Janaza Announcement - Srilanka

Janaza Announcement - Srilanka janaaza announcement - Srilanka
(1)

கல்முனையை பிறப்பிடமாகவும், கொழும்பு - 02 கொம்பனி வீதியை வசிப்படமாகவும் கொண்ட Wekanda Clinic நிறுவுனரும் சமூக சேவகரும் எழ...
21/08/2026

கல்முனையை பிறப்பிடமாகவும், கொழும்பு - 02 கொம்பனி வீதியை வசிப்படமாகவும் கொண்ட Wekanda Clinic நிறுவுனரும் சமூக சேவகரும் எழுத்தாளரும் இலக்கிய ஆர்வலருமான டாக்டர் தாசீம் அஹமட் காலமானார்.

16/08/2026

fans

ஜனாஸா அறிவித்தல்பூலாச்சேனையில் கோழிக்கடை நடாத்திவரும் நரக்கள்ளியில் வசித்து வருபவருமான முஹம்மத் ஜாபிர் அவர்களுடய மகன் மு...
29/07/2026

ஜனாஸா அறிவித்தல்

பூலாச்சேனையில் கோழிக்கடை நடாத்திவரும் நரக்கள்ளியில் வசித்து வருபவருமான முஹம்மத் ஜாபிர் அவர்களுடய மகன் முஹம்மத் ஜப்ரான் அவர்கள் 03 தினங்களுக்கு முன்னர் தில்லையடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி வபாத்தாகியுள்ளார் இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹி ராஜிவூன்.

வீட்டிற்க்கு ஓர் ஆண்பிள்ளையாக இருந்து மிக விரைவில் திருமண பந்தத்தில் இனைந்து கொள்ளவிருந்த இந்த இளைஞனின் மரணம் குடும்பத்திற்கும் ஊருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

அன்னாரின் ஜனாஸா தற்போது கொழுப்பு வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளது ஜனாஸா நல்லடக்கம் பற்றிய ஏனைய தகவல் பின்னர் அறிவிக்கபடும்.

கல்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட துவான் இஸ்முன் (சுட்டா) அவர்கள் காலமானார்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ர...
14/07/2026

கல்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட துவான் இஸ்முன் (சுட்டா) அவர்கள் காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் மர்ஹூம்களான நூர்தீன் மற்றும் நோனா ஜுபைர் ஆகியோரின் அன்பு மகனும், நசீமா ஆசிரியையின் அன்பு கணவரும், நத்வி, அர்மான், மக்கி ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

மேலும், மர்ஹூம்களான ஜாம்லின், அமித், நோனா ரூபி மற்றும் சனூன் (சுவிஸ்), நிலாம்தீன், துவான் முஹம்மத், ஹாஜித், ஜவ்ன் ஆகியோரின் அன்பு சகோதரரும், அனிஷா, அப்னா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்: மகன் – நத்விஅல்லாஹ் (ﷻ) அன்னாரின் பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்கி, குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை அருள்வானாக. ஆமீன்.

05/07/2026

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

சினன்கோட்டை, குட்டிமலையைச் சேர்ந்த முனாஸ் ஹாஜியார் அவர்களின் மகன் ஸுல்பிகார் (Zulfi) , ஹுமைஸரியன் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.

அல்லாஹ் (ஸுப்ஹானஹு வ தஆலா) அவரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, தனது பேரருளால் அவரை அருள்புரிந்து, உயர்ந்த சுவனமான ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்குவானாக. மேலும், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இந்தப் பேரிழப்பைத் தாங்கிக் கொள்ளும் அழகிய பொறுமையை (ஸப்ர்) வழங்குவானாக.

ஆமீன் யா ரப்பல் ஆலமீன். 🤲

ஜனாசா அறிவித்தல்.....மன்னார் உப்புக்குளத்தைப் பிறப்பிடமாகவும் கல்பிட்டியை வசிப்பிடமாகவும்கொண்ட ரம்சீன் அவர்கள் காலமானார்...
30/06/2026

ஜனாசா அறிவித்தல்.....

மன்னார் உப்புக்குளத்தைப் பிறப்பிடமாகவும் கல்பிட்டியை வசிப்பிடமாகவும்கொண்ட ரம்சீன் அவர்கள் காலமானார் ( இன்னாலில்லாஹி.... )

அன்னார் மர்ஹூம்களான செய்து மற்றும் ராவியத்துல் பசரியாவின் அன்பு மகனும், மர்ஹூமா ரூபினாவின் அன்பு கணவரும்
ரிகாஸ், ஜம்சித்,ரிஜா,மற்றும் ரிபாசா ஆகியோரின் அன்பு தந்தையுமாவார். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

மன்/எருக்கலம்பிட்டி 01 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் குருநாகல் பரகாதெனியாவி வில் வசித்து வந்தவருமான Dr. ஜெசீன் இன்று க...
07/06/2026

