முக்குலத்தோர் மீடியா

முக்குலத்தோர் மீடியா media தவறுகள் நடப்பது
கெட்டவர்களால்இல்லை..
தவறுகள் நடப்பதை
அமைதியாக வேடிக்கை
பார்க்கும் நல்லவர்களால் உ.முத்துராமலிங்கதேவர்

🙏🙏🙏😭😭😭தலைசிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரும், பிரபல பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் திரு.சாலமன் பாப்பையா அவர்கள் உடல்நல...
11/09/2026

🙏🙏🙏😭😭😭தலைசிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரும், பிரபல பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் திரு.சாலமன் பாப்பையா அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

எளிமையான தமிழ் மொழியில் நயமான மற்றும் நகைச்சுவையான கருத்துக்களால் பட்டிமன்றங்களை சிறப்பித்த திரு.சாலமன் பாப்பையா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக தமிழ் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தேவர் சமூக மக்கள் தேவைக்கு தொடர்பு கொள்ளவும்
11/09/2026

தேவர் சமூக மக்கள் தேவைக்கு தொடர்பு கொள்ளவும்

10/09/2026

😆😆😆 #தென்காசி #இடைகால் மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவி பள்ளி சான்றிதழை கொடுத்ததற்கு மிக முக்கிய காரணம் இதுதான்

🚨 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தை… TC வாங்கிட்டு பள்ளியை விட்டு போகச் சொன்னதாக வைரலான விவகாரம்! ஆனால் உண்மையான பிரச்சனை என்ன?

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு சம்பவம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

3-ம் வகுப்பு படிக்கும் ஒரு குழந்தையை, “TC வாங்கிக்கொண்டு பள்ளியை விட்டு வெளியேறுங்கள்” என்று பள்ளி நிர்வாகம் கூறியதாக தகவல் பரவியது. இதைப் பார்த்த பலரும், பள்ளி தலைமையாசிரியருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு, வீடியோக்களையும் வெளியிட்டு வந்தனர்.

ஆனால், ஒரு சம்பவத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் ஒருபக்கத்தை மட்டும் கேட்டு முடிவு செய்வது சரியா? 🤔

இந்த விவகாரத்தில் பள்ளி தரப்பில் கூறப்பட்டதாக வெளியாகிய தகவல்களில், அந்த குழந்தை தொடர்ந்து ரீல்ஸ் பதிவிடுவது, வீட்டுப்பாடங்களை சரியாக செய்யாமல் இருப்பது உள்ளிட்ட புகார்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை இறுதியில் சிக்கலாகி, TC வாங்கிச் செல்லுமாறு கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் இதைக் கேட்டவுடன்,

“ஒரு குழந்தை ரீல்ஸ் போட்டதற்காகவா TC கொடுக்க வேண்டும்?”

என்ற கேள்வி நமக்கும் வரலாம்.

ஆனால் அதற்குப் பிறகு அந்த குழந்தை பதிவிட்டதாக கூறப்படும் சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியபோது, இன்னொரு முக்கியமான கேள்வி எழுகிறது.

👉 இந்த வயதில் ஒரு குழந்தைக்கு இவ்வளவு சமூக வலைத்தள வெளிப்பாடு தேவையா?

ஒரு குழந்தை, தான் பாடலின் அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமலேயே பாடல் வரிகளை மனப்பாடம் செய்து, அதற்கேற்றவாறு முகபாவனைகளையும் செய்து வீடியோவில் தோன்றலாம்.

அந்த குழந்தைக்கு அது தவறு என்று கூட தெரியாமல் இருக்கலாம்.

குழந்தையை மட்டும் குறை சொல்ல முடியாது. ❤️

ஏனென்றால், குழந்தைக்கு எதை அறிமுகப்படுத்த வேண்டும், எதை தவிர்க்க வேண்டும், எந்த வயதில் எந்த விஷயத்தை அனுமதிக்க வேண்டும் என்பதில் மிகப்பெரிய பொறுப்பு பெற்றோருக்குத்தான் இருக்கிறது.

