03/09/2026
💥திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய சரகத்தில் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்ட வழக்கில் இருவர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அதே வழக்கில் மேலும் ஒருவர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது – பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பு.
திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட வி.கே.புரம், டாணா பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் மைதீன்ஹனிபா (21) என்பவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மேற்படி நபர் கொலை, அடிதடி மற்றும் குற்றமுறு மிரட்டல் போன்ற தொடர் சட்டவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், வி.கே.புரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. பிரபு பாஸ்கர் அவர்கள், மேற்படி எதிரி மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் (Act 14/1982)-ன் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பிறப்பித்த தடுப்புக் காவல் உத்தரவின்படி, மேற்படி எதிரி இன்று (03.09.2026) தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் (Act 14/1982)-ன் கீழ் தடுப்புக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தாண்டில் இதுவரை மொத்தம் 101 நபர்கள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.