காசி லெப்பை

காசி லெப்பை Say Truth Forver and Fight for Justice

20/08/2026

பிஜேபி அரசாங்கத்தை ஒருபோதும் இந்து அரசாங்கமாக கருதாதீர்கள்,அது அவர்களின் மார்க்கெட்டிங் உத்தி மட்டுமே.
இந்துக்களுக்காக அவர்கள் எதையும் செய்வதில்லை...

- யதி நரசிங்கானந்த் சரஸ்வதி,
தலைமைப் பூசாரி, தாஸ்னா தேவி கோவில், காசியாபாத், உத்தரப் பிரதேசம்.

ஜூலை 20 அன்று நடைபெற்ற CJP நாடாளுமன்ற முற்றுகைப் போராட்ட வீடியோக்களில் காணப்பட்ட பல பெண்களையும் சிறுமிகளையும், சங் பரிவா...
06/08/2026

ஜூலை 20 அன்று நடைபெற்ற CJP நாடாளுமன்ற முற்றுகைப் போராட்ட வீடியோக்களில் காணப்பட்ட பல பெண்களையும் சிறுமிகளையும், சங் பரிவார் அமைப்பினர் இணையத்தில் தொடர்ச்சியாகக் கடுமையாகத் தாக்கி வருகிறார்கள்...

அவர்களது பெயர்கள், புகைப்படங்கள், சமூக ஊடகக் கணக்குகள் மற்றும் வீட்டு முகவரிகள் வரை இணையத்தில் பகிரப்பட்டன. இதன் விளைவாக, அவர்களுள் சிலர் கொலை/பாலியல் மிரட்டல்கள், ஆபாச வசவுகள், காவல்துறை வழக்குகள், வேலை இழப்பு மற்றும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கச் சொல்லி வரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்...

இதில் குறிப்பிடத்தக்க ஒரு சம்பவம் 15 வயதான ருசிகா சிங்கினுடையது.
பிரதமர் மோடிக்கு எதிராக ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகச் சித்தரிக்கப்பட்டு, இவர் மீது நொய்டாவில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டது. சமூக ஊடகங்கள் மூலம் கண்டறியப்பட்ட அவரது வீட்டு முகவரியே அந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது...

போராட்டத்தின் போது தன்னை வசைபாடியவர்களை மன்னிப்பதாகப் பின்னர் மோடி கூறியபோதிலும், போராட்ட வீடியோக்களில் காணப்பட்ட பெண்களுக்கு எதிரான இந்த இணையவழித் தாக்குதல்கள் மோடியின் மறைமுக ஆதரவுடனேயே தொடர்ந்து நடைபெறுகின்றன...

இந்தச் சர்ச்சையோடு தொடர்புடைய சில வீடியோக்களைப் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரவி நேகி பகிர்ந்திருந்தார்...

வாரணாசியில் நடந்த குடும்ப வன்முறை தொடர்பான, ரத்தம் சொட்டும் ஒரு சிறுமியின் பழைய வீடியோவும் அதில் அடங்கும். 'நியூஸ்லாண்ட்ரி' (Newslaundry) அறிக்கையின்படி, இந்தப் பழைய வீடியோ போராட்டச் சூழலோடு தவறாகத் தொடர்புபடுத்தப்பட்டதுடன், அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் அச்சிறுமியைத் தண்டிக்க வேண்டும் என்றும் பலர் பதிவிட்டு வந்தனர்.

வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டத்தில் பேசியதைத் தொடர்ந்து காசியாபாத்தைச் சேர்ந்த நிஷா என்ற மற்றொரு பெண்ணும் குறிவைக்கப்பட்டார்.

அவரது பேச்சு தவறானது அல்ல என்றபோதிலும், அவர் பிரதமரை வசைபாடியதாகச் சமூக ஊடகக் கணக்குகள் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பின. மேலும், வீட்டு உரிமையாளர் அவரை வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார் என்றொரு போலிப் பிரச்சாரமும் செய்யப்பட்டது; ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறுமாறு உரிமையாளர் கேட்டுக்கொண்டதாக அவர் 'நியூஸ்லாண்ட்ரி'யிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதமரின் நிகழ்ச்சி குறித்தும், போராட்டம் நடந்த இடத்தில் காவல்துறை மற்றும் அதிரடிப் படை (RAF) குவிக்கப்பட்டது குறித்தும் சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காகத் தனக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள் வந்ததாக 23 வயதான யோகா பயிற்சியாளர் ஷ்ரத்தா சிங் 'நியூஸ்லாண்ட்ரி'யிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் தனக்கு வாடிக்கையாளர்கள் இல்லாமல் போய்விட்டதாகவும், வீட்டை விட்டு வெளியேறவே பயமாக இருப்பதாகவும், தனது எதிர்காலமே முடிந்துவிட்டது போல் தோன்றுவதாகவும் அவர் வேதனையுடன் கூறினார். அவரது யோகா வீடியோக்களுக்குக் கீழேயும் அருவருப்பான கருத்துகள் பதிவிடப்பட்டன.

இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே... மோடியும் அமித் ஷாவும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகிறார்கள்... மனிதநேயமற்ற இந்தச் சங்கி பாசிசத்தை அதிகாரத்திலிருந்து தூக்கி எறியாதவரை, புதிய தலைமுறைக்கு விடிவுகாலம் பிறக்காது...

Jayarajan C N

06/08/2026
19/07/2026

| திருவொற்றியூரில் மாடுகளை இறைச்சிக்காக பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டிய பாரத் முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிவாஜியை கைது செய்ய வலியுறுத்தி மாடு, ஆடு இறைச்சிக் கடை வியாபாரிகள் சாலை மறியல்.

இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் ஒன்று கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

| |

குடிமக்கள் அரசாங்கத்தின் அடிமைகள் அல்லர்; காவல்துறை அரசியல் எஜமானர்களை விடுத்து  அரசியலமைப்பிற்கே சேவை செய்ய வேண்டும்!SD...
03/07/2026

குடிமக்கள் அரசாங்கத்தின் அடிமைகள் அல்லர்; காவல்துறை அரசியல் எஜமானர்களை விடுத்து அரசியலமைப்பிற்கே சேவை செய்ய வேண்டும்!

SDPI மகாராஷ்டிர மாநில பொதுச் செயலாளர் சயீத் அகமது அப்துல் வாஹித் சவுத்ரிக்கு எதிராக மகாராஷ்டிர அரசு பிறப்பித்திருந்த வெளியேற்றல் (Externment) உத்தரவை பம்பாய் உயர் நீதிமன்றம் ரத்து செய்திருப்பது, அரசியலமைப்புக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும்.

சிஏஏ (CAA) எதிர்ப்புப் போராட்டம், ஞானவாபி மசூதி விவகாரம் உள்ளிட்ட முக்கிய பொதுப் பிரச்சினைகளில் அவர் ஜனநாயக ரீதியில் தீவிரமாகப் போராடினார் என்பதைக் காரணியாகக் கொண்டு, ஓராண்டு காலத்திற்கு அவர் மும்பைக்குள் நுழையக் கூடாது என அந்தத் தன்னிச்சையான உத்தரவு தடை விதிக்க முயன்றது.

அரசு கொள்கைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராடுவதும் முழக்கமிடுவதும் அரசியலமைப்பின் 19 மற்றும் 21-வது பிரிவுகளின் கீழ் பாதுகாக்கப்பட்டவை என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. குடிமக்கள் "இந்திய அரசாங்கத்தின் அடிமைகள் அல்லர்" என்றும், காவல் அதிகாரிகள் பொது ஊழியர்களே தவிர, பிரதமருக்கோ அல்லது முதலமைச்சருக்கோ ஊழியர்கள் அல்லர் என்றும் நீதிபதி மாதவ் ஜாம்தார் குறிப்பிட்டிருப்பது, அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு வலுவான எச்சரிக்கையாகும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். தங்களின் அரசியலமைப்பு ரீதியிலான மாற்றுக்கருத்து தெரிவிக்கும் உரிமையைப் பயன்படுத்தும் அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்.

- வழக்கறிஞர் அசார் தம்போலி
மாநிலத் தலைவர்,
SDPI, மகாராஷ்டிரா.

26/06/2026

| “சிறுபான்மை மக்களின் உரிமையை பாதுகாப்பதில் தவெக அரசு கோட்டை விட்டுள்ளது.. 12 மணிக்கு கேக் வெட்டுபவருக்கு இந்த வழக்கு பத்தி தெரியுமா?”

இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி

“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”------------------------------------ முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. ஓட்டு அர...
25/06/2026

“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”
------------------------------------
முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது.
ஓட்டு அரசியலின் மீது நம்பிக்கையோ…… மரியாதையோ இல்லை எனக்கு.
ஆனால் எனக்கு இல்லை என்பதற்காக அரிதான பூக்கள் பூக்காமலா இருக்கும் அங்கு? அப்படிப்பட்ட ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங்.
வி.பி.சிங் 1931 ல் பிறந்தார்.
1980 ல் உ.பி.முதல்வரானார்.
1984 ல் மத்திய நிதியமைச்சரானார்.
பிற்பாடு ராணுவ அமைச்சரானார்.
போபர்ஸ் காந்தியால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
1989 ல் பிரதமரானார்.
1990 ல் ஆட்சியை இழந்தார்.
2008 ல் இறந்தார்.
என வெறுமனே புள்ளிவிவரங்களுக்குள் புதைத்துவிடக் கூடிய வாழ்க்கையா அவருடையது?
91 ஆம் ஆண்டு புது தில்லி ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். எதேச்சையாக எதிரில் நிற்கும் ரயில்களைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி.
பெரிய பெரிய கொட்டை எழுத்துக்களில்

“விபி.சிங்கைக் கொல்வோம் …”
“கொல்பவர்களுக்குப் பரிசு 1 லட்சம் …”

என வெள்ளை நிறத்தில் வண்டி முழுவதும் எழுதிக் குவிக்கப்பட்டிருந்தது.

அந்த வேளையில்……
அதை எழுதியவர்களின் அறியாமையை விடவும்…… அதை ஆறு மாதங்களாகியும் அழிக்காமல் விட்டிருந்த அதிகார வர்க்கத்தின் வக்கிரம்தான் என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.
தமிழகக் கட்சிகளுக்குள் எவ்வளவுதான் குடுமிபிடி சண்டை இருந்தாலும்……
ஒரு ஆளுங்கட்சித் தலைவரையோ……
ஒரு எதிர்க்கட்சித் தலைவரையோ தரக்குறைவாக விமர்சித்து எழுதியிருந்தால் அதை இரவோடு இரவாக போலிசாரே அழித்துவிடுவார்கள்.

ஆனால் வி.பி.சிங் அவர்கள் ஆட்சியை இழந்து ஆறுமாதமாகியும் அப்படியே அதை அழிக்காமல் விட்டிருக்கிறார்கள் என்றால் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்.
ஒரே ஒரு காரணம்தான்.
அது: மண்டல் கமிஷன்.
(வடக்கு எதிலும் நம்மை விட ஸ்லோ பிக்கப்தானே……)
ஆண்டாண்டு காலமாக தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்த பதவிகளும், பெருமைகளும் இந்தப் “பாழாய்ப் போன” மண்டலால் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டி வந்துவிட்டதே என்கிற எரிச்சல்……
மனுதர்மத்தின் பேரால் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு
மண்டல்தர்மத்தின் மூலம் கல்விக்கூடங்களின் கதவு திறக்கப்படுகிறதே என்கிற ஆத்திரம்……
இவை எல்லாம்தான் அவர்களை அப்படி எழுத வைத்திருக்கிறது.
இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது வி.பி.சிங்கின் அந்த வரிகள் :