📱 குழந்தையின் கையில் செல்போன் கொடுப்பது எளிது.
ஆனால் அந்த செல்போனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதுதான் பெற்றோரின் உண்மையான பொறுப்பு.

இன்று ஒரு ரீல்ஸ்…

நாளை இன்னொரு ரீல்ஸ்…

அதற்குப் பிறகு லைக்ஸ், கமெண்ட்ஸ், வியூஸ், ஃபாலோவர்ஸ் என்று குழந்தையின் கவனம் மெதுவாக சமூக வலைத்தளத்தை நோக்கி நகர ஆரம்பிக்கலாம்.

சிறு வயதிலேயே தொடர்ந்து வீடியோ எடுப்பது, தன்னை கேமராவில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம், லைக்ஸ் மற்றும் பாராட்டுகளுக்காக காத்திருப்பது போன்ற பழக்கங்கள் உருவாகிவிட்டால், குழந்தையின் இயல்பான கவனம் வேறு திசைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும், குழந்தைகள் பள்ளியில் நண்பர்களுடன் இருப்பதால், ஒரு குழந்தையின் சமூக வலைத்தள பழக்கம் மற்ற குழந்தைகளுக்கும் எளிதாக பரவக்கூடும்.

இதனால் கல்வி மட்டுமல்லாமல், குழந்தையின் கவனம், சுய ஒழுக்கம், தனியுரிமை, நடத்தை மற்றும் வயதுக்கேற்ற மன வளர்ச்சி ஆகியவற்றையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.

அதே நேரத்தில், பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கையும் சரியா, தவறா என்பதை முழு உண்மைகளை அறியாமல் நாம் தீர்ப்பு சொல்ல முடியாது.

ஒரு குழந்தையின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, முதலில் பெற்றோரை அழைத்து விஷயத்தை விளக்கி, தேவையான வழிகாட்டுதலை வழங்கி, எச்சரிக்கை கொடுத்து, குழந்தையின் பழக்கத்தை மாற்ற முயற்சி செய்வதே சிறந்த அணுகுமுறையாக இருந்திருக்கலாம்.
📚 படிக்கட்டும்…
⚽ விளையாடட்டும்…

🧠 நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ளட்டும்…

படிப்பை விடவும் முக்கியமானது சுய ஒழுக்கம்.

அதற்கும் மேலாக, ஒரு குழந்தையின் குழந்தைத்தனத்தை பாதுகாப்பது பெற்றோரின் மிகப்பெரிய பொறுப்பு. ❤️

“என் குழந்தை ரீல்ஸ் போடுது… அதனால் என்ன?” என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், “என் குழந்தைக்கு இப்போது இது உண்மையிலேயே தேவையா?” என்று ஒவ்வொரு பெற்றோரும் ஒருமுறை யோசிப்போம்.
கடந்த வாரம் எனது பதிவுகளுக்கு 30,000க்கும் அதிகமான உணர்ச்சிகள் கிடைத்தன! ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி! 🎉

10/09/2026

அடிக்கு அடி உதைக்கு உதை வாழ்த்துக்கள் சகோதரி

அன்புச் சகோதரர் பணி சிறக்க வாழ்த்துக்கள்
09/09/2026

அன்புச் சகோதரர் பணி சிறக்க வாழ்த்துக்கள்

❤️❤️❤️சாண்டோ சின்னப்ப தேவர் அவர்களுக்கு ஈ எறும்பையும் தன் அன்பால் வசியம் செய்ய தெரிந்த வல்லமை படைத்தவர் அவர்கள் வரலாறையு...
09/09/2026

❤️❤️❤️சாண்டோ சின்னப்ப தேவர் அவர்களுக்கு ஈ எறும்பையும் தன் அன்பால் வசியம் செய்ய தெரிந்த வல்லமை படைத்தவர் அவர்கள் வரலாறையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம் 👇

பங்கஜா மில் பட்டறையில், சின்னப்பாவுக்கு கூலி வேலை. சம்மட்டியால் இரும்பைத் தட்டித் தட்டிச் சீராக்கும் பணி. மாதம், ஒன்பது ரூபாய் சம்பளம்.

