08/01/2025
கரவெட்டி மத்தி
===================
எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கரவெட்டி மத்தி பிரிவு மக்களுக்கு,
______________________
09.09.2019 இல் J367 கரவெட்டி மத்தி பிரிவிற்கு கிராம அலுவலராக நியமனம் பெற்றதில் இருந்து இன்றுவரை எனது அதிகாரத்திற்கு உட்பட்டு செய்யக்கூடிய சேவைகளை உங்களுக்கு இயன்றவரை வழங்கியுள்ளதாக நம்புகிறேன். என்னையும் அறியாது ஏதும் தவறுகளால் யாருக்கும் நெருடல்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்புகேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை காலமும் எனது பிரிவின் கடமைகளுக்கு பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய எனது சக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்பு பொறுப்பாளர்கள் RDS, WRDS, மகளீர் அமைப்பு, சமுர்த்தி சங்கங்கள், சிவில் குழு, கமக்காரர் அமைப்பு, கோவில், பாடசாலை, முன்பள்ளி, சனசமூக நிலைம் ஆகியவற்றின் நிர்வாகங்களுக்கும் மற்றும் என்னுடன் எப்போதும் பல்வேறு வேலைதிட்டங்களுக்கும் உடன் வருகைதந்து ஒத்துழைப்பு வழங்கும் ஆண்கள், பெண்கள் அணியினர் ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக்கொள்வதுடன், தொடர்ந்தும் தங்கள் பிரிவின் அபிவிருத்திக்கு புதிதாக வரும் கிராம அலுவலருக்கு இதே ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கடமைரீதியான இடமாற்றங்கள் அரசசேவையில் சகஜம் என்பதன்பேரில் 05 வருடங்கள் 04 மாதங்கள் கரவெட்டி மத்தி பிரிவில் சேவைவழங்கிய திருப்தியில் இன்றுடன் கரவெட்டி மத்திபிரிவில் இருந்து விடைபெறுகிறேன்.
08.01.2025 புதன்கிழமையில் இருந்து J367 கரவெட்டி மத்தி பிரிவினை புதிய கிராம அலுவலரான திருமதி E.J.கஜீதா T.P: 0771754663 அவர்கள் பொறுப்பேற்பார்கள், அவருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
என்றும் உங்கள் சேவையில்
யோ.சசிகாந்தன்
கிராம அலுவலர்