வியக்கத்தக்க வேலூர் - Incredible Vellore

  • Home
  • India
  • Vellore
  • வியக்கத்தக்க வேலூர் - Incredible Vellore

வியக்கத்தக்க வேலூர் - Incredible Vellore About our known and unknown History

 # நடுகல் வீரர் ஓர் மீள் ஆய்வு,சின்னதாமல் செறு,பேரணாம்பட்டு, வேலூர்:ஒன்றிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஓர் யானை குத்தி பட்டா...
20/07/2026

# நடுகல் வீரர் ஓர் மீள் ஆய்வு,சின்னதாமல் செறு,பேரணாம்பட்டு, வேலூர்:

ஒன்றிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஓர் யானை குத்தி பட்டான் வீரக்கல் சின்னதாமல் செறு என்ற கிராமத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து, இந்த சுற்று வட்டார பகுதியில் யானையை கொன்று இறந்த நடுகல்லை காண ஆவலாக அதன் இருப்பிடம் தேடி சென்றும் இடம் கண்டறிய முடியாமல் தோல்வியே மிஞ்சியது, இராண்டாவது முறை வழிகாட்ட உடன் வந்தவர் அந்தப் பகுதியில் அன்று சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வர இயலாது மற்றொருமுறை அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டார், அருகில் சென்றும் நடுகல்லை பாராமல் திரும்பினோம்.

மூன்றாவது முறையாக பாறை ஓவியங்கள் பேரணாம்பட்டு மலைகளில் தேடும் முயற்சியில் நண்பர் பழனிசாமி மற்றும் பேராசிரியர் ஜெயவேல், அவர் மாணவர்கள் சிலருடன் பயணித்தேன் கிராம வழிகாட்டி பாதை தவறி அழைத்துச் சென்று எங்களை அலைக்கழித்து, ஒவியங்களை பார்வையிடாமல் திரும்பி வந்தபோது சின்ன தாமல் செறு கிராமத்தில் தேடிய நடுகல் நினைவுக்கு வந்தது, உள்ளூர் மாணவர் அதன் இருப்பிடம் தெரியும் என்று வழிகாட்ட முன்வந்தார்,மற்றவர்கள் மலை இறங்கிய களைப்பில் அவர்கள் இருப்பிடம் திரும்ப, நானும் பழனிச்சாமியும் அந்த மாணவருடன் அந்த நடுகல்லை காண வயல் வெளியில் பயணித்தோம்.

மாணவருக்கு அறிந்த இடமாக இருந்தாலும் சட்டென்று அவருக்கு இவ்விடம் நினைவுக்கு வரவில்லை.,மூன்று பேரும் மூன்று பக்கமாக தேடியதில் பழனிச்சாமி கண்ணில் சிக்கியது நடுகல்.

வயல் வரப்போரம் சுமார் 3 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் உள்ள பலகை கல்லில் வீரன் உருவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. வட்டமான முகம்,நேர் பார்வையுடன்,தலையில் பெரிய கொண்டை, காதில் நீண்ட குண்டலமும்,கழுத்தில் மூன்று ஆரங்கள் அணி செய்கின்றன.

இடுப்பில் அரையடையுடன்,இடது கையில் கேடயமும்,வலது கையில் குறுவாளும், இடுப்பில் வாளின் உறையும் அமைந்துள்ளது.அவரை சுற்றி அலங்கார வளைவு செதுக்கப்பட்டுள்ளது. முகத்தின் நேர் பக்கம் கல்வெட்டு பொளியப்பட்டுள்ளது.

கல்வெட்டு:
1.செல்லா
2.வார் அடியா
3.ன் பம்மான்
4.டை மகன் ஆ
5.ளை கொன்
6.று ஞ்த்திர
7.கொண்டா
8.ந்

கல்வெட்டு பொருள்:
செல்லாவார் அடியான் பம்மான்டை என்பவரின் மகன் யாரோ ஒருவருடன்‌ ஏற்பட்ட பூசல் காரணமாக எதிராளியை கொன்று, உதிரங் கொண்டான்.

