08/09/2022
எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை உதைப்பந்தாட்ட அணிக்கான புதிய மேலங்கிகள் வெளியீடு
---------------------------------------
எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இன்று (07/09/2022) காலை பொது ஆராதனை ஒன்றுகூடல் நிகழ்வின் போது எதிர்வரும் 10 ஆம் திகதி மாகாண மட்ட உதைப்பந்தாட்ட போட்டிக்காக செல்லவுள்ள எம்முடைய மாணவர்களை மேலும் உற்சாகம் ஊட்டும் விதமாக உதைப்பந்தாட்ட அணிக்கான புதிய மேலங்கிகள் பாடசாலை அதிபர் A.C.M.ஹரீஸ் சேர் அவர்களின் தலைமையில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வினை எமது அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர் A.R.M.ஆசிக் சேர் மற்றும் ஒழுக்காற்றுக்குழு செயலாளர் A.L.முஹமட் இல்யாஸ் சேர் ஆகியோர் ஒழுங்கமைத்ததுடன் உடற்கல்வி ஆசிரியர்களானA.L.நௌபர் சேர், A.பௌசுல் அமீர் சேர்,N.M.முஹமட் ஸாலிக் சேர்,M.M.ரிப்கி அகமட் சேர், K.ரிஜ்ஹானா ஆசிரியை மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் M.A.M.றஸ்பாஸ் ஆகியோர் முன்னின்று நடாத்தினர்.
இம்மேலங்கிகளுக்குறிய அனுசரனையை வெளிநாட்டில் தொழில் புரியும் எமது அட்டாளைச்சேனையை சேர்ந்த சகோதரர் R.M ரகீப் அவர்கள் வழங்கியிருந்தார் எம் மாணவச்செல்வங்களின் நலனில் அக்கறை கொண்டு பேருபகாரம் வழங்கிய இந்த சகோதரருக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் பாலித்து பேருபகாரம் வழங்க போதுமானவனாக இருக்கிறான்.
மற்றும் இம்மேலங்கிகளை குறிப்பிட்ட சகோதரர் மூலமாக பெற்றுத்தர முழு மூச்சாக பாடுபட்ட ஆசிரியர் R.M.ஜெஸீல் அவர்களுக்கு எமது பாடசாலை சமூகம் சார்பான மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்
மேலும் எமது பாடசாலையில் நடைபெறும் நிகழ்வுகளுக்காக அனுசரனை வழங்கிவரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை சமூகம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
என கூறியவாறு
மாகாண மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் இம்மாணவர்கள் வெற்றி வாகை சூட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்குமாறு சகலரையும் வேண்டிக்கொண்டவனாக.
அல் ஹம்துலில்லாஹ்