07/11/2025
தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தில் புலமைப் பரீட்சை பரிசளிப்பு விழா
தெலும்புகஹவத்தை முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் தேர்வை எழுதிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, அதிபர் திருமதி ரியாஸா அவர்களின் தலைமையில், 06.11.2025 வியாழக்கிழமை அன்று பாடசாலை கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக தமிழ் வலயக் கல்வி தமிழ்ப் பிரிவுப் பணிப்பாளர் திரு. ராசிக் அவர்களும், வலயக் கல்வி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அசீமா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஐந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவில், வெட்டுப் புள்ளிக்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற எட்டு (08) மாணவர்களுக்கு விசேட பரிசுகள் Taita steel, Peoples bank, SDEC, Tata timber, Insee cement company ஆகியவற்றால் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பரீட்சைக்குத் தேற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஐந்து அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள். ஜஸாக்குமுல்லாஹு ஹைரா.