போரில் அல்லது பூசலில் உயிர் நீப்பவருக்கு உதிரப்பட்டி என்ற பெயரில் நிலம் வழுங்கபடுவது பண்டைய வழக்கமாகும்.
உயிர் நீத்த இந்த வீரருக்கு உதிரப்பட்டி நிலம் கொடுக்கப்பட்டுள்ளதாக கருதலாம்.

ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நடுகல்லில் ஆனை(யானை) கொன்று ஊரைக் காத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கல்வெட்டு வரிகளில் அது போன்றதொரு வார்த்தைகள் இடம்பெறவில்லை. மேலும் யானையின் உருவமும் இந்த நடுகல்லில் காணப்படவும் இல்லை.

கல்வெட்டு படியின் பல்வேறு கோணத்தில் அனுப்பிய படங்களை படித்து இந்த நடுகல் வீரர் கல்வெட்டை மீள் ஆய்வு செய்து விபரங்களை தந்துதவிய
நண்பர் தஞ்சை ராகவேந்திராவுக்கு நன்றி.

தகுந்த ஆதாரங்களுடன் மாற்று கருத்துகள் இருந்தால்
வரவேற்கப்படுகின்றன.

 #ரதி மன்மதன் வார்ப்பு சிற்பங்கள்,காமராஜ் உள்நாட்டு விமான நிலையம்,சென்னை. காதல் குறியீடுகளாக மக்கள் மனதில் இருப்பவர்கள் ...
25/06/2026

#ரதி மன்மதன் வார்ப்பு சிற்பங்கள்,காமராஜ் உள்நாட்டு விமான நிலையம்,சென்னை.

காதல் குறியீடுகளாக மக்கள் மனதில் இருப்பவர்கள் மன்மதன் இவர் மனைவி ரதி.மன்மதன் காதல் கடவுள் என்று பரவலாக அறியப்பட்டாலும் உண்மையில் அவர் "ஆசையின் கடவுள்".

ரதி அன்னப்பறவையின் மேல் அமர்ந்த கோலத்தில்,மன்மதனை பார்த்தவாறு காணப்படுகிறாள் வட்டமான முகம், நேர்கொண்ட பார்வை உதட்டில் மந்தகாசப் புன்னகை,சுருள் முடி தலையில் பின்புறம் ஜடாமண்டல முடி அலங்கார கொண்டை அதை அலங்கரிக்கும் ஆபரணங்கள் நட்சத்திர வடிவில்,மேற்கைகளில் கையூரம்,முன்கைகளில் கங்கணம்,கால்களில் பாடகம்,சதங்கை. கழுத்திலிருந்து இடை வரை தொங்கும் இரண்டு அடுக்கு முத்துச்சர மாலைகள்,மார்பில் சரப்பளி,வலக்கை சற்றே உயர்ந்ததால் அதற்கேற்ப அவளது மார்புக் கச்சை சற்றே நெகிழ்ந்தது போலவும் அமைத்த நேர்த்தியில் சிற்பியின் அழகியல் மிளிர்கிறது. மலர்கள் ஏந்துவது போல் இருகரங்களில் விரல்களின் நெளிவுகள் அழகுற அமைந்துள்ளன. இடுப்புக்கு கீழ் ஆடை கால் தண்டை வரை மூடி உள்ளது.மீண்டும் பார்க்கத் தூண்டும் செழுமையான சிற்பம்.

