09/06/2021
இன்றைய தினம் (09-06-2021)எமது யாழ் சழூக அபிவிருத்திக் கழகத்தினால் கொட்டடி சனசழூக நிலைய ,கற்குளம் ஸ்ரார் சனசழூக நிலைய மற்றும் சோலைபுரம் கவிபாரதி சனசழூக நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பேரிடரினால் பாதிக்கப்பட்ட (அன்றாட தினக்கூலி பெறும்)மக்களில் 57 பேருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.இவை ஒவ்வொன்றும் 1150/- ரூபா பெறுமதியானவை.இந்நிகழ்வில் எமது கழக மூத்த உறுப்பினரும் கடந்த காலங்களில் புலம்பெயர் உறவுகளிடம் இருந்து அதிக நிதியை பெற்று தந்தவருமான இ.துஸ்யந்தன்(டயஸ்)அவர்களும் பிரபல வர்த்தகரும் சழூக சேவையாளரும் எமது கழகத்திற்கான நிதி,ஆலோசனை போன்றவற்றை தந்து ஊக்க சக்தியாக திகழும் இ.மகிதரன்(மகிந்தன்)அவர்களும் எமது கழகத்திற்காக பல்வேறு பட்ட பல உதவிகளை இவ்வளவு காலமும் இலைமறைகாய் போன்று இருந்து செய்து தந்த இ.சதீபன்(சசிக்குட்டி)அவர்களும் நாம் எமது கழகத்தை ஆரம்பிப்பதற்கு ஆரம்பிப்பதற்கு காரண கர்த்தாவாக விளங்கியவர்களில் ஒருவரும் கேட்கும் போதெல்லாம் நிதியுதவிகளை அள்ளி வழங்கிய வர்த்தகர் பா.சஞ்சீவன்(மயில்)அவர்களும் கடந்த காலங்களில் பல இன்னல்களை சந்தித்த போது எம் கூடவே இருந்த சங்கீத்காந் அவர்களும் எமது கழகத்தின் சிறுவயது தம்பியாக கருதப்படும் கு.பனிஸ்ரன்(சரக்கரை)மற்றும் கிராம சேவகர்களில் ஒருவரான திருமதி சோபனா பகீரதன் அவர்களும் கொட்டடி சனசழூக நிலைய நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டு உலர்உணவுப் பொருட்களை வழங்கினர்.இன்றைய நிகழ்வுக்காக மக்களை ஒழுங்கு படுத்திய த.துவாரகன்(தினேஸ்) மற்றும் எமது கழக ஆலோசகர் ச.வசந்த் ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.