கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திருச்செங்கோடு

  • Home
  • India
  • Tiruchengodu
  • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திருச்செங்கோடு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  திருச்செங்கோடு KMDK offical page

*E.R.Eswaran Ex MLA (KMDK) General Secretary : மாதம் 4000 ரூபாய் கிடைக்கும் என்று வாக்களித்த வேலையில்லா இளைஞர்களுடைய எதி...
25/07/2026

*E.R.Eswaran Ex MLA (KMDK) General Secretary : மாதம் 4000 ரூபாய் கிடைக்கும் என்று வாக்களித்த வேலையில்லா இளைஞர்களுடைய எதிர்பார்ப்பை வரும் நிதிநிலை அறிக்கையில் அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.*

தமிழக வெற்றிக் கழகம் தன் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் 4000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதை நம்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்து திரு விஜய் அவர்களை முதலமைச்சராக ஆக்கியிருக்கிறார்கள். வேலையில்லாத இளைஞர்கள் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதை தடுக்கவும், வேலை தேடுவதற்கு தேவையான நிதியாகவும் அரசு கொடுக்கப் போகிற இந்த 4000 ரூபாய் பயன்படும். தமிழகத்தில் புதிய முதலீடுகள் எதிர்பார்த்த அளவில் வராத சூழலிலும், அரசு பணிகளில் புதிதாக ஆள் சேர்ப்பதற்கான முயற்சிகள் இல்லாத சூழலிலும் வேலையில்லாத இளைஞர்களுக்கு இந்த 4000 ரூபாய் மிகவும் உதவியாக இருக்கும். பல குடும்பங்களில் வேலை இல்லாத இளைஞர்கள் பெற்றோர்களிடத்தில் பணம் கேட்பதற்கு சங்கடப்பட்டு மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். வருமானம் இல்லாத இளைஞர்கள் தன்மானத்தோடு தமிழகத்தில் வாழ இது பெரும் உதவியாக இருக்கும். தேர்தலிலே கொடுக்கப்பட்ட வாக்குறுதியை தான் இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர்கள் ஒற்றுமைப்பட்டு முதலமைச்சரிடத்திலே கோரிக்கை வைப்பதற்கு முன்பாக அரசு இந்த திட்டத்தை அறிவித்து நிறைவேற்றினால் சங்கடங்கள் இல்லாமல் இருக்கும். ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கின்ற தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் முத்தாய்ப்பான திட்டமாக வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம்தோறும் 4000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டால் தேர்தலில் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த இளைஞர்கள் வரவேற்று மகிழ்வார்கள். நிதிநிலையை காரணம் காட்டி அரசு தவிர்க்காமல் இந்த திட்டத்தை தமிழகத்தின் எதிர்கால தலைமுறைக்காக செயல்படுத்த வேண்டும்.

24/07/2026

🇨🇬

24/07/2026

*தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்காக போராடும் மாணவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் அடக்கு முறையை கையாளக் கூடாது.!*

16/07/2026

🇨🇬

*E.R.Eswaran Ex MLA (KMDK) General Secretary : விவசாயிகளுக்கு மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற போராட்டத்தில் உயிர...
11/07/2026

*E.R.Eswaran Ex MLA (KMDK) General Secretary : விவசாயிகளுக்கு மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.*

1970 களில் விவசாயத்திற்கான மின் கட்டணம் ஏற்றப்பட்டதை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அப்போதைய அரசாங்கம் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டு 63 பேர் தமிழ்நாடு முழுவதும் காவல்துறையால் சுடப்பட்டார்கள். அதற்குப் பிறகு நடந்த பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் கட்டணமில்லா மின்சாரத்தை பயன்படுத்தி விவசாயத்தை செய்து வருகிறார்கள். இந்த வசதியால் மட்டும் தான் தமிழகத்தில் விவசாயம் தொடர்ந்து நடக்கின்றது. போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் நினைவு தூண்கள் அமைத்து அந்தந்த பகுதி விவசாயிகள் வருடம் தோறும் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட நாளில் நினைவஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

கடந்த காலங்களில் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க காரணமாக இருந்த, உயிர் நீத்த தியாகிகளுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றோம். தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுடைய வாழ்வாதாரத்திற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர்கள் அவர்கள். பல்வேறு அரசுகளிடம் கருணை அடிப்படையில் அரசு வேலை கோரிக்கை வைத்தும் அது நிறைவேறவில்லை.

