04/08/2026
මෙරට සමස්ත තාරුණ්යය වෙනුවෙන් සකස් කෙරෙන ජාතික තරුණ ප්රතිපත්තියට ඔබේ අදහස් සහ යෝජනා වැදගත් .....
මෙරට සමස්ත තරුණ ප්රජාව ඉලක්ක කර ගනිමින් නිර්මාණය කෙරෙන තරුණ ප්රතිපත්තිය වෙනුවෙන් ජනතා අදහස් හා යෝජනා ලබා ගැනීම සිදු කළා. ඒ අනුව මේ වන විට එහි කෙටුම්පත සකස් කරලා තියෙනවා.
නමුත් අපි කල්පනා කළා, මේ කෙටුම්පත පිළිබඳවත් ඔබ සමඟ සාකච්ඡා කරන්න. එලෙස සාකච්ඡා කිරීමෙන් පසු අවසන් කෙටුම්පත සකස් කර, එය පාර්ලිමේන්තු අනුමැතිය සඳහා ඉදිරිපත් කිරීමයි සැලසුම.
2026 - 2035 කාල රාමුව වෙනුවෙන් සකස් කර ඇති මෙම ප්රතිපත්තිය, තරුණයන්ගේ සමස්ත සංවර්ධනය ඉලක්ක කරගත් නව රාමුවක් ලෙස සකස් කරලා තියෙනවා.
තරුණ ප්රතිපත්තිය ක්රියාත්මක කිරීමේදී මූලධර්ම 5ක්, ප්රතිපත්ති ඉලක්කයක්, ප්රතිපත්ති ප්රකාශන 8ක්, උපායමාර්ගික දිශානතීන් 12ක්, තිරසර සංවර්ධන ඉලක්ක (SDGs) හා සම්බන්ධ පුළුල් උපායමාර්ග 44ක් සහ ඒවා ක්රියාත්මක කිරීම සඳහා ක්රියාකාරී සැලැස්මක් (Action Plan) ඇතුළත්.
ඒ අනුව සකස් කර ඇති කෙටුම්පත පිළිබඳව තවදුරටත් ජනතා අදහස් හා යෝජනා ලබා ගැනීමට අදහස් කළේ, ඉදිරි අනාගතය වෙනුවෙන් නිර්මාණය කෙරෙන තාරුණ්යය උදෙසා සකස් කෙරෙන ජාතික තරුණ ප්රතිපත්තිය වඩාත් විධිමත් සහ ජනතා අනුමැතිය සහිත ප්රතිපත්තියක් බවට පත්කිරීමේ අරමුණින්.
මින් පෙර ජාතික තරුණ ප්රතිපත්තියක් පැවතිය ද, එය විධිමත් ලෙස බලාත්මක කර, ක්රියාකාරී සැලැස්මක් අනුව ක්රියාත්මක වී නොමැති බව අප හඳුනාගත්තා. මෙම තරුණ ප්රතිපත්තිය සකස් කරනුයේ නාමිකව නොව වඩාත් විධිමත් ලෙස ක්රියාත්මක කිරීමේ අරමුණ සහිතවයි.
පළාත් 9 තුළ ජනතාව සමඟ සාකච්ඡා කිරීමට සැලසුම් කරලා තියෙන්නෙ. ඒ අනුව එහි පළමු සාකච්ඡාව ඊයේ දකුණු පළාතේ පැවැත්වුණා. මාතර දිස්ත්රික් ලේකම් කාර්යාලයේ පැවැති සාකච්ඡාවට විශාල පිරිසක් එක්ව සිටියා.
බලශක්ති නියෝජ්ය අමාත්ය අර්කම් ඉල්ලෙයාස් මහතා, පාර්ලිමේන්තු මන්ත්රී ලාල් ප්රේමනාත් මහතා සහ අජන්ත ගම්මැද්ද යන මහත්වරුන් ද සහභාගී වූහ. එමෙන්ම තරුණ කටයුතු සහ ක්රීඩා අමාත්යාංශයේ , තරුණ කටයුතු අතිරේක ලේකම් සුමිත් ශාන්ත මහතා, මාතර දිස්ත්රික් ලේකම් චන්දන තිලකරත්න මහතා, මාතර අතිරේක දිස්ත්රික් ලේකම් කාංචනා තල්පාවිල මහත්මිය, ජාතික තරුණ සේවා සභාවේ දකුණු පළාත් අධ්යක්ෂ සරත් කොඩිකාර මහතා ඇතුළු විශාල පිරිසක් සහභාගී වුණා.
நாட்டின் முழுமையான இளைஞர் சமூகத்திற்காக உருவாக்கப்படும் தேசிய இளைஞர் கொள்கைக்கான உங்கள் கருத்துகளும் பரிந்துரைகளும் மிகவும் முக்கியமானவை…
நாட்டின் முழுமையான இளைஞர் சமூகத்தை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் தேசிய இளைஞர் கொள்கைக்காக பொதுமக்களின் கருத்துகளும் பரிந்துரைகளும் பெறப்பட்டன. அதன்படி, தற்போது அதன் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த வரைவு தொடர்பாகவும் உங்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று நாங்கள் எண்ணினோம். இவ்வாறு கலந்துரையாடல்களின் பின்னர் இறுதி வரைவு தயாரிக்கப்பட்டு, அது பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.
2026–2035 காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேசிய இளைஞர் கொள்கை, இளைஞர்களின் முழுமையான முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட புதிய கொள்கைச் சட்டகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக 5 அடிப்படைக் கொள்கைகள், ஒரு கொள்கை நோக்கம், 8 கொள்கை அறிக்கைகள், 12 மூலோபாய திசைகள், நிலையான அபிவிருத்தி இலக்குகள் (SDGs) உடன் தொடர்புடைய 44 விரிவான மூலோபாயங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயல் திட்டம் (Action Plan) ஆகியவை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனவே, தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரைவு தொடர்பாக மேலும் பொதுமக்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்கால இளைஞர் தலைமுறைக்காக உருவாக்கப்படும் இந்த தேசிய இளைஞர் கொள்கை, மக்களின் பரந்த ஒப்புதலுடனும் முறையான வடிவமைப்புடனும் அமைய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
முன்னதாக தேசிய இளைஞர் கொள்கை ஒன்று இருந்தபோதிலும், அது முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்பதையும், செயல் திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். எனவே, இந்த புதிய தேசிய இளைஞர் கொள்கை பெயரளவில் மட்டுமல்லாமல், திட்டமிட்டும் முறையாகவும் நடைமுறைப்படுத்தப்படும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.
இதற்காக நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் பொதுமக்களுடன் கலந்துரையாடல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கலந்துரையாடல் நேற்று தென் மாகாணத்தில் நடைபெற்றது. மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் எரிசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்லியாஸ், பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் மற்றும் அஜந்த கம்மத்த ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் இளைஞர் அலுவல்கள் மேலதிக செயலாளர் சுமித் சாந்த, மாத்தறை மாவட்டச் செயலாளர் சந்தன திலகரத்ன, மாத்தறை மேலதிக மாவட்டச் செயலாளர் காஞ்சனா தல்பாவில, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தென் மாகாண பணிப்பாளர் சரத் கொடிகார உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.