மஸ்ஜித் பிரச்சனையை முன்னிருத்தியவர்களை
மண்டலால் கவிழ்த்துவிட்டாரே என்கிற ஆத்திரம் தலைக்கேற அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு வெளியில் வருகிறார் அடல் பிகாரி.
அடுத்து வி.பி.சிங்கை நோக்கி நீளுகின்றன பத்திரிக்கையாளர்களின் மைக்குகள்.
“என்ன…… இவ்வளவு மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறீர்களே……?” என்கிறார்கள் பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சியினரும்.
“ஆம்…… நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்.
ஆனால்……
பலகோடி பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக வந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசியலின் நிகழ்ச்சி நிரலில் வைத்த பிற்பாடு.”
(Yes. I am defeated.
But Mandal is in Agenda.)
என்று வெகு நிதானமாக தெரிவித்தபடி இறங்கிச் செல்கிறார் வி.பி.சிங்.
ஆம். அதுதான் நிதர்சனமான உண்மை.
தங்களது இந்திரா காந்தியின் காலத்தில் கண்டுகொள்ளவே படாத மண்டல் குழுவின் பரிந்துரைகளை……
தங்களது ராஜீவ் காந்தியின் காலத்தில் குப்பைக் கூடையில் வீசப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைகளை……
தங்களது நரசிம்மராவ் காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டது என்றால் அதற்குக் காரணம் விஸ்வநாத் பிரதாப் சிங்தான்.
அவ்வளவு ஏன்……
பா.ஜ.க.வின் கட்சித் தலைமையில் கூட பிற்படுத்தப்பட்டவர்களைக் கணக்குக் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றால் அதற்கும் விஸ்வநாத் பிரதாப் சிங்தான் காரணம்.
நேரு யுகத்தில் நேரடி அரசியலில் நுழைந்தாலும்
நேரு பரம்பரை செய்யத் தவறியதை
செய்யத் துணியாததை செய்து காட்டியவர்தான் வி.பி.சிங்.
ஆனால் வி.பி.சிங்கை வெறுமனே இட ஒதுக்கீட்டுக்கான ஆளாக மட்டும் ஒதுக்கிவிடுவதில் ஒப்புதலில்லை எனக்கு.
எப்படிப் பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சுருக்கிக்காட்டி சுகம் காணுகிறார்களோ சிலர் அப்படி.
பிரதமர் பதவியை விட்டு விலகிய பின்பு அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படிக் காட்டவில்லை நமக்கு.
புற்று நோயோடு போராடியபடியும்……
வாரத்தில் மூன்று நாட்கள் சிறுநீரகத்துக்கான டயாலிசிஸ் செய்தபடியும்……
டெல்லி குடிசைப் பகுதி மக்கள்…… ரிக்க்ஷா இழுப்பவர்கள்…… வாழ்வுரிமைக்காக அவர் நடத்திய போராட்டங்கள் ஏராளம்.
தனது ஒத்துழைக்காத உடலோடு ஒருபுறம் போராடிக் கொண்டே மறுபுறம் தலித்துகள்……
நிலமற்ற தொழிலாளர்கள்……
“நலத்”திட்டங்களின் பேரால் தங்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்……
என எண்ணற்ற விளிம்புநிலை மக்களுக்காக தன் பங்களிப்பை அளித்து வந்தார்.
ஆனால்…… அவையெல்லாம் வட இந்தியப் பத்திரிக்கைகளின் பதினாறாம் பக்கச் செய்தியாகக் கூட இடம் பெறவில்லை.
அவர் நம்மிடமிருந்து விடை பெற்ற அன்று மும்பையில் நடந்த துயரமான துப்பாக்கிச் சூடுகளுக்கும், குண்டுவெடிப்புகளுக்கும் கூட மனதார நன்றி சொல்லியிருப்பார்கள் வடபுலத்து ஊடகவியலாளர்கள்.
எப்படியோ இந்தச் செய்திகளால் அந்த மனிதனது மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டதே என்று.
கமண்டலங்களின் கதையை மண்டலால் முடிவுக்குக் கொண்டு வந்தவன் மீது ஆத்திரம் இல்லாமலா இருக்கும்?
இவை எல்லாவற்றை விடவும் ராஜகுடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும்……
பிரதமர் பதவியையே வகித்திருந்தாலும்……
இன்றைய இந்திய அரசியல் அமைப்பு முறை அவருக்குள் ஏற்படுத்திய ஏமாற்றமும்…… அதிருப்தியும்……
அவரை “நான் மாவோயிஸ்ட் ஆக விரும்புகிறேன்” என்று பிரகடனப்படுத்தும் அளவிற்குக் கொண்டு சென்றது.
ஆம். அதனை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால்……
“ உயர் தொழில் நுட்ப நகரங்களின் பேராலும்…… சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பேராலும்…… லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஒவ்வொரு முதல்வரும் அள்ளி வீசுகிறார்கள்.