தற்போதைய அரசு கரூரில் அரசியல் நிகழ்ச்சியில் உயிரிழந்த குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கியிருப்பதை பார்க்கின்றோம். அரசியல் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கலாம் என்றால் தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து விவசாயிகளின் குடும்பங்கள் வாழ்வதற்காக உயிர்த்தியாகம் செய்த தியாகிகளின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கக் கூடாதா? ஒவ்வொரு முறை மேடையில் பேசும்போதும் விவசாயிகளோடு உடனிருப்பேன் என்று பேசுகின்ற இன்றைய முதலமைச்சர் அவர்கள் கனிவோடு பரிசீலித்து விவசாய மின் கட்டண உயர்வுக்காக போராடி உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு கருணையோடு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க முன்வர வேண்டும்.

24/06/2026

தமிழ்நாடு அரசால் கடந்த ஆட்சியில் திருச்செங்கோட்டில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சொந்த கட்டிடம் அனுமதி வழங்கப்பட்டது. என்பது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுசெயலாளரும், திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. *ஈ.ஆர். ஈஸ்வரன் BE.,* அவர்களின் தொடர் முயற்சியின் பலனாகும். இத்திட்டம் சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டு, அதன் அடிப்படையிலேயே அரசின் ஒப்புதல் பெறப்பட்டது.

ஆட்சி மாற்றம் காரணமாக இத்திட்டத்தின் செயல்படுத்தும் பணிகள் தாமதமாகி தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்தத் திட்டத்தை தவெக அமைச்சரின் முயற்சியால் கொண்டு வந்தது போன்ற தவறான தகவல்களை பரப்புவது கண்டனத்திற்குரியது. மேலும், உண்மை நிலையை அறியாமல் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதும் பொறுப்பற்ற செயலாகும்.

🇨🇬

*E.R.Eswaran Ex MLA (KMDK) General Secretary : வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் இந்துக்களை ஒற்றுமைப்படுத்த ஜே.சி.டி.ப...
13/06/2026

*E.R.Eswaran Ex MLA (KMDK) General Secretary : வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் இந்துக்களை ஒற்றுமைப்படுத்த ஜே.சி.டி.பிரபாகர், வன்னியரசு போன்றோர் தூண்டுகிறார்கள்.*

*மத ரீதியான பிளவுகளுக்கு தமிழ்நாடு அரசே காரணமாகி விடக்கூடாது.*

சமீபத்தில் கிறிஸ்தவ மத போதகர்கள் கிறிஸ்தவர்கள் ஒற்றுமைக்காக நடத்திய கூட்டத்தில் மாண்புமிகு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், மாண்புமிகு அமைச்சர் வன்னியரசு, காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்தவர்கள் ஒற்றுமைப்பட்டால் சாதனை நிகழ்த்த முடியும் என்ற கோணத்தில் அவர்கள் உரையாற்றிய அந்த உரைகள் சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்துக்கள் மத்தியில் நாமும் ஒற்றுமைப்பட்டு ஆக வேண்டுமோ என்ற உணர்வை தூண்டி இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்துக்களும், இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் மதச்சார்பின்றி ஒற்றுமையாக வாழும் பொழுது இப்படிப்பட்ட நிகழ்வுகள் மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும்.

அரசியல் அமைப்பு சட்டத்தின் படி உறுதிமொழி எடுத்து மதச்சார்பின்மை கொள்கையை நிலைநிறுத்தி அனைவரையும் சமமாக எண்ண வேண்டிய அரசினுடைய சபாநாயகரும், அமைச்சருமே இப்படி மதம் சார்ந்து தூண்டுவது ஏற்புடையதல்ல. மதரீதியான வேறுபாடுகள் தமிழகத்தில் இருந்தாலும் கூட தமிழர்கள் என்ற ஒரு புள்ளியில் மொத்த தமிழர்களும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். அதனால்தான் வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக வாழுகின்ற இந்துக்கள் அணிசேராமல் அனைவரையும் அரவணைத்து வாழ்கிறார்கள். எந்த காரணத்தைக் கொண்டும் அரசு சார்ந்த பிரதிநிதிகளின் செயல்பாடுகள் மதச்சார்பின்மைக்கு எதிராக அமைந்து விடக்கூடாது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் மதம் சார்ந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்திய பின்பும் இந்த நிகழ்வுகள் நடந்திருக்கிறது என்றால் தெரிந்து நடக்கிறதா! தெரியாமல் நடக்கிறதா!

