03/06/2026
எழுதிய 1330குறளில் ஒரு இடத்தில் கூட தமிழ் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை..
தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை
கடவுள் வாழ்த்துதான் பாடினார் ஏனெனில் தமிழ் என்பது மொழியே...
தமிழ்நாடு பற்றி குறிப்பிடவில்லை
உலகு பற்றிய குறிப்பிட்டுள்ளார் ஏனெனில் அந்த காலகட்டத்தில் மொழி ரீதியாக மாநிலம் பிடிக்கவில்லை
தமிழர் பெருமை பேசவில்லை உலக சான்றோர் பெருமை பற்றியே கூறியுள்ளார்.. காரணம் அந்த காலகட்டத்தில் மொழி ரீதியாக மக்கள் பிரிவினை பேசி வாழவில்லை
என் அப்பா அம்மா எனக்கு உயர்வுதான் அதற்காக எல்லோரும் அவர்களை உயர்வாக ஏற்றுகொள்ள வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த முடியுமா?, அல்லது மற்றவர்களின் அப்பா அம்மாவை இழிவாக பேச முடியுமா?
அதுபோல் தான் நமது தாய் மொழி நமக்கு உயர்வு ஆனால் இந்து மதத்தில் பல ஆயிரம் தாய்மொழி கொண்ட இனம் உண்டு இவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றே ஒன்றினைந்திட வேண்டும்
திருக்குறளில் இந்து என்ற வார்த்தை இல்லை என்றும் அதனால் அவர் இந்து இல்லை என்று பினாத்தினாள் எவ்வளவு பெரிய குறுக்கு புத்தி...
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில்
ஏசு பிறக்கவில்லை அதனால் கிருஸ்துவ மதம் உருவாகவில்லை
நபிகள் பிறக்கவில்லை அதனால் இஸ்லாமிய மதம் உருவாகவில்லை அதனால் உலகின் ஒரே வகையான வழிபாடுதான் இருந்த காரணத்தினால் அதற்கு மதம் பெயர் சூட்ட வேண்டிய அவசியம் இல்லை...
ஒரு ஊரில் ஒரேயொரு தெரு இருக்கும் போது அந்த தெரவுக்கு பெயர் இருந்திருக்காது...
முதலில் இருந்த தெருக்கு வடக்கே அதே ஊரில் இன்னோரு தெரு உருவாகும் போது முதலில் இருந்த தெருவுக்கு தெற்கு தெரு என்று பெயர் சூட்டவேண்டிய கட்டாயம் ஏற்றப்படுகிறது
ஒரு ஊரில் ஒரேயொரு பஸ் ஓடினால் அதற்கு நம்பர் சூட்ட மாட்டார்கள்
அதே ஊரில் இன்னொரு பஸ் புதிதாக விட்டால் முதலில் ஓடிய பஸ்க்கு 1ம் நம்பர் பஸ் என்றும் புதிதாக விட்ட பஸ்க்கு 2ம் நம்பர் பஸ் என்றும் பெயர் சூட்டுவார்கள்
அப்படிதான் ஆதிகாலத்தில் இருந்த நம் மதத்திற்கு பெயர் கிடையாது
புதிதாக கிருஸ்துவ மதம் இஸ்லாமிய மதங்கள் நுழைந்த போது வெள்ளையன் நம் மதத்துக்கு இந்துமதம் என்று பெயர் சூட்டினான்
சிலர் இவர் சமணரா, பௌத்தரா என்றும் வாதாடிப் பார்த்து தோற்றுப்போனார்கள்...
ஏனெனில் திருவள்ளுவர் பல இந்து தெய்வங்களைக் குறிப்பிட்டு குறல் எழுதியுள்ளார் ஆனால் ஒரு இடத்தில் கூட புத்தரை மகாவீரரை ஏசுவை பற்றி குறல் எழுதவில்லை
காரணம் சமணமோ பௌத்தமோ, தெய்வத்தைப் பற்றிப் பேசுவதில்லை..
திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் முதல் குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
இதன் பொருள் எழுத்துக்கள் அனைத்தும் 'அ' என்ற எழுத்தைத் தொடக்கமாகக் கொண்டுள்ளன. அதுபோலவே, உலகம் கடவுளை (ஆதிபகவனை)த் தொடக்கமாகக் கொண்டுள்ளது என்று பொருள் பட எழுதியுள்ளார்
ஆதிபகவன் என்ற சொல் தமிழ் வார்த்தை கிடையாது அது சமஸ்கிருத வார்த்தை
ஆதிபகவன் என்று இறைவனை புத்த சமண சமயங்களில் குறிப்பிட்டது இல்லை அதனால் இந்து மதத்தின் பெயராலேயே வள்ளுவர் குறல் எழுத துவங்கியுள்ளார்
வள்ளுவரோ தெய்வம் பற்றியும், வானுறையும் தெய்வம் பற்றியும் அடிக்கடி பேசுகிறார்.
சனாதன தர்மத்தில்தான் 'தெய்வம்' என்ற சொல் இருக்கிறது. இந்த சொல் 6 குறள்களில் இருக்கிறது.
திருவள்ளுவர் இந்து மதத்தவர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
குறள் 43:
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
குறள்: 50
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன்,
வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.
குறள் 55.
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.
தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
குறள் 619:
ஊழின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
குறள் 702.
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
குறள் 1023.
என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
கடவுள் வாழ்த்தில் இவர், கடவுளுக்குப் பயன்படுத்திய சொற்கள் எல்லாம் தேவாரம், திவ்வியப்பிரபந்தத்தில் வருகின்றன.
சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.
பகிர்வு.
゚viralシ #