இதற்கு முன், காபி கம்பெனியில் எடுபிடியாக இருந்தார். அங்கு சம்பாதித்ததை விட, இங்கு, மூன்று ரூபாய் அதிகம். அரிசிச் சோறும், அசைவப் பதார்த்தங்களும் சாப்பிட ஆசை. ஆனால், எப்போதும் வீட்டில் இருந்த பசி, பஞ்சம், பட்டினி அலுப்பைத் தந்தது. ஏழ்மையை வென்று விட வேண்டும் என்கிற வெறி சின்னப்பாவிற்கு!

மிலிட்டரி ஓட்டல் என்று விஸ்தாரமாகக் கூற முடியாவிட்டாலும். சமைப்பவர்களின் கை மணத்தில் அங்கு கூட்டம் அதிகம். சிற்றுண்டி, மதியச் சாப்பாடு என்று அச்சிறு கடையை விரும்பினர் பாட்டாளிகள். ஏகத்துக்கும் உண்டார் சின்னப்பா. விளைவு, ஆறு ரூபாய் கடன்!

கல்லாவில் இருந்தவர்கள் சின்னப்பாவை எச்சரித்து, 'எங்க மொதலாளி ரொம்ப மோசமானவரு; கழுத்துல துண்டைப் போட்டு, காசை வசூல் செய்வாரு. அதனால, வர்ற ஒண்ணாம் தேதிக்குள்ள காச பைசல் பண்ணிடு...'என்றனர்.

தலையை நிமிர்த்தவே இல்லை சின்னப்பா. 'அத்தனைப் பெரிய கூட்டத்தின் நடுவே, அதைச் சொல்லியிருக்க வேணாம்; மாலை, 4:00 மணிக்கு டீ குடிக்க வருகையில், காதோடு காதாக ஓதியிருக்கலாம்...' என நினைத்தார்.

கை கழுவும்போது, டேபிள் துடைப்பவன் நக்கலாகச் சிரித்தான். 'இனி, பாக்கியைக் கொடுக்காமல் உள்ளே நுழையக் கூடாது...' என்று மனதுக்குள் சபதம் எடுத்தார்.

அப்போது, வாசலில் கடை முதலாளி வரும் சத்தம் கேட்டது. வசமாகச் சிக்கிக் கொண்டார் சின்னப்பா. தப்பியோட முடியவில்லை; துண்டு கழுத்தை நெரித்தது.

விழிகள் பிதுங்கி வெளியே வந்து விடும் போலிருந்தது. மூக்குப் பிடிக்க தின்ற முட்டை தோசையும், ஆப்பம், பாயாவும் அடையாளம் தெரியாமல் போய் விட்டன.

'யாரை ஏமாத்தப் பாக்குறே... கல்லால சொல்லல... என்ன பெரிய சண்டியரா நீயி... கோதால வெச்சுக்க அதை! காசு கொடுத்துச் சாப்பிடத் துப்பில்ல; நீயெல்லாம் ஒரு ஆம்பள... உனக்கு வேட்டி ஒரு கேடு...' என்று திட்டவும், சின்னப்பாவுக்கு பேச்சு நின்று போனது.

கழுத்தில் சுளீரென விழுந்த அடியில் கால் இடறி கீழே விழுந்தார். எழுந்திருக்க மனசில்லாமல் அப்படியே சவம் போன்று கிடந்தார். யாரும் அனுதாபப்படவோ, இரக்கம் காட்டவோ, கை தூக்கி விடவோ முயலவில்லை.

