18/08/2026
இது வரை அறியாத உண்மைச் சம்பவம்
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் பிரகலதன் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஹசன் மௌலானா அனுஹர் ஆகியோரை நேற்றைய தினம் - லஞ்ச, ஊழல் குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர்.
சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 20ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைதாகினர்.
🔴 இப்படித்தான் சிக்கினார்கள்
கடந்த 14ஆம் திகதியன்று மதியம் 1மணியளவில் sainthamaruthu புற நகர் பகுதியில் வைத்து இரண்டு நபர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்ததுடன்
1ம் நபரிடம் எந்த சான்றுப் பொருளும் கிடைக்கவில்லை
2ம் நபரிடம் கெரோயின் கைப்பற்றபட்டதுடன்
1ம் நபர் தான் போலீஸ் கைது செய்த விடயத்தை தனது வீட்டாருக்கு அறிவிக்க அவர்களும் உடன் விரைந்து சென்று நடந்த சம்பவத்தினை கேட்டு அறிந்து கொள்ளும் போது
2ம் நபர் தான் குற்றதை ஒப்புக்கொள்கிறேன் என்னை விட்டு விடுங்கள் நான் பொருள் வாங்கிய இடத்தை காட்டுவதாக இனங்கி போலீசாருடன் சென்று இன்னும் ஒரு நபரை arrest செய்து வந்தனர்.
அதற்கு அமைவாக போலீசும் அந்த 2ம் நபரை விடுவித்து விட்டு வந்தனர்
இதனை கண் முன்னே கண்ட
1ம் நபரின் வீட்டார் இது அநியாயம் என சத்தமிட நீங்கள் இங்கே பேசி காரியமில்லை court ல் பார்த்து கொள்ளுங்கள் நாங்கள் எங்களது கடமையை செய்வோம் என இருக்கமான தொணியில் கூறி இவர் இன்று கையில் இல்ல விட்டாலும் இவர் பாவனை செய்கிறார் என போலீசார் உறுதி செய்தனர்.
கோபமடைந்த வீட்டார் இவ்வாறான ஒரு பிள்ளை தேவயே இல்ல நீங்கள் உங்க கடமையை செய்யுங்கள் என கண் கலங்கி சொல்லிவிட்டு சென்றனர்.
மனசு தாங்க முடியாமல் அன்று இரவு இரவு சாப்பாடு எடுத்துட்டு பாக்க போலீஸ் நிலயம் வந்த வேளையில் அவர்களை OIC பிரேக்ளநாதன் தனது அறைக்குள் அழைத்து நீங்கள் உங்க பிள்ளையை பற்றி கவலை படாதீங்க .
இவர் இப்போதான் போதை பாவனைக்கு ஆரம்பிக்கிறார் அதனாலே பிரச்சினை இல்லை அதை நிறுத்தி கொள்ள ஏலும்.
இனிமேல் இவர் கூடும் நண்பர்களை நன்கு அவதனித்து கொள்ளுங்கள்.
நாங்கள் நாளைக்கே court ல் இதற்கானே fine ன கட்டி முடிக்குற மாறியாக செய்து தருகிறோம் என நம்பிக்கை அளித்தார்.
குறிப்பு
இதற்கிடையில் OIC க்கு பணம் தருவதாக சொல்லவும் இல்லை OIC கேக்கவும் இல்லை.
அவ்விடத்தில் OIC மொபைல் நம்பர் கொடுத்து இதுக்கு அப்புறம் என்ன சரி தேவை ஏற்பட்டா நேரடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறிஅவர்களின் நம்பரையும் பெற்றுக்கொண்டார்.
மறுநாள் 15ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 70mg தன் உடைமையில் வைத்திருந்ததாக போலீஸ் அறிக்கை கூறியாதற்கிணங்க குற்றத்தை ஒப்புக்கொண்டு 9000/= தண்டபானத்தினை செலுத்தி பல அறிவுறுத்தல்களுடன் விடுதலை செய்யப்பட்டார்.
15ம் திகதி மதியம் 3மணியளவில் OIC யின் போன்ல இருந்து parants க்கு call வந்தது மகன் எப்படி பாதுகாப்பா வந்துட்டாரா நல்லம் வேல எல்லாம் முடிச்சிட்டு ஈவினிங் என்ன வந்து சந்திங்க என OIC கூறினார்.
இதை பெரிசா நினைக்காம விட்டு விட்டாங்க
but OIC விர்ற மாதிரி தெரியல மறு நாளும் இருமுறை call பண்ணி வந்து meet பண்ணுங்க எனக்கூறினார்.
என்ன விஷயம் சொல்லுங்க sir என வினவ
இது ஒரு பெரிய கேஸ் நான் எண்ட பவர பயன்படுத்திதான் இவ்வளவு இலகுவா உங்களுக்கு முடிச்சி தந்து இருக்கோம் நாங்க இதுல சம்பந்தபட்டவங்க 4பேர் இருக்கோம் பார்த்து கவினீங்க என்று கூறினார்.
அதயும் பெரிசா பொருட்படுத்தாமல் ok sir பாப்போம் என கனக்கெடுக்காமே விட்டனர்.
பல முறை அழைத்தும் கண்டு கொள்ளாததினால் ஆத்திரமடைந்த OIC
மறுபடியும் அழைத்து கடும் தொணியில் பேசினார்.
இவரின் தேவையை உணர்ந்து உடனே சூட்சமமாக ok சார் சிறிது நேரத்தில் எடுக்கிறேன் எனக்கூரி ஆணைகுழுவின் உதவியை நாடி ஆணைக்குழுவின் அறிவுறுத்தளுக்கமைய
OIC க்கு அழைத்து எவ்வளவு பணம் கொண்டு வேணும் எனக் கேக்க OIC அதிகமா வேணும் நாங்க 4பேர் இருக்கோம் ஒரு ஆளுக்கு ஒரு 5000 கொடுங்க போதும் என கேட்டு கொண்டதிற்கிணங்க உரிய தொகை ஆணைக்குழுவால் தயார் செய்யபட்டு
சம்பவ தினம் பிரகலதன் - பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திலும் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றுவதால், அவர் நேற்றைய தினம், அங்கு சென்றிருந்தார்.
அதனால், குறித்த லஞ்சப் பணத்தை சந்தேக நபரிடமிருந்து பெற்றுக் கொள்ளுமாறு, சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கொன்ஸ்டபிள் அனுஹர் என்பவரிடம் பிரகலதன் கூறியுள்ளார்.
அதன்படி கொன்ஸ்டபிள் அனுஹர் பணத்தைப் பெறச் சென்றபோது, அங்கு தயார் நிலையிலிருந்த, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொலிஸ் பரிசோதகர் பிரகலதனும் கைது செய்யப்பட்டார். .