28/08/2026
නිලාවේලියේ දී විවෘත කිරීමට නියමිත කොරල් සංරක්ෂණ විද්යාගාරය
ශ්රී ලංකාවේ වෙරළබඩ හා සාගර පරිසර පද්ධතිය ආරක්ෂා කරගැනීමේ ජාතික වැඩපිළිවෙළ යටතේ ත්රිකුණාමලය, නිලාවේලි ප්රදේශයේ ස්ථාපිත කරමින් පවතින සුවිශේෂී කොරල් සංරක්ෂණ මධ්යස්ථානය සහ විද්යාගාර පරිශ්රය පෙරේදා (25) දින ගරු පරිසර නියෝජ්ය අමාත්ය ඇන්ටන් ජයකොඩි මහතාගේ විශේෂ නිරීක්ෂණයට ලක්විය.
ශ්රී ලංකාවේ නැගෙනහිර වෙරළ තීරය ආශ්රිතව හඳුනාගෙන ඇති කොරල් විශේෂ 245 අතුරින් දුර්ලභ ගණයේ පවතින බ්ලැක් කොරල් (Black Coral) සහ රෙඩ් කොරල් (Red Coral) වැනි විශේෂ සංරක්ෂණය කිරීම මෙම මධ්යස්ථානයේ ප්රධාන අරමුණයි. එම දුර්ලභ ගණයේ කොරල් විශේෂ මෙහිදී සංරක්ෂණය කිරීමට සහ කෘතිමව වගා කිරීමට අවශ්ය පියවර ගෙන ඇති අතර, දැනටමත් එය සාර්ථකව ප්රතිඵල අත්කරගෙන තිබේ.
සාගරයේ පවතින ස්වභාවික උෂ්ණත්වය සහ පාරිසරික තත්ත්වයන් කෘතිමව විද්යාගාර තුළ ප්රතිනිර්මාණය කරමින් කොරල් වගා කිරීම හා නැවත මුහුදු පත්ලේ රෝපණය කිරීම මෙහි මූලික කටයුතු වන අතර, මෙවසරේ සැප්තැම්බර් මස අවසන් වන විට මෙහි ඉදිකිරීම් අවසන් කිරීමට නියමිතය.
ඉදිරියේදී මෙය විශ්වවිද්යාල සිසුන්, පර්යේෂකයන් මෙන්ම මහජනතාව සඳහා කොරල් කෞතුකාගාරයක් හා පර්යේෂණ මධ්යස්ථානයක් ලෙස විවෘත වීමට නියමිත අතර, මේ හරහා කොරල් සම්බන්ධ පර්යේෂණ කටයුතු පුළුල් කිරීමට අපේක්ෂා කෙරේ.
මෙම ව්යාපෘතිය රජයේ තිරසාර පාරිසරික ප්රතිපත්තිය බිම් මට්ටමින් ප්රායෝගිකව ක්රියාත්මක වීමක ප්රතිඵලයක් වන අතර දේශගුණික විපර්යාස හමුවේ රටේ සංවේදී සාගර ජෛව විවිධත්වය සුරැකීම, සාගර සම්පත් තිරසාර ලෙස කළමනාකරණය කිරීම සහ අනාගත පරපුර උදෙසා ස්වභාවික පරිසර පද්ධති සුරක්ෂිත කිරීම වෙනුවෙන් වූ මෙවැනි සුවිශේෂී පාරිසරික සංරක්ෂණ ව්යාපෘති රැසක් දිවයින පුරා ඉදිරියේදී ක්රියාත්මක කිරීමට සැලසුම් කර ඇත.
இலங்கையின் கரையோர மற்றும் கடல்சார் சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான தேசிய திட்டத்தின் கீழ், திருகோணமலை நிலாவெளி பகுதியில் நிறுவப்பட்டு வரும் பவளப்பாறை பாதுகாப்பு நிலையம் மற்றும் ஆய்வக வளாகத்தை சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி அவர்கள் கடந்த (25) ஆம் திகதி நேரில் சென்று பார்வையிட்டார்.
இலங்கையின் கிழக்குக் கடற்கரையோரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 245 பவளப்பாறை இனங்களில், மிகவும் அரிதான கறுப்பு பவளம் (Black Coral) மற்றும் சிவப்பு பவளம் (Red Coral) போன்ற அரிய வகை இனங்களைப் பாதுகாப்பதே இந்த நிலையத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த அரிய வகை பவளப்பாறைகளைப் பாதுகாப்பதற்கும், அவற்றைச் செயற்கை முறையில் வளர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடலின் இயல்பான வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளை ஆய்வகத்திற்குள் செயற்கையாக மீளுருவாக்கம் செய்து பவளப்பாறைகளை வளர்ப்பதும், பின்னர் அவற்றை மீண்டும் கடலடியில் நடுவதுமே இதன் பிரதான செயற்பாடாகும். இவ்வருட செப்டம்பர் மாத இறுதிக்குள் இதன் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது பல்கலைக்கழக மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்காக பவளப்பாறை அருங்காட்சியகமாகவும் ஆய்வு மையமாகவும் திறக்கப்படவுள்ளதுடன், பவளப்பாறைகள் தொடர்பான ஆய்வுகளை விரிவுபடுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் அரசாங்கத்தின் நிலையான சுற்றாடல் கொள்கை நடைமுறை ரீதியாகச்
செயற்படுத்தப்படுவதன் பிரதிபலிப்பாகும். காலநிலை மாற்றங்களுக்கு மத்தியில் நாட்டின் உணர்திறன் மிக்க கடல்சார் பல்லுயிர் தன்மையைப் பாதுகாக்கவும், கடல் வளங்களை நிலையான முறையில் முகாமைத்துவம் செய்யவும், எதிர்கால சந்ததியினருக்காக இயற்கை சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும் இதுபோன்ற பல முக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களை நாடு முழுவதும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
The coral conservation laboratory set to open in Nilaveli
Under the national initiative to protect Sri Lanka’s coastal and marine ecosystems, the exceptional Coral Conservation Centre and Laboratory complex currently being established in Nilaveli, Trincomalee, was formally inspected by the Deputy Minister of Environment, Anton Jayakody, on August 25.
Out of the 245 coral species identified along Sri Lanka’s eastern coastline, the primary focus of this facility is the conservation of highly rare species, including Black Coral and Red Coral. Necessary measures have been taken to conserve and artificially propagate these rare varieties, yielding successful outcomes already.
The core operations of the centre involve artificially replicating natural marine temperatures and environmental conditions within the laboratory to cultivate corals, which are subsequently outplanted onto the seabed. Construction is scheduled for completion by the end of September this year. In the future, this facility will open to university students, researchers, and the general public as a Coral Museum and Research Centre, aiming to expand scientific marine research.
This project demonstrates the practical, on-the-ground ex*****on of the government’s sustainable environmental policy. To safeguard vulnerable marine biodiversity against climate change, ensure the sustainable management of oceanic resources, and preserve natural ecosystems for future generations, several similar conservation initiatives are planned for rollout across the island.