ஒவ்வொரு தொழில் அதிபரும் தனது பொருளுக்கான விலையாக அரசு இவ்வளவு தந்தாக வேண்டும் என அரசுக்கு ஆணையிடுகிறார்கள்.
ஆனால்…… “உனது விளைபொருள்களுக்கான விலையை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என்று விவசாயிகளிடம் ஆணை பிறப்பிக்கிறது அரசாங்கம்.
இந்த மக்களின் குரலுக்கு நீங்கள் செவிமடுக்க மறுத்தால் நாளை அவர்கள் ஆயுதம் ஏந்துவதை எவராலும் தடுக்க முடியாது. உண்மையில் நான் மாவோயிஸ்ட் ஆகவே விரும்புகிறேன்.
ஆனால் அதற்கு என் உடல் நிலை மட்டும்தான் தடையாக இருக்கிறது.”
உண்மைதான்.
‘பொருளாதாரச் சீரழிவு என்கிற எரிமலையின் மீதுதான் உட்கார்ந்து கொண்டிருக்கிறது இந்தியா.’
சாதீய ஏற்றதாழ்வுகளும்
மதங்களின் மடைமையும்
பொருளாதாரப் பாகுபாடுகளும்
அதன் சீற்றத்தைக் கூட்டுமேயன்றி
குறைக்கப் போவதில்லை.
எரிமலையற்ற வாழ்க்கைதான் அந்த எளிய மனிதனின் கனவு.

பாதியில் அறுபட்ட அக்கனவின் மீதியை நனவாக்குவது நம் கைகளில்தான் இருக்கிறது.

---------- ----------
எழுத்தாளர் பாமரன்.
---------- ----------

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, அதன் தலைவர் மோகன...
19/06/2026

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 100-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, அதன் தலைவர் மோகன் பகவத்திற்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினார்.

அதில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டிற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அந்த அமைப்பைச் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அமைப்பின் நிதி ஆதாரங்கள், செலவுகள், நிர்வாகிகள், வரி விவரங்கள் மற்றும் அதன் கட்டமைப்பு ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த மோகன் பகவத், "இந்து மதம் என்பது பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பா?" என்று கேள்வி எழுப்பினார். அரசாங்கத்தின் நிதியுதவி (மான்யம்) பெறும் அமைப்புகள் மட்டும் பதிவு செய்தால் போதும் என்றும் வாதிட்டார்.

ஆனால், இது முறையான பதிலாக இருக்கவில்லை; மாறாக, கேட்கப்பட்ட கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் ஒரு முயற்சியாகவே இருந்தது.

இதற்கிடையில் ஜூன் 17 அன்று, தலித் சமூகத்தைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் (MP) ரமேஷ் ஜிகஜினகி, விஜயபுராவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பிரியங்க் கார்கேயைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
உள்துறை அமைச்சகத்தை நடத்துவதற்கான அறிவுத்திறன் பிரியங்கிற்கு இல்லை என்றும், அவரது தந்தை காங்கிரஸிற்கு உழைத்த காரணத்தால் மட்டுமே அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது என்றும் ஜிகஜினகி கூறினார்.

அதைத் தொடர்ந்துதான், பெரும் சர்ச்சையைக் கிளப்பிய அந்த கேள்வியை அவர் எழுப்பினார்: "ஒரு தலித் ஏன் ஆர்.எஸ்.எஸ்-ஸைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?"
மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு சவால் விட முயன்றவர்கள் யாரும் உருப்பட்டதில்லை என்றும் அவர் எச்சரித்தார்.

"ஒரு தலித் ஏன் ஆர்.எஸ்.எஸ்-ஸைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?" என்ற இந்தக் கேள்வி வெறும் அரசியல் கிண்டல் மட்டுமல்ல. அது இந்துத்துவத்தின் உள்மனப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு திறந்த ஜன்னல். அதன் வழியே தெரியும் உண்மைகள் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியவை.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உயர்சாதித் தலைமையைக் கேள்வி கேட்காமல், தலித்துகள் தங்களுக்குரிய எல்லையோடு அடங்கி வாழ வேண்டும் என்று, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாஜக எம்பியே மற்றொரு தலித் அமைச்சரிடம் கூறுகிறார்.

சாதி தொடர்பாக சங்கப் பரிவாருக்குள் இருக்கும் ஒட்டுமொத்தப் பிரச்சினையையும் ஜிகஜினகி இந்த ஒரே வாக்கியத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

நாங்கள் தீண்டாமையை ஆதரிப்பதில்லை என்றும், தலித்துகளை இந்து சமூகத்தின் அங்கமாக வரவேற்கிறோம் என்றும் ஆர்.எஸ்.எஸ் எப்போதும் கூறி வருகிறது. சூத்திரர்கள் மற்றும் தீண்டத்தகாதவர்களின் முன்னேற்றத்திற்குத் தாங்கள் எதிரி அல்ல என்று கோல்வால்கர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

இந்துக்களின் ஒற்றுமையைப் பற்றிப் பேசிய அவர்கள், தலித்துகள் உட்பட அனைத்துச் சாதிகளும் ஒரு பெரிய இந்து குடும்பத்தின் பாகமே என்று வாதிட்டனர்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது எல்லோரையும் அரவணைப்பது போலத் தோன்றலாம். ஆனால், இந்த வாதத்தை மிகத் துல்லியமாக உடைத்தெறிந்தார் அம்பேத்கர்.

