District Secretariat Batticaloa

District Secretariat Batticaloa This is our official page currently running or which is share the activities actively! So please be aware of it!

The older pages are not managed by us due to some technical problems!

08/04/2026

இலங்கையை காப்போம் எரிசக்தி பாதுகாப்புத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

https://www.facebook.com/share/v/1GpgQ4N4im/

08/04/2026
எரிபொருள் விநியோக நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள்...
20/03/2026

எரிபொருள் விநியோக நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் விநியோக நெருக்கடி நிலையை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 19.03.2026 இடம் பெற்றது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோக நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வைத்தியசாலை, குடிநீர்வழங்கள், விவசாயம், மீன்பிடி மற்றும் பல தேவைகளுக்க முன் உரிமை அடிப்படையில் வழங்குவதற்கு இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
மாவட்டத்தில் சராசரி எரிபொருள் கொள்வனவை விட அதிகமான எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளமையினால் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என இதன் போது கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் மாட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு  மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு!!மட்டக்களப்பு  மாவட்ட செயலகத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் ...
05/03/2026

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு!!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.03.2026 மாலை இடம் பெற்றது.

கிராத் ஓதலுடன் இப்தார் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் இப் புனித ரமழான் மாதத்தில் அன்பையும் பாசத்தையும் சகோதரத்துவதத்தினையும் மேலும் வலுச்சேர்க்கும் முகமாக இந்நிகழ்வு அமையப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இதன் போது கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ரி.எம்.ரிஸ்வி அவர்களினால் புனித ரமழான் விசேட உரையின் போது நோம்பின் மகத்துவம் தொடர்பான கருத்துக்களை தெளிவூட்டினார்.

இந்நிகழ்வில் மெளலவி ருசைதுர் ரகுமான், மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.ஏப்.ஏ. சனீர், தேசிய உரச் செயலக பிரதி பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுதின், அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எ.எஸ்.எம். சியாத், மாவட்ட தகவல் தொடர் தொடர்பாடல் பிரிவின் உதவி பணிப்பாளர் சின்தா முபாஸ், ஓய்வு பெற்ற பிரதம கணக்காளர் எம்.எஸ்.பசீர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், அங்கர் முகவர் ருசைனி பாயிஸ் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உள்ளத்தில் ஆன்மிக உணர்வை நிலைநிறுத்தி பாவமீட்சிக்கான மகத்தான காலமாக நோன்பு காணப்படுவதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டமை சிறப்பம்சமாகும்.

இந் நிகழ்விற்கான அனுசரனையை போன்டரோ பிரான்ட் லங்கா பிறைவற் லிமிட்டற் வழங்கினர்.

இந் நிகழ்வு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் "முழு நாடும் ஒன்றாக"  தேசிய போதைப் பொருள் தடுப்பு வார  அங்குராப்பண நிகழ்வுமட்டக்களப்பு மாவட்டத்தில் "முழு...
05/03/2026

மட்டக்களப்பில் "முழு நாடும் ஒன்றாக" தேசிய போதைப் பொருள் தடுப்பு வார அங்குராப்பண நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் "முழு நாடும் ஒன்றாக" "ரட்டம எகட்ட " விஷபோதைப் பொருள் தடுப்பு வார அங்குராப்பண நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸ் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 03.03.2026 இடம் பெற்றது.

தேசிய செயற்பாட்டு சபையினால் நாடளாவிய ரீதியில் விஷ போதைப்பொருள் விற்பனை விநியோகத்தை கட்டுப்படுத்தல் மற்றும் பயன்பாட்டில் அடிமையானவர்களை பழக்கத்திலிருந்து விடுவிட்டதற்கும் புனர்வாழ்விற்கான ஆற்றுப்படுத்தல் விழிப்புணர்வு போன்ற பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு மாவட்ட ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் வழக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் மோகனகுமார், 243 படைப்பிரிவின் பிரிகேடியர் ராஜபக்ச, விமானப்படை உயர் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை அதிகாரிகள், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், திணைக்களம் சார் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புதுமுகப் பயிற்சி!!பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் நியம...
05/03/2026

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புதுமுகப் பயிற்சி!!

பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புதுமுகப் பயிற்சி இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.

பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் மட்டக்களப்பில் இருந்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களாகளுக்கான புதுமுகப் பயிற்சி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 03.03.2026 ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

10 நாட்களைக் கொண்ட குறித்த பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

குறித்த பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்ப உரையினை நிகழ்தியதுடன், இவர்கள் எவ்வாறாக தமது சேவையினை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்திருந்தார்.

மட்டக்களப்பில் "முழு நாடும் ஒன்றாக"   தேசிய செயல்திட்ட நிகழ்வுகள்அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் நாடள...
05/03/2026

மட்டக்களப்பில் "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல்திட்ட நிகழ்வுகள்

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல் திட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப. தினேஸ் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் 01.03.2026 இடம் பெற்றன.

இதன் போது "விற்கின்ற - அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்" - அகன்று செல்" எனும் வாசகத்தினை மையமாகக் கொண்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மார்ச் மாதம் 01 முதல் "முழு நாடும் ஒன்றாக - தேசிய செயல்" திட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் கொண்ட ஸ்டிக்கர்கள் பேருந்துகள், முற்சக்கர வாகனங்களில் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது நாட்டின் வளமான மாணவர்கள், இளைஞர் யுவதிகளின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் பற்றிய தகவல்களை 1818 எனும் இலக்கத்தினுடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Address

Thiraaimadu
Batticaloa
30000

Opening Hours

Monday 08:30 - 16:30
Tuesday 08:30 - 16:30
Wednesday 08:30 - 16:30
Thursday 08:30 - 16:30
Friday 08:30 - 16:30

Telephone

+94652224435

Alerts

Be the first to know and let us send you an email when District Secretariat Batticaloa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to District Secretariat Batticaloa:

Share