Slmc kandy central province

Slmc kandy central province official page of Sri Lanka Muslim Congress Kandy- central province

04/03/2026
04/03/2026

Behindwoods

02/03/2026

ஈரான் மீதான தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்
விபரங்களுக்கு - https://hiru.lk/Xq1DkT

We Condole the Passing of Khamenei, Urge Restraint and Condemn GoSL’ Stance — Rauff HakeemLeader of the Sri Lanka Muslim...
02/03/2026

We Condole the Passing of Khamenei, Urge Restraint and Condemn GoSL’ Stance — Rauff Hakeem

Leader of the Sri Lanka Muslim Congress, Rauff Hakeem, expresses deep concern over the most ferocious unprovoked, unilateral US–Israel strike on Iran, which reportedly resulted in the death of Iran’s Supreme Leader, Ayatollah Ali Khamenei, and several high-ranking state defence officials.

We extend our profound anguish and heartfelt condolences to the people of Iran as they mourn the loss of their esteemed Supreme Leader in what is described as a shocking violation of International Law and a needlessly reckless attack by Israel and the United States while Iran was clearly seeking to reduce tension in the region by engaging in negotiations with the United States.

We also note that the Government of Sri Lanka (GoSL) has issued a diabolical statement today on the US-Israeli military attacks and the victim state's retaliation on the US bases in the regions, conspicuously omitting any reference to Iran or its losses, a nation with which Sri Lanka has historically maintained friendly ties.

The government's rhetoric appears to sanction the brutality surrounding the death of Iran's Supreme Leader, rather than condemning the act and condoling his death in the hands of the aggressors who tout their 'successful' military onslaughts against a sovereign nation.

It is disturbing that while claiming to profess the principles of non-alignment and neutrality, the GoSL has demonstrated its devious policy its recurring alignment with the US-Israeli position on Iran, and many a time, on Gaza too.

It is evident that the government has miserably lost its moral compass, judging by its official remarks since taking office, on the Israeli war on Gaza and on matters impinging upon Iran’s sovereignty, security, and independence.

The Ministry of Foreign Affairs has never been in a more despicable state intellectually, morally and even politically than it is in today. It appears to be increasingly aligning with the positions of our largest neighbor and a handful of Western nations that still use Israel’s skewed claims of right to self-defense to justify their own stances.

How can a sensible government place the burden of de-escalation on a victim state in the manner implied by its statement, without ever referencing the causal US-Israeli military aggression?

We, as a responsible political organisation, unreservedly condemn the US-Israeli military aggression and the abhorrent killing of the Supreme Leader of Iran.

We wish to reiterate that Iran’s territorial integrity and sovereignty must be respected. Safer regional outcomes depend on de-escalating a conflict that could otherwise push the region to the abyss of a prolonged regional conflict that will have global consequences.

The current spike in tensions between Iran and the region is unparalleled. The situation should never been allowed to evolve to such an extent that Gulf States hosting US military bases had to face the fallout of Iranian retaliation against US military presence in the region. It is highly regrettable that such a situation has resulted in regional chaos. It requires urgent, restrained responses to avert further instability.

We also wish to express solidarity with the Kingdom of Saudi Arabia, the United Arab Emirates, Qatar, Bahrain, Kuwait and Jordon, their peoples, and the broader region, as fear of wider regional conflict and global instability grows. We urge all parties to engage in constructive diplomacy.

Our hope and prayer is for enduring peace and stability in the region, with meaningful de-escalation including nuclear disarmament and non-proliferation by Israel, while preserving the right of states to peaceful nuclear exploration and use. This should underpin a Greater Middle East built on mutual respect, cooperative security, and shared prosperity—not on the grand designs of any single state.

Rauff Hakeem MP, LLM
Attorney-at-Law
Leader, Sri Lanka Muslim Congress.

ஆயதுல்லாஹ் அலி கொமெய்னியின் மறைவுக்கு அனுதாபம் இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு கண்டனம்  - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்...
02/03/2026

ஆயதுல்லாஹ் அலி கொமெய்னியின் மறைவுக்கு அனுதாபம்
இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு கண்டனம்

- முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

ஈரான் மீது அமெரிக்காவும் ,இஸ்ரேலும் நடத்திய மிகவும் கொடூரமான, ஒருதலைப்பட்சமான தாக்குதல் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார். இதன் விளைவாக ஈரானின் உயர் தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமெய்னி மற்றும் உயர்மட்ட அரச பாதுகாப்பு அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சியூட்டும் வகையில்,சர்வதேச சட்டத்தை முற்றாக மீறி, அமெரிக்கா, ,இஸ்ரேல் அகியவற்றால் தேவையற்ற விதத்திலும், பொறுப்பற்ற விதத்திலும் மேற்கொள்ளப்பட்டதாக விவரிக்கப்படும் இந்த தாக்குதலில் தங்கள் பெருமதிப்பிற்குரிய உயர் தலைவரின் இழப்புக்கு மத்தியில் ஈரான் மக்கள் துயரத்தில் ஆழ்திருக்கும் வேளையில், அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த கவலையையும், உளப்பூர்வமான அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதன் மூலம் பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைக்க ஈரான் தெளிவாக முயன்று வந்திருக்கிறது.

மேலும், (GoSL), அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது பாதிக்கப்பட்ட அரசின் பதிலடி குறித்து இலங்கை அரசாங்கம்(GoSL)நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) அதிருப்தி தரும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது, அதில், ஈரான் அல்லது அதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாரிய இழப்புகள் பற்றிய எந்தவிதமான குறிப்பையும் தவிர்த்துக்கொண்டுள்ளது,ஈரான், இலங்கையுடன் வரலாற்று ரீதியாக நட்புறவைப் பேணி வரும் ஒரு நாடு என்பதை மறந்துவிடக் கூடாது.

