27/04/2026
@அனைவருக்கும் அன்பு வணக்கம் .,
அன்பான வேண்டுகோள்.
கோயில் நன்கொடை #கல்வெட்டுகளில் ஜாதி பெயரை குறிப்பிட்டு இடம் பெறச்செய்யாதீர்கள்.
நமது பகுதியில் #கோயில் #ஆலயம், #வழிபாட்டுத்தலங்கள் கட்டுவது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும் இந்த கோயில் கட்டுமான பணிக்காக ஊர் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ,அமைப்புகள், கட்சிகள் ஆகிய இவர்களிடத்தில் இருந்து வரிப்பணம் அல்லது நன்கொடையாக பெறப்பட்டு கோயில் கட்டுமான பணியை கட்டி கொண்டாடி வருகிறீர்கள். அந்த கோயிலுக்குள் சாமி பெயரில் அழகிய சிலைகளுடன் காட்சிப்படுத்துகிறீர்கள். ஒவ்வொரு சிலைக்கும் ஒரு பெயர் வைத்து அதற்கான புராண வரலாறுகளை குறிப்பிட்டு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்கிறீர்கள்.
பொதுவாக ஒரு குடும்பத்தினர் அல்லது #குழந்தைகள், இளைஞர்கள் மாணவர்கள், பெண்கள் பொதுமக்கள் யாராவது கோயிலுக்கு நுழைந்து கோயில் உள்ள ஒவ்வொரு சிலையும் அதனுடைய புராணக்கதை, தன்மைகளை படித்து அல்லது கேட்டு அறிந்து கொண்டு வரும் பொழுது இந்த சாமி பெயர் இப்படியா இப்படியெல்லாம் இந்த சாமி இருக்குமா என்று ஒரு ஆச்சரியத்தோடு கேட்பார்கள். இப்படி அடுத்தடுத்த சிலைகளை குறித்து அறிந்து கொள்வார்கள்.
கோயில் உள்ள ஒவ்வொரு சிலை படைப்புகளையும் அறிந்து வரும் பொழுது கோயில் ஒரு பகுதியில் பெரிய கல்வெட்டு இருக்கிறது. இந்த கோயில் கட்டுமான பணிக்காக யாரெல்லாம் நன்கொடை, வரி கொடுத்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருக்கிறீர்கள் அது தேவையானது.
அதில் சமுதாயம் ஜாதி 1.... ........
சமுதாயம் 2.....
சமுதாயம் 3.......
இப்படி குறிப்பிட்டு இதனைச்சார்ந்தவர்கள் இவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்று அவர்களின் பெயருடன் ஜாதிகளை குறித்து கல்வெட்டில் இடம்பெறச்செய்யாதீர்கள்.
ஒரு நபர் நன்கொடையாக கொடுத்தார்கள் என்றால் அவரது பெயருடன் முழு விவரமாக தந்தையின் பெயரை குறிப்பிடுங்கள் அவரின் படிப்பு, தொழில் விவரங்கள், அவருக்கான அடைமொழி பட்டப்பெயர்களை குறிப்பிடலாம் இதுதான் சரியாக இருக்கும். இப்படி பொதுவாக குறிப்பிடும் பொழுது நாமும் அதிகமாக கோயிலுக்கு கொடுக்க வேண்டும் ,அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும்.இதை விட்டுவிட்டு இந்த ஜாதிக்காரர் இவ்வளவு ரூபாய் பணம் வரி ,நன்கொடை கொடுத்தார் என்று எல்லாரும் அறிந்து கொள்ளும் வகையில் கல்வெட்டில் இடம் பெற செய்யாதீர்கள்.
கோயிலுக்குள் சுற்றி வந்தவர்கள் சாமி சிலைகளின் பெருமைகள் தன்மைகளை படித்து வந்தவர்கள் திடீரென்று கல்வெட்டை பார்க்கும் பொழுது பெயருடன் (ஜாதி) குறித்து படிக்கும் பொழுது குழப்பம்,முரண்பாடு ஏற்படுகிறது.
கோயிலில் அனைத்து மனிதர்களையும் சமமாக பார்க்கக்கூடிய இடமாக காணப்படுகிறது. எல்லா மனிதரும் மனிதர் என்ற அடையாளத்தோடு பார்ப்போம். ஜாதி அடையாளத்தோடு பிரித்துப்பார்க்கும் எண்ணத்தை உண்டாக்க வேண்டாம்.
கோயில் வழிபாட்டு தலங்களில் அனைத்து மக்களிடையே #சமாதானமும் #அன்பும் ஒற்றுமையும் பெருகட்டும் அதுதான் கடவுள் விரும்புகிறார்.
அங்கு தான் #கடவுள் இருக்கிறார்.
Namma Vellur நம்ம வெள்ளூர் Namma Vellur Virudhunagar