மன்/எருக்கலம்பிட்டி 01 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் குருநாகல் பரகாதெனியாவி வில் வசித்து வந்தவருமான Dr. ஜெசீன் இன்று காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார், காலம் சென்ற அல்ஹாஜ் அப்துல் வாகிது. சைதா உம்மாவின் அன்பு மகனும்

நிலூபாவின் அன்புக் கணவரும் முகம்மது இஸாம் (இன்ஜினியர்) ஜெஸ்மீன் (வைத்தியர்) ஆகியோரின் தகப்பனாரும்

மர்கூம்கலான ஜெய்னுதீன், ஜவாஹிர், ஜமீர், ஜவ்ஹரா, மற்று ஜசூர், ஜதீர், ஜதிரா, ஜாயிஸா ஆகியோரின் சகோதரருமாவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு இஸாத் தொழுதையுடன் பரகாதெனியா 9ம் கட்டை இல்லத்திலிருந்து பரகாதனிய பள்ளிவாசல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்*

*தகவல்:-*
*மைத்துனர் யாசின்*

முழு புத்தளத்தையும் சோகத்தில் ஆழ்த்திய 3 இளம் பிள்ளைகளின் மரணம்  நுரைச்சோலை பகுதியில் உள்ள தளுவ கடற்கரையில் நீராடச் சென்...
06/06/2026

முழு புத்தளத்தையும் சோகத்தில் ஆழ்த்திய 3 இளம் பிள்ளைகளின் மரணம்

நுரைச்சோலை பகுதியில் உள்ள தளுவ கடற்கரையில் நீராடச் சென்ற குழுவில், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட மூவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கடலில் குளிக்கச் சென்றபோது ஏற்பட்ட பலத்த அலைகள் மற்றும் நீரோட்டம் காரணமாக அவர்கள் ஆபத்தில் சிக்கியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மூவரும் புத்தளம் தில்லையடி பகுதியை செய்தவர்கள்

ஜனாஸா அறிவித்தல்  கல்பிட்டி  பெரியக்குடிருப்பை சேர்ந்த அரஃபாத் அவர்கள் இத்தாலியில் சற்று முன்னர் வபாத்தானார் இன்னாலில்லா...
06/06/2026

ஜனாஸா அறிவித்தல்

கல்பிட்டி பெரியக்குடிருப்பை சேர்ந்த அரஃபாத் அவர்கள் இத்தாலியில் சற்று முன்னர் வபாத்தானார்

இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹி ராஜூவூன்

இவர் lotex வாடி இக்பால், ஃபர்ஜின் ஆகியோரின் அன்பு மகனும், ஹப்சாவின் அன்பு கணவரும், லியாவின் தகப்பனாரும்,

இக்ராம், அர்ஷத், ஹஸ்னா ஆகியோரின் சகோதரரும், மிப்ளா, மிப்றாஸ், சிப்னா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

ஆமீன். 💔நிச்சயமாக இது ஒரு பாக்கியமிக்க மரணம்.பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் றவூப் றஹீம் மேனேஜர் என்பவர் ஹஜ்ஜிற்...
03/05/2026

ஆமீன். 💔

நிச்சயமாக இது ஒரு பாக்கியமிக்க மரணம்.

பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் றவூப் றஹீம் மேனேஜர் என்பவர் ஹஜ்ஜிற்கு சென்றிருந்தவேளை மக்காவில் காலமானார்.

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்" (நிச்சயமாக நாம் இறைவனுக்கே உரியவர்கள், அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்).

கடந்த வெள்ளிக் கிழமையன்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக பொத்துவிலில் இருந்து சென்ற இவர் முன்னாள் கூட்டுறவு சங்க முகாமையாளரும் பொத்துவில் மீரா பள்ளிவாயல் பொருளாளரும் மற்றும் பொத்துவில் மத்திய கல்லூரியின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தரும் ஆவார்.

புனிதமான மக்கா மாநகரம், தஹஜ்ஜத் நேரம், இஹ்ராம் அணிந்த நிலை என ஒரு முஃமின் எதிர்பார்க்கும் மிகச்சிறந்த முறையில் ஒருவரது இறுதி முடிவு அமைந்திருக்கிறது.

சுபஹ் தொழுகைக்காகக் காத்திருந்த அந்தப் புனிதமான தருணத்தில் இறைவனிடம் சென்றடைவது அனைவருக்குமே கிடைக்காத ஒரு பெரும் பேறு.

வல்ல அல்லாஹ் அன்னாரது நல்லறங்களை ஏற்றுக்கொண்டு, அவரது பாவங்களை மன்னித்து, உயரிய சுவர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்கியருள துஆ செய்வோம்.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை இறைவன் வழங்கட்டும்.

ஆமீன்

Address

Main Street
Kalpitiya
61360

Telephone

+94713510756

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janaza Announcement - Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share