அம்பேத்கரின் நிலைப்பாடு மிகவும் எளிதானது: சாதி முறையை அப்படியே வைத்துக்கொண்டு உங்களால் தலித்துகளை முன்னேற்ற முடியாது. சாதி என்பது இந்து சமூகத்தில் தற்செயலாக நுழைந்த ஒன்றல்ல, அதுதான் அதன் அடித்தளம்.
கீழே உள்ளவர்களை மேலும் மேலும் கீழே அமுக்கி வைத்துக்கொண்டு இயங்கும் ஒரு அடுக்குமுறை அமைப்பு அது. தீண்டத்தகாதவர்களின் வீழ்ச்சி என்பது இந்த அமைப்பில் எதிர்பாராமல் நடந்த ஒன்றல்ல, மாறாக இந்த அமைப்பின் நோக்கமே அதுதான்.
சாதியை ஒழிக்காமல் தலித்துகளை இந்து மதத்திற்குள் வரவேற்பது என்பது, எரியும் ஒரு வீட்டிற்குள் அவர்களை அழைத்து, "அங்கே நிம்மதியாக இருங்கள்" என்று சொல்வதற்குச் சமம்.
எனவே, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்த அணுகுமுறை ஒரு சீர்திருத்தம் அல்ல, அது ஒரு பொறி.

தலித்துகள் இந்து சமூகத்திற்குள்ளேயே இருக்க வேண்டும், வர்ணாசிரம அமைப்பில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், தங்களைச் சேர்த்துக் கொண்டதற்காக நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள்.

சாதி ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் கோரிக்கையை அவர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சாதியைச் சீரமைப்பதோ அல்லது அதன் தீவிரத்தைக் குறைப்பதோ தீர்வல்ல, அதை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதே அம்பேத்கரின் கொள்கையாக இருந்தது.

ஆர்.எஸ்.எஸ் எதைக் காப்பாற்றத் துடிக்கிறதோ, அந்தப் பிராமண ஆதிக்க சமூக அமைப்பின் மையப் புள்ளியிலேயே அம்பேத்கரின் கொள்கை பலமாகத் தாக்கியது.

இதனால்தான் ஜிகஜினகியின் கேள்வி இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது. "ஒரு தலித் ஏன் ஆர்.எஸ்.எஸ்-ஸைக் கேள்வி கேட்க வேண்டும்?" என்று அவர் கேட்கும்போது, அதன் மறைமுகப் பொருள் வேறொன்றாக இருக்கிறது.
தலித்துகள் ஆர்.எஸ்.எஸ் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும், இந்து ஒற்றுமையின் பெயரால் அடங்கிப் போக வேண்டும், அமைப்பின் அதிகாரத்தை எக்காரணம் கொண்டும் கேள்வி கேட்கக் கூடாது என்பதையே அவர் உணர்த்துகிறார்.

ஆர்.எஸ்.எஸ் காலம் காலமாகப் பேசி வரும் அதே நியாயம்தான் இது: "நாங்கள் தான் உங்களைப் பாதுகாப்பவர்கள், நாங்கள் தான் உங்கள் குடும்பம், உங்கள் தலைவர்கள் — எனவே எங்களை எதிர்த்துப் பேசாதீர்கள்."

1925-ல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, தனது முதல் நூறு ஆண்டுகளைச் சாதி முறைக்கு எதிராக ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்கத் துணியாமலேயே கழித்திருக்கிறது.
அவர்கள் இந்து ஒற்றுமையைப் பற்றிப் பேசினார்களே தவிர, சாதி ஒழிப்பைப் பற்றி ஒருபோதும் வாய்திறக்கவில்லை. தலித்துகளைச் சேர்த்துக் கொள்வதைப் பற்றிப் பேசினார்களே தவிர, அவர்களைப் புறந்தள்ளும் இந்த அடுக்குமுறைச் சாதி அமைப்பைத் தகர்ப்பதைப் பற்றிப் பேசவே இல்லை.

