப்பட்ட ஊராட்சி மன்ற நிதி குறித்தும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்திருந்தோம். அதற்காக தயக்கமோ என என்ன தோன்றுகிறது.
என்றும் மக்கள் பணியில்
SDPI கட்சி
அபிவிருத்தீஸ்வரம் கிளை,
திருவாரூர் மாவட்டம்.