பத்தடி தொலைவில் ரதியை நோக்கியவாறு மன்மதன் சிற்பம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.அவர் கிளி மீது அமர்ந்த கோலம்,தலையில் கரண்ட மகுடம்,பின்புறம் சுருண்ட சடாமுடி,வில் போல் புருவம்,பெரிய முறுக்கிய மீசை,கூர் நாசி, நீள் செவிகளில் குண்டலங்கள் கழுத்து வரை நீண்டு தொங்க, சரப்பளியும்,கண்டியும், ஆரமும் கழுத்தணிகளாக கொண்டும், கங்கணங்களை கையணிகளாகக் கொண்டும்,அரையாடை யணிந்த இடையில் அணிகலன்கள் வரிசையாக அணிந்தவாறு மன்மதன் காண்பவர்களை மனம் கவர்கிறார்.

இப்படங்களில் காணப்படும் ரதி மன்மதன் வார்ப்பு சிலைகள் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் காத்திருக்கும் அறையின் பின்புறமாக அதிகமாக மக்கள் பார்வையிடாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. வாய்ப்புள்ளவர்கள் சென்று ரசிக்கலாம்.

 #சோழர்கால எச்சங்கள்(2),அருள்மிகு வீரி அம்மன் ஆலயம், விசூர் கிராமம், மானாம்பதி,காஞ்சி செய்யாறு நெடுஞ்சாலை:செங்கல்பட்டு வ...
08/06/2026

#சோழர்கால எச்சங்கள்(2),அருள்மிகு வீரி அம்மன் ஆலயம், விசூர் கிராமம், மானாம்பதி,காஞ்சி செய்யாறு நெடுஞ்சாலை:

செங்கல்பட்டு வட்டத்தில் அமைந்திருக்கும் மானாம்பதி சிவாலயத்திற்கு பதிலாக பாதை மாறி உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள அதே பெயரில் அமைந்திருக்கும் மானாம்பதி கிராமத்தில் சென்று விட்டு வழி கேட்ட போது அவ்வூர் சிவாலயத்திற்கு வழிகாட்டினார்கள்.நான் சென்ற சமயம் ஸ்ரீவான சுந்தரேஸ்வரர் சிவாலயம் பூட்டியிருந்தது.சிறிய கிராமத்தில் பெரிய ஆலயம் பல்லவர் கால சிம்ம தூண்கள் தொலைவில் இருந்து தெரிந்தது.

வேறு ஏதாவது பக்கத்தில் பழமையான ஆலயங்கள் உள்ளதா என்று விசாரிக்கும் போது விசூர் என்ற பக்கத்து கிராமத்தில் ஓர் பழைய ஆலயம் புதுப்பித்து கும்பாபிஷேகம் சென்ற வாரம் நடைபெற்றது என்ற தகவல் கிடைத்தது மானாம்பதியில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் உட்புறமாக அமைந்துள்ளது பசுமையான விசூர் கிராமம்,பழைய சிவன் சிற்றாலயம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு பூட்டியிருந்தது,இவ்வளவு தொலைவு வந்து வீணாகிப் போனதே என்று சற்று உட்புறமாக சென்றபோது வற்றியிருந்த குளம் ஓரமாக ஓர் யானை சிற்பம் காணப்பட்டது பக்கத்தில் மூன்று சிற்றாலயங்கள் அமைந்திருந்தது. சுற்றுப்புற சுவர் ஓரத்தில் இருந்து ஆலயத்தை பார்வையிட்டபோது தெரிந்தது அந்த அழகு முகம் மட்டுமே,சிலை முழுவதும் புடவை சாத்தி இருந்தது,உடனே ஆலயம் உள்ளே நுழைந்தபோது முதல் பிரதான ஆலய கருவறையில் பூசாரி திரு.சேகர் வீரி அம்மனுக்கு நீர் அபிஷேகம் செய்து கொண்டிருந்தார் நல்ல தரிசனம் பொறுமையாக படம் பிடிக்க அனுமதித்தார், வீரி அம்மன் எட்டு கரங்கள் வெவ்வேறு ஆயுதங்கள் ஏந்தியவாறு,ஒட்டிய வயிறுடன்,பருத்த மார்பு, கழுத்தில் கபால மாலை, இடபுரம் தலை சாய்ந்தும், நேர்முகமாக பார்க்கும் தோற்றம்.கோர பற்கள், உக்கிரமாக முகம்,ஒரு கால் தூக்கி ஒரு கால் கீழ் தொங்க விட்டபடியான அமர்ந்திருக்கும் நிலை. தலை கீழ் பிடித்த சூலம் . சூலத்தின் கீழ் அரக்கன் படுத்த நிலை,விரிந்த சடை முடி அதில் மேல் ஓர் கபாலம் என உக்கிர தெய்மாக காட்சியளிக்கிறாள்.