'உனக்கு இது வேண்டும்...' என்பது போன்று கடந்து போயினர்.

அன்று கிருத்திகை; வழக்கமாக மருதமலை தெய்வத்தை அவர் தரிசிக்கும் தினம். ஆனால், தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் தற்கொலை முடிவுக்கு வந்து விட்டார் சின்னப்பா.

'முருகா... எனக்கேற்பட்ட அவமானத்திலிருந்து நீ என்னைக் காப்பாற்றினால், நான் காலமெல்லாம் உன் அடிமை; அப்படி இல்லையென்றால், என் வாழ்க்கை இன்றோடு ஒழிந்து போகட்டும்....' என்று நினைத்தவருக்கு, துக்கம் தொண்டையை அடைத்தது.

மருதமலை கோவிலை நோக்கி நடந்தவருக்கு, 'ச்சீ... இவ்வளவு தானா மனிதர்கள்... மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்ளாமல் நழுவி ஓடுகின்றனரே... நமக்கும் பணம், பவிசு வந்தால், இப்படி இரக்கம் இல்லாமல் வாழக் கூடாது. யாரும் கேட்பதற்கு முன் ஓடி உதவணும்; ஏழைகளோட கண்ணீரைத் துடைக்கணும். ஆனா, அதெல்லாம் நம் வாழ்வில் சாத்தியமாகுமா...' என்று வழி நெடுக மனதுக்குள் புலம்பியபடியே சென்றார்.

உயிரை விட அஞ்சவில்லை; கடனுக்காக இறப்பது தலைகுனிவாகத் தோன்றியது. தெரிந்தவர்களிடம், கடன் கேட்டுப் பார்த்தாகி விட்டது; எல்லாருமே அன்றாடங் காய்ச்சிகள்; பிள்ளைக் குட்டிக்காரர்கள்.

கடைசியாக, ஒரே ஒரு முறை முருகனைக் கண் குளிர தரிசித்தால் போதும்; ஆசை தீர அவனைக் கும்பிட்டு விட்டு, குதித்து விட வேண்டும். 'கடன்காரன் சின்னப்பா செத்தான்; காற்று இனியாவது இதமாக வீசட்டும். சிறுவாணியில் தண்ணீர் வற்றாமல் ஓடட்டும்; மாதம் மும்மாரி பொழியட்டும்; ஏழைகள் சுகமாக வாழட்டும்...' என்று எண்ணியவர், நடப்பதை நிறுத்தி, தன்னிரக்கம் மேலோங்க, உட்கார்ந்து ஓலமிட்டு அழுதார். 'முருகா... என் நிலைம மாறாதா... நாலு பேர் மதிக்க, எனக்கும் கவுரவமான வாழ்க்கை கிட்டாதா...' என, ஏங்கியவர், 'வருவது வரட்டும்...' என்று எண்ணியவாறே மீண்டும் எழுந்து நடந்தார்.

காலை ஏதோ இடறியது. குனிந்து எடுத்தார்; சிகரெட் டப்பா! 'ச்சீ... முருகனைக் கும்பிடப் போகும்போது இது வேறு அசிங்கம்...' என்று நினைத்து தூக்கிப் போட்டார். தூரப் போய் விழுந்தது. 'இனி என்ன இருக்கிறது எனக்கு; முருகன் கை விட்டு விட்டான். வழக்கமாக பீடி குடிப்போம்; இன்றைக்கு கடைசியாக சிகரெட் பெட்டியக் கண்ணுல காட்டி இருக்கான். அடப்பாவி பழநி ஆண்டி! யார் யாருக்கோ செல்வத்தை வாரி வழங்கியிருக்கே... தலைமுறை தலைமுறையாக உன்னையே வழிபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு மட்டும் சிகரெட் பெட்டியா... இது அடுக்குமா...' என்று கூறியவாறு மறுபடியும் அதைப் போய் எடுத்தார்.

