Tirunelveli District Police

Tirunelveli District Police Tirunelveli District Police Official FB page. IN PUBLIC SERVICE. Headed by Dr. V. Prassanna Kumar, IPS
(1)

03/06/2026

🚨 திருநெல்வேலி மாவட்ட காவல்துறை 🚨

👮‍♂️ குழந்தையை மீட்ட Highway Patrol! 🚔

🚌 மானூர் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை பெற்றோர் கவனக்குறைவால் பேருந்திலேயே விட்டுச் சென்றனர்.

📞 தகவல் கிடைத்தவுடன், மானூர் காவல்துறையும் Highway Patrol காவல்துறையும் உடனடியாக விரைந்து செயல்பட்டு, செட்டிகுறிச்சி பகுதியில் பேருந்தை நிறுத்தி சிறுமியை பாதுகாப்பாக மீட்டனர்.

❤️ துரித நடவடிக்கை – பாதுகாப்பான மீட்பு!

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.











📞 அவசர உதவிக்கு : 100 / 0462-25622500
📱 காவல் உதவி (Kaaval Uthavi) App-ஐ பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.

🎯 திருநெல்வேலி மாவட்ட காவல்துறை 🔖 நடை ரோந்து (FOOT PATROL)🚨 தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார்...
03/06/2026

🎯 திருநெல்வேலி மாவட்ட காவல்துறை

🔖 நடை ரோந்து (FOOT PATROL)

🚨 தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) திரு. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்களின் உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) டாக்டர் V. பிரசண்ண குமார், IPS., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல்துறையினர், திருநெல்வேலி மாவட்டத்தின், அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் மக்களைத் தேடி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.













🚨திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 03.06.2026 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிக...
03/06/2026

🚨திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 03.06.2026 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.

🚨 அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.




🚨 திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்.🚨 திருநெல்வேலி மாவட்ட க...
03/06/2026

🚨 திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் நடத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்.

🚨 திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (03.06.2026) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.V.பிரசண்ண குமார்., IPS., அவர்கள் 19 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.











#குறைதீர்ப்புக்கூட்டம்
#திருநெல்வேலிகாவல்துறை
#மக்கள்சேவை
#பொதுமக்கள்குறைதீர்ப்பு
#தமிழ்நாடுகாவல்துறை

03/06/2026

🚨🚔 திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை 🚔🚨

📍 பணகுடி அருகே அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 350 கிலோ புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த நபர் கைது.

👮‍♂️ பணகுடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. அனிஸ் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, வள்ளியம்மாள் புரத்தைச் சேர்ந்த சுமன் (25) என்பவர் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து பார்த்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

🔍 இதையடுத்து, அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அவர் வழங்கிய தகவலின் பேரில் மேலும் சோதனை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவர் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து மொத்தம் சுமார் 350 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

⚖️ மேற்படி சம்பவம் குறித்து, பழவூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுரேஷ்குமார் அவர்கள் (பொறுப்பு பணகுடி காவல் நிலையம்) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சுமனை இன்று கைது செய்தார்.

📦 மேலும் அவரிடம் இருந்து சுமார் 350 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

#திருநெல்வேலி_மாவட்ட_காவல்துறை #பணகுடி_காவல்நிலையம் #புகையிலை_பொருட்கள்_பறிமுதல் #காவல்துறை_அதிரடி 🚔🚨

02/06/2026

TDP NEWS
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் 02.06.2026 முக்கிய செய்திகள்.





🚨திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 02.06.2026 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிக...
02/06/2026

🚨திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 02.06.2026 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.

🚨 அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.




02/06/2026

பணகுடி அருகே வயர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது.

பணகுடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த 30.05.2026 அன்று, கேசவனேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(41) தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் காப்பர் வயர் திருடு போனதாக பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திருமதி. சோபியா அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வடலி விளையைச் சேர்ந்த ஆல்வின் (27) என்பவர் காப்பர் ஒயரை திருடி சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள் இன்று (02.06.2026) ஆல்வினை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.




















02/06/2026

திருநெல்வேலி மாவட்டத்தில், 6 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000/- அபராதம் விதிப்பு.

கடந்த 2024-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சேவியர் என்ற பூம்பூம் சேவியர் (57) என்பவர் 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அப்போதைய வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. C.S. சாந்தி புலன் விசாரணை மேற்கொண்டு, எதிரியை கைது செய்தார்.

புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி திரு. சுரேஷ் குமார் அவர்களால் இன்று (02.06.2026) குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000/- அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50,000/- நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. M.சண்முகம் (CWC) அவர்கள், வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்கள் மற்றும் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தி, வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. C.S.சாந்தி (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) மற்றும் வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் திருமதி. மாலதி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் திருமதி. உஷா அவர்களையும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.V. பிரசண்ண குமார்,IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 11 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடத்தக்க வகையில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 2 குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.












02/06/2026

🚨 மக்களின் நண்பனாக... வெளிப்படையான பணியில்

🔖 ​பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடும், மக்களின் நண்பனாக, பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையிலும் எந்தவித ஒழிவு மறைவின்றி திருநெல்வேலி மாவட்ட காவல் துறை என்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது!



#மக்களின்_நண்பன்










#தமிழ்நாடு_காவல்துறை

Address

Tirunelveli

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tirunelveli District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tirunelveli District Police:

Share