அவரிடம் பக்கத்து ஆலய அம்மன் பெயர் என்ன என்று கேட்டபோது துர்கை அம்மன் என்று அழைக்கப்படுவதாக கூறினார்.

அம்மன் முழு உருவத்தை காண கோரிக்கை வைத்தேன் தயங்காமல் உடனே ஆடை அலங்காரங்களை அகற்றினார்.

நான்கு கரங்களுடன் நின்ற நிலையில்,சங்கு மற்றும் பிரயோக சக்கரத்துடன் அமைந்த தேவியின் சிலை பக்கத்தில் உள்ள குளத்தில் இருந்து எடுத்து வந்து இங்கே நிர்மாணித்து உள்ளனர். சோழர் கால கலையம்சம்.

பாதம் தவறிய பாதையில் இச்சிறிய விசூர் கிராமத்தில் காணக்கிடைத்த அறியா சரித்திரச் சின்னங்கள்.
இது போல் எத்தனை அறியா சரித்திர தடங்கள் சிறிய கிராமங்களில் மறைந்துள்ளதோ!

https://www.facebook.com/share/p/1B6uzSNrkU/

 #சோழர் கால எச்சங்கள்,விசூர் கிராமம், மானாம்பதி,காஞ்சி செய்யாறு பெருவழி பாதை:பாதங்கள் தவறிய பாதையில் விசூர் என்ற அறியா க...
06/06/2026

#சோழர் கால எச்சங்கள்,விசூர் கிராமம், மானாம்பதி,காஞ்சி செய்யாறு பெருவழி பாதை:

பாதங்கள் தவறிய பாதையில் விசூர் என்ற அறியா கிராமத்தில் கண்ட சோழர் கால எச்சங்களாக சில போர் கடவுள் சிலைகள் வழிபாட்டில் உள்ளன,சில சிலைகள் இன்றும் கோயில் குளக்கரை அருகே காணப்பட்டது விபரமாக பதிவு விரைவில்....

 #சின்னதாமல் செரு வீரகல்,ஓர் மீள்ஆய்வு செய்த போது கிடைத்த தகவல் விரைவில்....
27/05/2026

#சின்னதாமல் செரு வீரகல்,
ஓர் மீள்ஆய்வு செய்த போது கிடைத்த தகவல் விரைவில்....

 #காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ ஸ்வாமி திருக்கோயிலின் முக்கிய திருவிழா,வைகாசி மாதம் கருடர் சேவை மற்றும் தேர் திருவிழா.அடுத்த பு...
26/05/2026

#காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ ஸ்வாமி திருக்கோயிலின் முக்கிய திருவிழா,
வைகாசி மாதம் கருடர் சேவை மற்றும் தேர் திருவிழா.

அடுத்த புதன் கிழமை 3ம் தேதி என்று தேர் திருவிழா நடைபெற இருப்பதால், தேர் தூய்மையாக்கி, வண்ணம் பூசும் பணிகள்
நடைபெற்று கொண்டிருந்தது.,

தேரில் அமைந்துள்ள எண்ணற்ற மரச்சிற்பங்கள் வியப்பூட்டுகின்றன.

 #அபூர்வமான சிலை வடிவம்,கயிலாசநாதர் ஆலயம்,தாரமங்கலம், சேலம்.தாரமங்கலத்தில் உள்ள கயிலாசநாதர் கோவிலில் அமைந்திருக்கும் வித...
24/05/2026

#அபூர்வமான சிலை வடிவம்,கயிலாசநாதர் ஆலயம்,தாரமங்கலம், சேலம்.

