23/08/2026
🌺🙏 மாபெரும் தாகசாந்தி திருப்பணி – மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலய பாதயாத்திரை 22.08.2026 🙏🌺
காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 5,000 அடியார்கள் பக்தி பூர்வமாகக் கலந்து கொண்ட மண்டூர் ஆலயத்திற்கான மாபெரும் பாதயாத்திரை, நேற்றைய தினம் (22.08.2026) சிறப்பாக இடம்பெற்றது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற “சின்னக் கதிர்காமம்”, “தில்லை மண்டூர்” என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தை நோக்கி அதிகாலை வேளையில் பாதயாத்திரையாக வந்த அடியார்களின் தாகம் தீர்க்கும் புனித கைங்கரியமாக, SPAND & SAIVAA அமைப்புகளின் சமயப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களால் தாகசாந்தி திருப்பணி முன்னெடுக்கப்பட்டது. 🙏🌺
அதிகாலை ஆரம்பிக்கப்பட்ட இத்திருப்பணி சிறப்பாக நடைபெற்றது. இதன்போது பல்வேறு பிரதேசங்களில் இருந்து தொடர்ந்து பாதயாத்திரையாக வருகை தந்த ஆயிரக்கணக்கான அடியார்களுக்கு நீராகாரம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி, அவர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் சேவை வழங்கப்பட்டது. 💧🙏
அடியார்களின் பாதயாத்திரையில் ஒரு சிறு ஆறுதலாக இருந்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்கும் இப்புனிதப் பணியை சிறப்பாக முன்னெடுக்க தங்களது நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த SPAND & SAIVAA அமைப்புகளின் நிர்வாக உறுப்பினர்கள், உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும். 🙏❤️
விசேடமாக, இப்பணியின் ஆரம்பகட்ட ஏற்பாடுகள் முதல் களப்பணி வரை பொறுப்பேற்று சிறப்பாக முன்னெடுத்த அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களான மண்டூரைச் சேர்ந்த சிந்துஜன், பிரணவன், கேதீஸ், SPAND அமைப்பின் உப தலைவர் திலக்சன், மூத்த உறுப்பினர் ஜெயந்த மற்றும் கவிமகள் ஜெயவதி ஆகியோரின் தலைமையில் இப்பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது. 🙏🌺
அன்புடன் வழங்கிய கரங்கள் பல…
அர்ப்பணிப்புடன் உழைத்த உள்ளங்கள் பல…
ஆண்டவனை நாடி பாதயாத்திரை மேற்கொண்ட அடியார்களின் தாகம் தீர்த்த மனநிறைவு ஒன்று… 🌺
முருகப்பெருமானின் திருவருளோடு நிறைவு பெற்றது இந்த தாகசாந்தி திருப்பணி! 🙏🌺
ஆலயங்களில் அன்னதானம் மற்றும் தாகசாந்தி போன்ற பணிகளை முன்னெடுப்பதோடு மட்டுமல்லாமல், சமயப் பணிகளை வளர்த்தெடுத்தல், இளைய தலைமுறையினரை சமய மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடுத்துதல், தன்னார்வத் தொண்டர்களை உருவாக்குதல், ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் சமூகத்திற்கு சேவை செய்தல் எனப் பல்வேறு தளங்களில் தொடர்ந்து செயற்பட்டு வருவது எமது அமைப்புகளின் நோக்கமாகும். 🌺🙏
இப்புனிதப் பணிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும், எமது அமைப்புகளின் நிர்வாக உறுப்பினர்களுக்கும், சமயப் பணியாளர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும் SPAND & SAIVAA அமைப்புகளின் சார்பில் மனமார்ந்த நன்றிகள். 🙏❤️
“அடியவர்க்கு செய்யும் சேவை ஆண்டவனுக்கே செய்யும் பூஜை.” 🌺🙏
தொடர்ந்து இத்தகைய சமய மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுத்து, அன்பை விதைத்து, சேவையை வளர்த்து, சமய உணர்வை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம். 🌺
🙏 வேல் முருகா! 🙏
SPAND & SAIVAA
மட்டக்களப்பு / அம்பாறை
#தாகசாந்தி_திருப்பணி #மண்டூர் #ஸ்ரீமுருகன் #காரைதீவு_மண்டூர்_பாதயாத்திரை #பாதயாத்திரை #சமயப்பணி #அடியார்சேவை #வேல்முருகா