கலந்து கொண்டது மட்டுமில்லாமல் ஒரு மதத்திற்கு ஆதரவாக அரசு பிரதிநிதிகள் உரையாற்றி இருப்பதும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இனிவரும் காலத்தில் மிக கவனமாக அமைச்சர்கள் தங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் இந்துக்கள் ஒற்றுமைப்படுவதை தவிர்க்க முடியாது.

*E.R.Eswaran Ex MLA (KMDK) General Secretary : தமிழகத்தில் மாநில கட்சியாக உருவெடுப்பேன் என்று இயக்கம் கண்டிருக்கின்ற அண்...
06/06/2026

*E.R.Eswaran Ex MLA (KMDK) General Secretary : தமிழகத்தில் மாநில கட்சியாக உருவெடுப்பேன் என்று இயக்கம் கண்டிருக்கின்ற அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துகள்.*

உடனே ஆட்சியைப் பிடிப்பேன் என்று சொல்லாமல் அடுத்த பொது தேர்தல் என்ற இலக்கை நிர்ணயித்து கட்சியின் கட்டமைப்புகளை உருவாக்குகின்ற கடின உழைப்புக்கு தயாராக இருக்கின்ற உங்களுக்கு தங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துகள்.

05/06/2026

*05.06.2026 சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நடத்தப்பட்ட சாதிவாரி சர்வே நடத்துவதன் தேவை குறித்து அனைத்து கட்சி மற்றும் சமுதாய தலைவர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்த போது.!*
🇨🇬

*E.R.Eswaran Ex MLA (KMDK) General Secretary : முதலமைச்சர் விஜய் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாக சீர்கேடு ...
03/06/2026

*E.R.Eswaran Ex MLA (KMDK) General Secretary : முதலமைச்சர் விஜய் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாக சீர்கேடு மிகவும் ஆபத்தானது.*

திருச்சியில் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சராக திரு ஜோசப் விஜய் அவர்கள் முதல் முறையாக மக்களை சந்தித்து பேசியிருக்கிறார். உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு என்ன சொல்லப் போகிறார் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பில் தொலைக்காட்சி முன்பும், அலைபேசியின் முன்பும் அமர்ந்திருந்தார்கள்.

நாங்களும் உன்னிப்பாக முதலமைச்சரின் உரையை உற்று நோக்கினோம் ஏமாற்றம்தான் மிஞ்சியிருந்தது. அவருடைய பேச்சுக்களில் முதலமைச்சராக எதார்த்தத்தை எதிர்பார்க்கிறோம். அந்த உரைக்குப் பின்பு நாங்கள் வைக்கும் ஆலோசனை, முதலமைச்சர் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். நிர்வாக சீர்கேடு புரையோடி போய்விட்டால் திரும்ப தமிழ்நாட்டை மீட்க முடியாது.

தாமதமில்லாமல் முதலமைச்சர் அமைச்சர் சபை கூட்டத்தை கூட்ட வேண்டும். கூட்டணி அமைச்சர் சபையாக இருக்கும் பொழுது இது கண்டிப்பான ஒன்றாக மாறுகிறது. விரைவில் துவங்க இருக்கின்ற சட்டசபை கூட்டத் தொடரில் தமிழ்நாட்டின் தொடர் வளர்ச்சிக்காக பல்வேறு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டி இருப்பதால் அமைச்சர் சபையை கூட்டி ஆலோசிக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது. ஆளுநர் உரையிலும் எதிர்கட்சிகளுக்கு எதிரான கருத்துகளையே அரசியல் கொள்கையாக அறிவித்து விட முடியாது.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பல திறமையான அதிகாரிகளை நியமித்து இருப்பதாக அறிவித்திருக்கிறீர்கள் ஆனால் அதை திறமையாக செய்யக்கூடிய பல அதிகாரிகள் இன்னும் உங்கள் ஆட்சி வட்டத்திற்கு வெளியே இருக்கிறார்கள்.