தாரமங்கலத்தில் உள்ள கயிலாசநாதர் கோவிலில் அமைந்திருக்கும் வித்தியாசமான திருக்கோலம் இது, மும்மூர்த்திகளும் ஒரே சிலையில் வித்தியாசமாக வடிக்கப்பட்டுள்னர். அதில் சிவபெருமான் விங்க வடிவில் , ஆவுடையாராக மாறியுள்ளார் மகாவிஷ்ணு. பிரம்மதேவர் கூட நான்முகனாக மாறுவதற்கு முன்பு இருந்த ஐந்து முகங்களுடன் காட்சியளிக்கும் அபூர்வ தோற்றம்.

விஷ்ணுவும், பிரம்மனும், சிவபெருமானின் அடியையும், முடியையும் தேடும் போட்டியில் அது காண இயலாமல் போனதால் இருவரும் சிவனை பூஜிக்க அவர் சிவலிங்க வடிவில் இருவருக்கும் காட்சியளித்தார்.

அடி முடி தேடிய வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில், அடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணு சிவலிங்கத்தின் அடியில் ஆவுடையராக மாறியுள்ளார்.அதே போல் முடியைத் தேடிச் சென்ற பிரம்மன், லிங்கத்தின் மேற்பகுதியை தன்னுடைய கையில் தழுவியபடி காட்சியளிக்கிறார்.

தாரமங்கலம்:
https://www.facebook.com/share/p/1EfmacuaQM/

 #சர்வதேச அருங்காட்சியக தினம் இன்று,மே 18 அன்று கொண்டாடப்படுகிறது.வேலூர் கோட்டை உள்ளே இரண்டு, மத்திய அரசு மற்றும் மாநில ...
18/05/2026

#சர்வதேச அருங்காட்சியக தினம் இன்று,மே 18 அன்று கொண்டாடப்படுகிறது.

வேலூர் கோட்டை உள்ளே இரண்டு, மத்திய அரசு மற்றும் மாநில அருங்காட்சியகம் இயங்குகின்றது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கிடைத்த வரலாற்று தடயங்களை இங்கே காட்சிப்படுத்தியுள்ளனர்.

இரண்டு அருங்காட்சியாகமும் தூய்மையாகவும் சிறப்பாகவும் பராமரித்து வருகின்றனர் இத்துறை ஊழியர்கள்.

(பி.கு): மாநில அருங்காட்சியகம் புதிய தாக 12 அரங்குகளுடன் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

 # மஹிஷாசுரமர்த்தினி,திருமலைச்சேரி கிராமம்,வாலாஜா பேட்டை,வேலூர்: ஸ்ரீ சோமநாத ஈஸ்வரர் சிவாலயம் (பொ.ஆ.பி 948) அமைந்துள்ள வ...
07/05/2026

# மஹிஷாசுரமர்த்தினி,
திருமலைச்சேரி கிராமம்,வாலாஜா பேட்டை,வேலூர்:

ஸ்ரீ சோமநாத ஈஸ்வரர் சிவாலயம் (பொ.ஆ.பி 948) அமைந்துள்ள வீதியில் நான்கு வீடுகள் தள்ளி ஓர் மரத்தடியில் இருந்த இராட்டிர கூடர்களின் கைவண்ணத்தில் மிளிரும் நிலையில் ஓர் மஹிஷாசுரமர்த்தினியின் சிற்பம் சுமார் இரண்டு அடி உயரத்தில் ஒரு சிறிய அறையில் வைத்து வழிபடுகின்றனர் இவ்வூர் மக்கள்.

