16/07/2026
🚨 Facebook Live-இல் நிகழ்ந்த கொடூரம் - 10 வருட உழைப்பைத் தின்ற துரோகத்தின் பின்னணி!
🔴இலங்கையையே உலுக்கிய அந்த முகநூல் நேரலை மரணத்தின் பின்னணியில் இருக்கும் நெஞ்சை பிளக்கும் உண்மைச் சம்பவம் இதோ!
யார் இந்த தினேஷ்? என்ன நடந்தது?
இலங்கையின் கரந்தெனிய, தல்கஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய தினேஷ் விஜேவர்தன என்ற இளைஞனே இவ்வாறு முகநூல் நேரலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்டவர்.
வறுமைக் குடும்பத்தில் பிறந்து, எப்படியாவது குடும்பத்தைக் கரைசேர்க்க வேண்டும் என்ற கனவோடு, தனது 25ஆவது வயதில் கொரிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்து கொரியாவுக்குப் பயணித்தார் தினேஷ்.
🏠 வியர்வை சிந்திய உழைப்பும்... ஏமாற்றிய தாயும்!
கொரியாவின் கடுமையான குளிரிலும் வெயிலிலும் தினேஷ் சிந்திய ஒவ்வொரு சொட்டு வியர்வையும் பணமாக மாறியது.
பெற்ற தாயையும் அண்ணனையும் நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நோக்கில், தான் சம்பாதித்த அத்தனை பணத்தையும் தாயின் பெயருக்கே அனுப்பினார்.
"ஒருநாள் இந்த வீட்டை உனக்கு எழுதித் தருகிறேன்" என்று தாய் கொடுத்த வாக்கை நம்பி, 6 வருட உழைப்பில் ஒரு அழகான மாளிகையைக் கட்டியெழுப்பினார்.
⚡ இடிமேல் விழுந்த பேரிடி!
அண்மையில் இலங்கை திரும்பி திருமணமும் செய்துகொண்டார் தினேஷ். ஆனால், மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மனைவியின் தூண்டுதலால் வீட்டைத் தன் பெயருக்கு மாற்றுமாறு தாயிடம் கேட்கப்போன தினேஷுக்குப் பேரிடி காத்திருந்தது!
🚫 அவர் இரவும் பகலும் உழைத்துக் கட்டிய வீடு, ஏற்கனவே தாயாரால் அவரது அண்ணனின் பெயருக்கு ரகசியமாக எழுதி வைக்கப்பட்டுவிட்டது! பெற்ற தாயும், உடன் பிறந்த சகோதரனும் செய்த இந்தத் துரோகம் அவரை மன ரீதியாக முற்றாக உடைத்துப் போட்டது.
🧾 எஞ்சியதையும் சுட்டெரித்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!
கையில் மிஞ்சியிருந்த சொற்பப் பணமும், ஒரு வேன் (Van) வண்டியும் மட்டுமே அவரிடம் இருந்தன. இந்நிலையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலிருந்து (Income Tax) வந்த கடிதம் அவரது 10 வருட உழைப்பை அப்படியே சுட்டெரித்தது.
பெரிய தொகையொன்றை வரியாகச் செலுத்த வேண்டியிருந்ததால், வேனை விற்றுக் கிடைத்த பணத்தைக் கொண்டு வரியைச் செலுத்தி முடிக்க, அவரிடம் எஞ்சியது வெறும் 15 இலட்சம் ரூபாய் மட்டுமே! 💸📉
😔 சோகத்தில் முடிந்த போராட்டம்!
10 வருடக் கனவு, மாளிகை, குடும்பம் என அத்தனையையும் இழந்து நடுத்தெருவில் நின்ற தினேஷுக்கு, சுற்றத்தாரின் நிந்தனைகளையும், நிச்சயமற்ற எதிர்காலத்தையும் தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கவில்லை. இறுதியில் முகநூல் நேரலையில் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
எத்தனையோ துரோகங்கள்... ஆனாலும் வாழ வேண்டும்!
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. நம்மை ஏமாற்றியவர்கள் பார்த்துப் பொறாமைப்படும் படி வாழ்ந்து காட்டுவதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஆகச்சிறந்த தண்டிப்பாகும்!
வறுமை அணுஅணுவாகக் கொல்லும் தான், சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை வரலாம் தான்... ஆனாலும் வாழ வேண்டும்! போராடினால் நிச்சயமாக ஒருநாள் நிறைவாக வாழலாம்!