16/08/2022
நமது #பாலாமடை #தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் தொடர் மரணங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்.
அரசு மணல் குவாரி நடத்துவதற்க்காக ஆற்றின் நடுவே ஏற்ப்படுத்திய செயற்க்கை சாலைகள் காரணமாக என்னற்ற மரனங்கள் நிகழ்ந்துள்ளன. வருமானம் வரும் போது சுயலாபத்திற்க்காக சாலை அமைத்த அரசு அதன் வேலை முடிந்தவுடன் பின்வரும் ஆபத்துகளை உணராமல் அந்த சாலைகளை அப்படியே விட்டுவிட்டது.
குறிப்பிட்ட இடத்தில் நீர் செயற்கை கரையின் மீது மோதி திரும்புவதால் சுழல் போல் நீர் சுழன்று அந்த பகுதி ஆழமாக மாறியிருக்கலாம். இனி ஒரு மரனம் நிகழாமல் தவிர்க்க ஆற்றின் நீரோட்டத்தை நேராக செல்லும் வகையில் ஒழுங்கு படுத்த வேண்டும். ஏற்கனவே அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் ஆற்றின் நடுவே அமைந்துள்ள பாதையை அகற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2007, 2008 காலகட்டத்தில் ஆற்றில் மனல் அள்ள செயற்கை பாதைகள் உருவாக்க பட்டது என நினைக்கின்றேன். அதற்கு பிறகு ஏற்பட்ட அத்தனை மரணங்களுக்கும் அரசும் நாமும் ஒரு வகையில் காரணம்தான். அந்த செயற்கை பாதைகளால்தான் ஒவ்வொரு மரணமும் நிகழ்ந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. அன்று அதனால் நாம் ஒவ்வொருவரும் இந்த ஊரும் பயன் பெற்றது. அதே போல் அந்த செயற்கை பாதைகளை நீக்கி நீரோட்டம் நேரடியாக செல்ல வழி வகை செய்தால் ஆற்றின் எல்லா பகுதிகளும் சமமாக மாறலாம் மாற வாய்ப்புகள் உள்ளன.
ஊர் பெரியவர்கள் கலுந்து ஆலோசித்து இனி ஓர் உயிர் போகாத வன்னம் நிரந்தர தீர்வை ஏற்படுத்த அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கைகளை வைக்க வேண்டும்.