விவசாய கடன் தள்ளுபடி இப்போது அறிவிக்காமலேயே இருந்திருக்கலாம். இன்னும் ஆறு மாதம் கழித்து கூட செய்திருக்கலாம். ஆதரவாக இருந்த விவசாயிகளை இவ்வளவு விரைவாக அரசுக்கு எதிராக திருப்பியிருக்க வேண்டாம். இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு திருச்சியில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள் ஆனால் உங்களுடைய உரை விவசாயிகளுக்கு ஆறுதலாக இல்லை. இப்போது அறிவித்த கடன் தள்ளுபடியை ரத்து செய்து விட்டு கால அவகாசம் எடுத்து விவசாயிகளுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுங்கள்.

தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் வேதனை அடைந்துள்ளார்கள். அதை திறம்பட கையாண்ட அதே அதிகாரிகள் தான் இன்னும் இருக்கிறார்கள். அதிகாரத்தால் மட்டுமே அதிகாரிகளிடம் வேலை வாங்கி விட முடியாது. அதிகாரிகள் சொல்வதை காது கொடுத்து கேட்டு அதற்கு தீர்வை காண வேண்டும்.

டெண்டர்களில் லஞ்சம் இல்லாமல் ஒப்பந்தக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை வரவேற்கின்றோம். உத்தரவு மட்டுமே அதை சாதித்து விடாது. அதை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் விலை பட்டியலில் 15 சதவீதம் குறைக்க வேண்டும். இதை செய்தால் எந்த ஒரு ஒப்பந்தக்காரர்களும் லஞ்சம் கொடுக்க முன்வர மாட்டார்கள்.

வீடுகள் கட்டுவதற்கு வரைபட ஒப்புதல் லஞ்சம் இல்லாமல் நடக்கும் என்ற அறிவிப்பை வரவேற்கின்றோம். அறிவிப்பு மட்டுமே அதை சாதிக்காது. வீடு கட்டுவோர் விதிப்படிதான் கட்ட முடியும் என்ற உணர்வை அவர்களுக்கு உருவாக்க வேண்டும். அதை கண்காணிக்கின்ற பொறியாளர்கள் திறம்பட செயல்பட வேண்டும்.

மணல், கல்குவாரி விஷயங்களில் அனுமதியை தாண்டி எடுக்கக் கூடாது என்ற கனிம வளம் காக்கக்கூடிய கண்டிப்பான உத்தரவை வரவேற்கின்றோம். அதே சமயத்தில் கட்டுமானங்களுக்கு தேவையான மணல், ஜல்லி தட்டுப்பாடு வந்து விடக்கூடாது. மிக கவனமாக இதை கையாள வேண்டும்.

பொது இடங்களில் மக்களுக்கு தொந்தரவு இருக்கின்ற மதுபான கடைகளை மூடும் அறிவிப்பை வரவேற்கின்றோம். அதே சமயத்தில் வேலை இழந்த டாஸ்மார்க் ஊழியர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்தாக வேண்டும். டாஸ்மார்க் ஊழியர்களின் சம்பளம், கடை வாடகை, உடையும் பாட்டில்களுக்கான இழப்பீடு ஆகியவற்றை கோரி இருக்கின்ற ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வேண்டும். மனமகிழ் மன்றங்களில் அளவில்லாத மது பிரியர்கள் வரிசை கட்டி நிற்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அதை அறிவிக்கும் பொழுது தமிழ்நாடு முழுவதும் பல தலைமுறைகளாக இயக்கிக் கொண்டிருக்கின்ற தனியார் பேருந்து நிறுத்தப்படுகின்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் என்ற நடைமுறையை தனியார் பேருந்துக்கும் அமல்படுத்தினால் தான் பெண்களுக்கு வசதியாக இருக்கும். கட்டணத்திற்கான தொகையை அரசு பேருந்து நிறுவனத்திற்கு திருப்பித் தருவது போலவே தனியார் பேருந்து நிறுவனத்திற்கும் திருப்பி தந்தால் தான் நடைமுறை சாத்தியமாக மாறும்.

திருச்சியில் பேசும் பொழுது கோட் அணிவதை பற்றி நம்மைப் போல சாமானியர்கள் கோட் அணிய கூடாதா என்று கேட்டீர்கள். எல்லா சாமானியனுக்கும் தாங்களும் தனி விமானத்தில் முதலமைச்சரை போல பயணிக்க முடியுமா என்ற அந்த ஏக்க பெருமூச்சு தங்களுக்கு எட்டவில்லையா.

🇨🇬 #தவெகா

Address

Tiruchengodu

Alerts

Be the first to know and let us send you an email when கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திருச்செங்கோடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share