இராட்டிரகூடர்களின் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்து காட்டாக மஹிஷாசுரமர்த்தினி தனது எட்டுக் கைகளுடன் ஒரு கையில் மஹிஷனின் தலையைத் திருகித் தன் காலால் மிதித்துத் தன் பிறிதொரு கையால் நீண்ட கத்தியைக் கொண்டு கொல்கின்ற காட்சி சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.

மற்ற கைகளில் சங்கு, பிரயோகச் சக்கரம்,வில், கேடயம், அம்பு, மனிதத்தலை போன்றவை காட்டப்பட்டுள்ளன. அம்மையின் வலப்பக்கம் அவளின் வாகனமான சிங்கம் அமைந்துள்ளது. மார்பில் மார்புக்கச்சை, இடையில் அணிகலப்பட்டை தலையில் கரண்ட மகுடம், கைகளில் வளையல்கள் அணிந்த நிலையில் நேர்த்தியாக விளங்குகிறாள் அன்னை.

12°52'59.4"N 79°23'13.1"E

 #பொன்னியம்மன் ஆலயம்,சப்தமாதர்கள் அணிவகுப்பு, திருமலைச்சேரி,வாலாஜா வட்டம்,வேலூர்:வாலாஜா சுங்க சாவடி அடுத்து அமைந்த சென்ன...
02/05/2026

#பொன்னியம்மன் ஆலயம்,சப்தமாதர்கள் அணிவகுப்பு, திருமலைச்சேரி,வாலாஜா வட்டம்,வேலூர்:

வாலாஜா சுங்க சாவடி அடுத்து அமைந்த சென்ன சமுத்திரம் கிராமத்தை கடந்து 5 கி.மீ உட்புறமாக பயணித்தால், திருமலைச்சேரி என்கிற கிராமத்தின் நடுவே பழைமையான பொன்னியம்மன் என அழைக்கப்படும் ஆலயம் அமைந்துள்ளது.
பழைய ஆலயம் முன்புறம் தற்போது விரிவுபடுத்திள்ளனர்.

இவ்வாலய கருவறையில் பழைய கல் மண்டபத்தில்,ஒரே வரிசையில் அழகுற காணப்படுகிறது.
எழில்மிகு "சப்த மாதர்கள்" என்று அழைக்கப்படும் சிற்ப வடிவங்களான,

1.பிராமி
2.மகேஸ்வரி
3.கௌமாரி
4.வைஷ்ணவி
5.வாராகி
6.இந்திராணி
7.சாமுண்டி

என இச்சிலைகள்
10ம் நூற்றாண்டின் இராட்டிரகூட கலைப்பாணியில் உள்ளது,வரிசையில் முதலில் விநாயகர் சிற்பமும்,இவர்களுடன் யோகேஷ்வரர் என்ற சிவன் வடிவம் ஐயப்பன் என்றும்,பைரவர் சிற்பம் முருகன் என்றும், வைஷ்ணவி சிற்பத்தை இன்று பொன்னியம்மன் என்ற பெயரில் வணங்கி வருகின்றனர்.சப்த மாதர்கள் பாதங்கள் கீழே அவர்களுக்குரிய வாகன சிற்பம் மாற்றி அமைத்ததில் சிமெண்ட் தரை தளத்தில் புதையுண்டுள்ளது.

வென்றெடுக்கும் இடமெல்லாம் அக்கால மன்னர்கள் கட்டுவித்த ஆலயங்கள் ஆண்டுகள் பல கடந்தும், பல ஆட்சியர்களின் படையெடுப்புகளையும், இயற்கையின் சீற்றத்தை எதிர் கொண்டு எழிலுற காட்சியளிக்கின்றன!

திருமலைச்சேரி நடுகற்கள்:
https://www.facebook.com/share/p/17QcMc5NNa/

Address

Sathuvachari
Vellore
632009

Website

Alerts

Be the first to know and let us send you an email when வியக்கத்தக்க வேலூர் - Incredible Vellore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to வியக்கத்தக்க வேலூர் - Incredible Vellore:

Shortcuts

Share