31/08/2025
TNTJ திருச்சி மாவட்டம் நாகமங்கலம் கிளை சார்பாக (31/08/25) அன்று மாலை நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் நிறேவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
*அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு*
1. இந்திய ஏற்றுமதி பொருளுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50% விதியினால் தூத்துக்குடியின் இறால் ஏற்றுமதியும் , திருப்பூரின் ஆடை ஏற்றுமதியும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன, இதை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இதனால் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது வாய்ச்சவடால் மட்டும் விடும் மோடியின் அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்
*NO SIR_நம்பிக்கையளிக்கும் சுப்ரீம் கோர்ட்*
2. Special Intensive Revision (SIR) மூலம், பிஹாரில் சுமார் 65 இலட்சம் பேர் வாக்காளர்கள் பட்டியலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நடந்து வரும் வழக்கில், தேர்தல் ஆணையத்திற்கு குட்டு வைத்து ஆதார் கார்ட்டையும் ஒரு ஆவணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டலை இந்த கூட்டத்தின் வாயிலாக வரவேற்கிறோம்
*இட ஒதுக்கீடு கோரிக்கை*
3.*இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் எனும் கோரிக்கையை பன்னெடுங்காலமாக இஸ்லாமியரகள் வைத்து வருகின்றனர், சென்ற தேர்தல் அறிக்கையிலும் , தேர்தல் பிரச்சாரத்தின் போதும் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக வாக்குறுதி கொடுத்தார், தான் சொன்ன வாக்குறுதியை காக்கும் வகையில் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் அவர்களை இந்த கூட்டத்தின்
வாயிலாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.*
*பசியால் துடிக்கும் காசா மக்கள்*
4. *பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட கடும் பஞ்சத்தில் சிக்கி உள்ளதாக ஐநா சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது வரும் நாட்களில் நிலைமை இன்னும் கடும் மோசாமாகும் என எச்சரித்துள்ளது, இந்திய அரசு பசியால் இறக்கும் பாலஸ்தீன குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக உரிய அழுத்தத்தை உலக அரங்கில் தர வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக வலியுறுத்துகிறோம்.*
*5.திருச்சி மாவட்டம் நாகமங்கலம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியிலே பல நாட்களாக இடத்திற்கான பட்டா வழங்கப்படாமலேயே இருக்கிறது. பல முறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் இன்னும்