இரண்டு சிகரெட்டுகள் தெரிந்தன. இன்னும் ஏதாவது துண்டு பீடி இருக்குமா என கவிழ்த்துப் பார்த்தார். இரண்டு பத்து ரூபாய் நோட்டுகள் கீழே விழுந்தன. 'பத்து ரூபாய் தாள் தானா... போலி காகிதம் இல்லையே...' என நினைத்து துடைத்துத் துடைத்து பார்த்தவர், 'முருகா...' என்று அலறினார்; அழுதார். ஆனந்த வெள்ளத்தில் நீராடினார்.

'மருதமலை மூர்த்தியே... என் மானத்தக் காப்பாத்திட்டே சாமி... இந்தக் காட்டுப் பாதையில என் கண்ல மட்டும் படற மாதிரி சிகரெட் டப்பாவைக் காட்டினியே... முருகா... நீயே என் தெய்வம்! இனி உன்னை மட்டுமே கும்பிடுவேன்...' உள்ளம் உருகினார்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை, பச்சைப் பசேலென்று நாற்றுகள் காற்றில் தலை அசைத்து ஆடின. வேலை இன்னும் முடியவில்லை. பண்ணையார் வந்து பார்க்கையில், அவர் மனம் குளிர வேண்டும்; முதலாளி பூரிப்பாக இருந்தால் தான், கூலிக்காரனுக்கு கால் வயிறு நிறையும்.

'எல்லாம் ஒழுங்காக நடப்பட்டிருக்கிறதா...' வரப்பின் மேலே நடந்து சென்று ஒவ்வொரு வயலாக பார்த்தார் சின்னப்பா. சேற்றுத் தண்ணீரில் இறங்கி, 'சளக்புளக்'கென்று நடந்து, சரிந்து கிடந்த ஒன்றிரண்டு நாற்றுகளை பிடுங்கி, சரியாக நட்டார்.

பருத்தி காட்டுக்குள்ள பவிசாகப் பார்த்த மச்சான் என்று உல்லாசமாக பாடியபடி, வேலை செய்து கொண்டிருந்த காளியப்ப கவுண்டரின் மனைவி தேவானை, அவரைப் பார்த்தவுடன், 'என்ன சின்னப்பா... பசி எடுக்கலயா... சூரியன் உச்சிக்கு வந்ததும் தெரியாம வேல வாங்கறீங்களே...' என்றாள்.

நெற்றி அருகே கையை வைத்து மேலே பார்த்தார் சின்னப்பா. தகதகவென்று கதிரவன் ஒளியில் கண்கள் கூசியது. முண்டாசைக் கழற்றி முகத்தைத் துடைத்து, வாய்க்கால் அருகே போனார்.

தேவருக்கு முன், அது, நீரில் தன் முகத்தைப் பார்த்து மிரண்டு, லொள்... லொள்... என்று கத்தியது.

'இன்னும் நீ போகல... அப்பவே துரத்தி விட்டேனே... உனக்குக் கொடுக்க எங்கிட்ட என்ன இருக்கு... உழுறவனுக்குக் கறிச்சோறு கிடைச்சா அது, திருநாளாகத் தான் இருக்கும்...' என்று கூறியவாறே குளிர்ந்த நீரால், கை, கால், முகம், மார்பு பகுதிகளை கழுவினார். 'அப்பாடா...'என்றிருந்தது. வேட்டியை உதறி, உடம்பைத் துடைத்து, அதையே கட்டிக் கொண்டார்.

பித்தளை தூக்குச் சட்டியை திறந்தார்; பழையது நிரம்பி இருந்தது. சின்ன வெங்காயம், பச்சை மிளகாயும், தனியே ஒரு கிண்ணத்தில், முதல் நாள் வைத்த மீன் குழம்பும் இருந்தது. நாக்கில் எச்சில் ஊற, ஒரு கவளத்தை எடுத்து, 'முருகா...' என்றபடி வாயில் போட்டுக் கொண்டார்.

