சுதுமலை மத்திய சனசமூக நிலையமும் வாசிகசாலையும்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • சுதுமலை மத்திய சனசமூக நிலையமும் வாசிகசாலையும்

சுதுமலை மத்திய சனசமூக நிலையமும் வாசிகசாலையும் நாடு சிறக்க நற்பணி புரிவோம்

எமது நிலையத்தின் இன்னொரு சமூக சேவை அங்கமான சுதுமலை தாய் சேய் நல சிகிச்சை நிலைய கட்டுமான பணிகள் தங்கு தடையின்றி நிறைவேறும...
09/06/2026

எமது நிலையத்தின் இன்னொரு சமூக சேவை அங்கமான சுதுமலை தாய் சேய் நல சிகிச்சை நிலைய கட்டுமான பணிகள் தங்கு தடையின்றி நிறைவேறும் பொருட்டு,
இலங்கையின் பிரபல வெதுப்பக உற்பத்தி நிறுவனமான 'தினேஸ்' வெதுப்பக உரிமையாளர் அவர்கள் ரூபா ஒரு இலட்சம் நன்கொடையாக வழங்கினார்.
நிலையத்தின் நிதித்தேவையை அறிந்து தமது திருமண ஆண்டு நிறைவு நன் நாளாகிய இன்றைய தினம் நிலையம் தேடிவந்து நன்கொடையை வழங்கிய திரு. திருமதி தினேஸ் அவர்களுக்கு நிலையத்தின் சார்பான நன்றிகளும்
இனிய திருமண நன்நாள் வாழ்த்துகளும்..🎉🎉

யாழ்ப்பாணம் சுதுமலையில் அமைந்திருக்கும் தாய் சேய் நல சிகிச்சை நிலையம் தான் இது.பத்து வருடங்களுக்கு முன்பு பொதுமக்களின் ந...
24/05/2026

யாழ்ப்பாணம் சுதுமலையில் அமைந்திருக்கும் தாய் சேய் நல சிகிச்சை நிலையம் தான் இது.

பத்து வருடங்களுக்கு முன்பு பொதுமக்களின் நிதி உதவிகளைக் கொண்டு காணி கொள்வனவு செய்யப்பட்டு மேற்படி சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் மூலம் நீண்ட காலமாக பயன்பெறு பிரதேசத்தில் நிரந்தரக் கட்டிடம் இல்லாத குறை நிவர்த்தி செய்யப்பட்டது.

இங்கே நடைபெறும் சேவைகள் அனைத்தும் முற்றுமுழுதான அரச சேவைகள்.
சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பணிமனையின் கீழ் சேவைகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது.

சுதுமலை வடக்கு(J/129),
சுதுமலை தெற்கு(J/130),
மானிப்பாய் கிழக்கு(J/138),
மானிப்பாய் தெற்கு(J/139)

ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த கர்ப்பவதிகளும் ஐந்து வயது வரையிலான குழந்தைகளும் கட்டாயம் வந்து பயன்பெற வேண்டிய நிலையமாக இது திகழ்கிறது.

மருத்துவர் அறை, பாலூட்டும் தாய்மார் அறை, ஊசி போடும் அறை, களஞ்சிய அறை என இருக்கவேண்டிய வசதிகள் மருத்துவர் அறையோடு மட்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்த காலந்தொட்டு சுருங்கியிருந்தது.

காணி கொள்வனவு, கட்டுமானம் என செலவுகள் பெரிதாக இருந்ததால் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அவசியமான அனைத்து வசதிகளையும் அங்கே ஏற்படுத்த முடியவில்லை.

எனவே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல நெருக்கடிகளோடு இயங்கிவந்த இந்நிலையத்தின் உரிய தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு மருத்துவக் குழுவினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பாளர்களான சுதுமலை மத்திய சனசமூக நிலையத்தினர் அண்மையில் அபிவிருத்தி செய்ய முன்வந்தனர்.

அதன் அடிப்படையில் மீண்டும் பொதுமக்களிடம் நிதி சேகரிக்கப்பட்டு தற்போது குறை நிவர்த்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது புதிய கட்டிடங்களோடு
80% மான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மேலும் பணிகளை பூர்த்தி செய்து மின்சார உபகரணங்கள் மற்றும் தேவையான தளபாடங்கள் ஆகியவற்றை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இருப்பதால் இந்நிலையதில் பயன்பெற்ற, பயன்பெறுகின்ற மக்கள் மட்டுமல்லாது பொதுமக்கள், நலன்விரும்பிகள் ஆகியோரின் உதவிகளையும் சுதுமலை மத்திய சனசமூக நிலையத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

பொறியியலாளர் ஒருவரின் மேற்பார்வையில் பணிகள் நேர்த்தியாகவும் நிதிச்செலவுகள் வீண்விரயம் இன்றியும் அதிக பட்ச நேர்மையுடனும் நடைபெற்று வருகிறது.