இந்த மௌனம் தற்செயலானது அல்ல, அது திட்டமிட்ட ஒரு நிலைப்பாடு. மக்களை ஒடுக்கும் ஒரு அமைப்பைப் பாதுகாத்துக் கொண்டு, உங்களால் அந்த மக்களை வாழ வைக்க முடியாது.
சாதி அமைப்பு என்பது மென்மையாகக் கையாள வேண்டியதோ அல்லது படிப்படியாக மாற்ற வேண்டியதோ ஆன ஒரு கலாச்சாரப் பாரம்பரியம் அல்ல. மனித வரலாற்றிலேயே உருவான மிகக் கொடூரமான, மனிதநேயமற்ற சமூகக் கொடுமைகளில் இதுவும் ஒன்று.

தலைமுறைகளாகவும் நூற்றாண்டுகளாகவும் கோடிக்கணக்கான மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே வறுமையிலும், சமூகப் புறக்கணிப்பிலும், வன்முறையிலும் தள்ளிய அமைப்பு இது.
அம்பேத்கர் சொன்னது போல, இது வெறும் வேலைப் பிரிவினை (Division of Labour) மட்டுமல்ல, தொழிலாளர்களைப் பிரித்து வைக்கும் (Division of Labourers) சூழ்ச்சி. மனிதர்கள் தாங்களாகத் தேர்ந்தெடுக்காத, அவர்களால் ஒருபோதும் தப்பிக்க முடியாத நிலைக்குள் தள்ளப்படும், மத ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிரந்தரச் சிறைச்சாலை இது.

இதிலுள்ள கொடூரங்களை எதிர்ப்பது போல நடித்துக்கொண்டே, இந்த அமைப்பை எப்படியாவது உயிரோடு வைத்திருக்க வேண்டும் என்பதே சங்கப் பரிவாரின் நூறாண்டு கால முயற்சி.
அவர்கள் தங்களது தேர்தல் வேட்பாளர் பட்டியலில் தலித் முகங்களைக் காட்டுகிறார்கள்; ஆனால், கொள்கை ரீதியான அதிகாரத்தை எப்போதும் உயர்சாதியினரின் கைகளிலேயே வைத்திருக்கிறார்கள்.

அம்பேத்கரின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டே, தெருக்களுக்கு அவரது பெயரைச் சூட்டுகிறார்கள். அரசியல் சாசனத்தை மதிப்பதாகக் கூறிக் கொண்டே, அது தரும் இடஒதுக்கீட்டையும் சமூக நீதியையும் எதிர்க்கிறார்கள்.

இது எல்லோரையும் உள்ளடக்குவது அல்ல, மாறாக வரலாற்றில் ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்திய மிகப்பழைமையான தந்திரம்: புரட்சியின் மற்றும் எதிர்ப்பின் அடையாளங்களைத் தங்களுக்குள் இழுத்துக்கொண்டு, அதன் வீரியத்தை அழித்துவிடுவது.

"ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தொட முயன்றவர்கள் யாரும் தப்பியதில்லை" என்று ஜிகஜினகி எச்சரிக்கும் போது, அவர் ஜனநாயகத்தின் மொழியில் பேசவில்லை. மாறாக, தனக்குக் கீழே உள்ளவர்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை என்று நினைக்கும் ஒரு ஜமீன்தாரின், நிலப்பிரபுவின், உயர்சாதி மேலாதிக்கவாதியின் மொழியிலேயே பேசுகிறார்.

ஒரு தலித் அமைச்சருக்கு எதிராக, ஒரு பிராமண அமைப்பைப் பாதுகாக்க தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு எம்பியே இந்த மொழியைப் பயன்படுத்துகிறார் என்பது வெறும் முரண்பாடு அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டே அவர்களின் ஒடுக்குமுறையை நியாயப்படுத்த வைப்பதில் இந்துத்துவம் எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது என்பதன் வெளிப்பாடுதான் இது.

Jayarajan C N

18/06/2026

சர்ச்சையை கிளப்பிய பாஜகவின் வெற்றி.. தீயில் கருகிய 4000 வாக்கு இயந்திரங்கள்! | West Bengal | BJP

Address

Melapalayam
Tirunelveli
627005

Telephone

+919600207173

Website

Alerts

Be the first to know and let us send you an email when காசி லெப்பை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category