சிதறிய பருக்கைகளை, அருகில் அமர்ந்திருந்த நாய், நாக்கால் திரட்டிச் சாப்பிட்டது. 'உனக்கு ரெண்டு எலும்புத் துண்டு போடக் கூட எனக்கு வக்கில்ல; கல் எடுத்து அடிச்சாலும், என் பின்னாலேயே ஓடிவர்ற...' என்றவாறே, தரையைச் சுத்தப்படுத்தி, இரண்டு கவளம் சோற்றை எடுத்து வைத்து விட்டு, தூக்குச் சட்டியை வாயருகே வைத்து பழையதின் நீரைக் குடித்தார். சில்லென்ற ஆலமரக்காற்று; அருகிலிருந்த மாந்தோப்பில் மாம்பிஞ்சுகளின் வாசம். துண்டை வீசிப் படுத்தார்; கண்கள் செருகின.

லொள்... லொள்... விடாமல் குரைத்தது நாய். எரிச்சலில் கண் விழித்தவருக்கு, 'புஸ்... புஸ்...' என, பாம்பு சீறும் ஒலி, காதில் விழுந்தது. விழுது என்று அதுவரை தான் எண்ணி இருந்தது பாம்பா?

பணி சிறக்க வாழ்த்துக்கள்
08/09/2026

பணி சிறக்க வாழ்த்துக்கள்

08/09/2026

மக்கள் பணியே மகேசன் பணி என்று வாழ்ந்து மறைந்த நமது தேவர் தந்த தேவர்.

உசிலம்பட்டியில் நடைபெற்ற கல்வித்தந்தை மூக்கையா தேவர் அவர்களின் பிறந்தநாள் விழாவில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக  மாலை...
07/09/2026

உசிலம்பட்டியில் நடைபெற்ற கல்வித்தந்தை மூக்கையா தேவர் அவர்களின் பிறந்தநாள் விழாவில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

​அந்நிகழ்வின் போது, தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி அவர்கள் உடல்நலக் குறைவு இருந்தபோதிலும், நமது அய்யா மூக்கையா தேவர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ஆகியோரின் மாண்பையும் தெய்வத்தன்மையையும் போற்றும் விதமாக, தனது காலணிகளைக் கழற்றிவிட்டு முழு மரியாதையுடனும் பக்தியுடனும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவரது இந்த செயல் தலைவர்களுக்கும் முன்னோர்களுக்கும் நாம் அளிக்க வேண்டிய உயர்ந்த மரியாதையை உணர்த்துகிறது.

​ஆனால், அதே நிகழ்வில் பங்கேற்ற சில நிர்வாகிகள் காலணிகளைக் கழற்றாமல் மரியாதை செலுத்தியது வருத்தத்திற்குரியது.

​இனிவரும் காலங்களில் தலைவர்கள், முன்னோர்கள் மற்றும் தியாகிகளின் உருவச்சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் போது, கண்டிப்பாக காலணிகளைக் கழற்றிவிட்டு மரியாதை செலுத்த வேண்டும் என அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

|| #அன்னலட்சுமி_சகிலா_கணேசன்
|| #மாநில_அமைப்பு_செயலாளர்
|| #தென்_மண்டல_அமைப்பாளர்
|| #வெள்ளாளர்_முன்னேற்றக்_கழகம்
|| ||
|| ||

 #முக்குலத்தோர் சமுதாய தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கு பெற்ற கருத்தரங்கம்  #மதுரை நடைபெற்றது
07/09/2026

#முக்குலத்தோர் சமுதாய தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் பங்கு பெற்ற கருத்தரங்கம் #மதுரை நடைபெற்றது

Address

தமிழ்நாடு
Tirunelveli
627452

Alerts

Be the first to know and let us send you an email when முக்குலத்தோர் மீடியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to முக்குலத்தோர் மீடியா:

Shortcuts

Share