இந் நிலையத்தின் வளர்சிக்கு உதவுதல் மிகப்பெரிய புண்ணியச்செயல் என்பதால்,
சுதுமலை தாய் சேய் நல சிகிச்சை நிலையமானது மிக விரைவில் பூரணம் பெற நல் உள்ளங்களின் உதவிகளை எதிர்பார்த்து நிற்கின்றார்கள் சுதுமலை மத்திய சனசமூக நிலைய உறவுகள்.

நன்றி.

(முடிந்தால் இந்த தகவலை பகிருங்கள் உறவுகளே)

20/05/2026
26/04/2026

அன்பான உள்ளங்களிடம் ஓர் உருக்கமான வேண்டுகோள்
🙏🙏🙏

உங்கள் உடல் உறுப்புகளை பாதுகாக்கும் சக்திவாய்ந்த உணவுகள்.நாம் தினமும் சாப்பிடும் உணவுகள் வெறும் பசியை தீர்க்க மட்டுமல்ல…...
15/04/2026

உங்கள் உடல் உறுப்புகளை பாதுகாக்கும் சக்திவாய்ந்த உணவுகள்.

நாம் தினமும் சாப்பிடும் உணவுகள் வெறும் பசியை தீர்க்க மட்டுமல்ல… சரியான உணவுகளை தேர்வு செய்தால், அவை நம் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் பாதுகாக்கும் இயற்கை மருந்தாகவும் செயல்படும்! 🌿

இப்போது பலரும் பகிர்ந்து வரும் இந்த “உடல்–உணவு” தொடர்பை விரிவாக பார்ப்போம் 👇

🩸 இரத்தம் (Blood)
→ பீட்ரூட், மாதுளை, பூண்டு
இவை இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், ஹீமோகுளோபின் அளவை உயர்த்தவும் உதவுகின்றன.

🧠 மூளை (Brain)
→ நீலப்பழம் (Blueberries), வால்நட், மஞ்சள்
மூளை செயல்பாட்டை மேம்படுத்தி நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.

👀 கண்கள் (Eyes)
→ கேரட், கீரை (Couve), சக்கரைவள்ளிக்கிழங்கு
விட்டமின் A நிறைந்த இவை கண் பார்வையை பாதுகாக்க உதவும்.

🦠 குடல் (Intestine)
→ கற்றாழை (Aloe Vera), வெள்ளரி, பச்சை ஆப்பிள்
ஜீரணத்தை சீராக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

🫘 சிறுநீரகம் (Kidneys)
→ கிரான்பெர்ரி, அஜ்வைன் (Celery), வெள்ளரி
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன.

🛡️ கல்லீரல் (Liver)
→ பீட்ரூட், எலுமிச்சை, பூண்டு
கல்லீரலை சுத்தமாக வைத்துக் கொண்டு டிடாக்ஸ் செயல்பாட்டை மேம்படுத்தும்.

🫁 நுரையீரல் (Lungs)
→ அன்னாசி, இஞ்சி, பூண்டு
சுவாச அமைப்பை சுத்தமாக வைத்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

💡 முக்கிய குறிப்பு:
இந்த உணவுகள் உடலுக்கு ஆதரவாக இருந்தாலும், அவை முழுமையான மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகாது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமநிலையான உணவு + உடற்பயிற்சி + மருத்துவ ஆலோசனை அவசியம்.

📌 சிறிய சுருக்கம்:
சரியான உணவு = ஆரோக்கியமான உடல் 💚
உங்கள் தட்டில் இருக்கும் உணவே உங்கள் உடலை காக்கும் மருந்து!

👉 இந்த பதிவை சேமித்து வைத்து, வாரம் தோறும் பார்த்து பயன்படுத்துங்கள்!

👇 நீங்கள் இதில் எந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுகிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்!

இந்த முக்கியமான தகவலை உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள் ❗❗

15/04/2026

இன்று எமது நிலைய முன்றல் காட்சி.
15.4.2026

மருதடி பிள்ளையார் ஆலய தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்களை முன்னிட்டு எமது நிலையத்தின் நலன்விரும்பி திரு.ஜெயபாலதேவன் அவர...
15/04/2026

மருதடி பிள்ளையார் ஆலய தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்களை முன்னிட்டு எமது நிலையத்தின் நலன்விரும்பி
திரு.ஜெயபாலதேவன் அவர்களால் நிலைய முன்றலில் வருடா வருடம் அமைக்கப்படும் தாக சாந்தி நிலையம் 2026.

தாய் சேய் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற கட்டுமான வேலைகளும் உதவி செய்த உறுப்பினர்களும்.
06/04/2026

தாய் சேய் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற கட்டுமான வேலைகளும்
உதவி செய்த உறுப்பினர்களும்.

எமது நிலைய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சுதுமலை தாய் சேய் நல சிகிச்சை நிலையத்தின் புனர் நிர்மாண கட்டுமான பணிகள் 25.3.2026...
28/03/2026

எமது நிலைய நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சுதுமலை தாய் சேய் நல சிகிச்சை நிலையத்தின் புனர் நிர்மாண கட்டுமான பணிகள் 25.3.2026 அன்று சுப நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குடிசார் பொறியியலாளர் ஒருவர் கட்டுமானத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எமது உறுப்பினர்கள் பணிகளை மேற்பார்வை செய்து வருகின்றனர் .

இந்நிலையதில், வருடத்தில் சுதுமலை வடக்கு, சுதுமலை தெற்கு, மானிப்பாய் கிழக்கு,மானிப்பாய் தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த நூற்றுக் கணக்கான கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த மிகச் சிறந்த பணியில் நலன் விரும்பிகள் அனைவரையும் கை கோர்க்குமாறு அன்பாக வேண்டி நிற்கிறோம்.

நன்றி
🙏🙏🙏

அனைவரு‌ம் அறிய வேண்டியமுக்கியமான ஆரோக்கிய தகவல்:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::நீங்கள் செய்யும் ஒரு பகி...
23/03/2026

அனைவரு‌ம் அறிய வேண்டிய
முக்கியமான ஆரோக்கிய தகவல்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

நீங்கள் செய்யும் ஒரு பகிர்வு பலருக்கும் பயனுள்ளதாக அமையலாம்

*இருதய அடைப்பு*

எத்தனை அடைப்பு இருந்தாலும் பயம் வேண்டாம் மொந்தன் வாழைக்காயிருக்க பயமேன்!

ஆம் காய்கறி வைத்யமுறையிலின்று அனைத்து நோய்களிலிருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரசரும் சரி இதயத்துடிப்பும்சரி கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்கே வரராததால் வைத்தியர் ஆலோசனைப்படி தினமும் ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி காலை வெறும் வயிற்றில் மென்று தின்றால் இப்பொழுது அனைத்தும் கட்டுப்பாட்டில்

வாழைக்காயின் ரகசியம்;- இதயம் சீராக செயல்பட பொட்டாசியம்(துவர்ப்புச்சத்து மிக அத்தியாவசியமாகிறது.இந்த பொட்டாசியம் கொட்டிக்கிடக்கும் வாழைக்காயை தினம் பச்சையாக மென்றோ அல்லது மிக்சி ஜாரில் நீர் விட்டறைத்து கூழ்மமாகவோ சாப்பிட ஒரு நாளைக்குத்தேவையான பொட்டாசியம் வாழைக்காயின் மூலமே கிடைக்கிறது.வாழைக்காயில் நார்ச்சத்திகம் என்பதாலும் சி வைட்டமின்நிறைந்துள்ளதாலும் சுகருக்கும் மிகச்சிறந்த அருமருந்து இதில் மெக்னீசியம் இருப்பதால் உடலுக்குத்வையான கால்சியம் சத்தை உறிஞ்ச மெக்னீசியம் உதவுவதால் எழும்புக்கும் நல்லது.சி விட்டமினிருப்பதால் நுரையீரலும் வழுப்பெற்று சுத்திசெய்யப்படுகிறது.இதில் 913மிகி பொட்டாசியம் அதீததமென்பதால் கெட்டகொழுப்புகள் கட்டுப்படுத்தப்படுவதோடு இரத்த அழுத்தமும் சீரடைகிறது. தோலுக்கும் காய்க்குமிடையிலுள்ள பசை போன்ற பொருளில் விட்டமின்கள்B6,B12உள்ளதால் அடைப்புகள் சரிசெய்யப்படுகிறது.
மொத்தத்தில் தினம் ஒரு மொந்தன் வாழைக்காய் மாரடைப்பிலிருந்து தடுத்து இதயத்தை வாழவைக்கிறது.தொப்பையிருந்தாலும் கரைந்துவிடும். உடல் பருமன் குறையும். சோர்வாகயிருப்பவர்களையும் சுறுசுறுப்பாக்கும்வாழைக்காய் வயதானவர்களுக்கு மிகச்சிறந்த சஞ்சீவி

காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்.

உணவு பழக்கம் பழமொழி வடிவில்

காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

தன் காயம் காக்க வெங்காயம் போதும்

வாழை வாழ வைக்கும்

அவசர சோறு ஆபத்து

ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

இருமலை போக்கும் வெந்தயக் கீரை

உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

சித்தம் தெளிய வில்வம்

சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

சூட்டை தணிக்க கருணை கிழங்கு

ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

வாத நோய் தடுக்க அரைக் கீரை

வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

பருமன் குறைய முட்டைக்கோஸ்

பித்தம் தணிக்க நெல்லிக்காய்

உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”

Address

Thavady Manipay Road, SUTHUMALAI
Jaffna
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when சுதுமலை மத்திய சனசமூக நிலையமும் வாசிகசாலையும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category