இலங்கை அரசாங்கம் கையாண்டிருக்கும் சொல்லாட்சி, ஈரானின் உயர் தலைவரின் மரணத்தைச் சூழ்ந்திருந்த மிலேச்சத்தனத்தை அங்கீகரிப்பதாகவே தோன்றுகிறது, இந்த இழி செயலைக் கண்டிப்பதற்கும், இறையாண்மை கொண்ட ஒரு தேசத்திற்கு எதிரான அவர்களின் "வெற்றிகரமான" (?) இராணுவத் தாக்குதல்களைப் பற்றிப் பீற்றிக் கொள்ளும் ஆக்கிரமிப்பாளர்களினால் அவர் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவிப்பதற்குப் பதிலாக,அணிசேரா கொள்கை மற்றும் நடுநிலைமையைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொண்டே, இலங்கை அரசாங்கம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய நிலைப்பாட்டிலும், பல சந்தர்ப்பகளில் காசா மீதான செயற்பாட்டிலும் அதன் தொடர்ச்சியான நழுவல் போக்கை வெளிக்காட்டியுள்ளது கவலையளிக்கிறது.

காசா மீதான இஸ்ரேலியப் போர் மற்றும் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பாதிக்கும் விஷயங்கள் குறித்து பதவியேற்றதிலிருந்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுவரும் அதிகாரப்பூர்வ கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை.

அறிவுபூர்வமாகவும், தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உற்று நோக்கினால்,இந்த அரசாங்கத்தின் வெளி விவகார அமைச்சு, இந்த அளவுக்கு மட்டரகமான நிலையில் இதற்கு முன்னர் இருந்ததில்லை. மிகப்பெரிய ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலின் சுய பாதுகாப்புக்காக என்ற போலியான கூற்றுக்களை இன்னும் தங்கள் தனிப்பட்ட சொந்த விருப்பு,வெறுப்புக்களை நியாயப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் சில மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடுகளுடன் தற்போதைய இலங்கை ஆட்சியாளர்களிள் நடவடிக்கைகளும் பெரிதும் ஒத்துப்போவதாகவே தென்படுகிறது.

இலங்கை அரசாங்கத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விதத்தில்,அமெரிக்க -இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பின் அட்டூழியத்தைப் பற்றி அறவே குறிப்பிடாமல், பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டின் மீது பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் சுமையை ஒரு விவேகமான அரசாங்கம் எவ்வாறு சுமத்த முடியும்?

ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சியினர் என்ற அடிப்படையில், அமெரிக்க-இஸ்ரேலிய படையினரின் அத்துமீறிய ஆக்கிரமிப்பையும் ஈரானின் உயர் தலைவரின் வெறுக்கத்தக்க படுகொலையையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஈரானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய நீண்டகால பிராந்திய மோதலின் படுகுழியில் பிராந்தியத்தைத் தள்ளிவிடக் கூடிய ஒரு மோதலைத் தணிப்பதிலும்,தவிர்ப்பதிலும் தான் பாதுகாப்பான பிராந்தியத்தின் நன்மையும்,நலனும் தங்கியுள்ளன.

ஈரானுக்கும், பிராந்தியத்திற்கும் இடையிலான தற்போதைய பதற்றநிலை எங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது . அமெரிக்க இராணுவ தளங்களை வைத்துக் கொண்டிருக்கும் வளைகுடா நாடுகள், அமெரிக்க இராணுவ இருப்புக்கு எதிராக ஈரானிய பழிவாங்கலின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய அளவுக்கு நிலைமை உருவாகுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இதுபோன்ற சூழ்நிலை பிராந்தியத்தை குழப்பத்தில் வைத்திருப்பது பெரிதும் வருந்தத்தக்கது.

பரந்த பிராந்திய மோதல் மற்றும் உலகளாவிய உறுதியற்ற தன்மை குறித்த அச்சம் அதிகரித்து வருவதால், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான், அவற்றில் வசிக்கும் மக்கள் மற்றும் பரந்த பிராந்தியத்துடன் நாங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த விரும்புகிறோம். ஆக்கபூர்வமான ராஜதந்திரத நடவடிக்கைளில் ஈடுபட அனைத்து தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அமைதியான அணு ஆய்வு மற்றும் அதன் பயன்பாட்டிற்கான நாடுகளின் உரிமையைப் பாதுகாப்பதே எங்கள் நம்பிக்கையும் பிரார்த்தனையும் ஆகும். இது, பரஸ்பர மரியாதை, ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஓர் அமைதி நிலவும் மத்திய கிழக்கை மிளிரச் செய்யும்.

02/03/2026
இன்று(28)மாலை,சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் வித்தக விழா மற்றும் "நீதி முரசு "வெளியீட்டு நிகழ்வு-2025 என்பன இலங்கை சட்டக் ...
28/02/2026

இன்று(28)மாலை,சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் வித்தக விழா மற்றும் "நீதி முரசு "வெளியீட்டு நிகழ்வு-2025 என்பன இலங்கை சட்டக் கல்லூரியில் நடைபெற்றபோது,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

19/02/2026

2019ஆம் ஆண்டு Rishad Bathiudeen அவர்கள் சில இனவாத சக்திகளால் கடுமையாக குறிவைக்கப்பட்டு, அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட முயற்சிக்கப்பட்ட அந்த கடினமான நேரத்தில், அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி தலைவர் Rauff Hakeem அவர்கள் உறுதியான நிலைப்பாட்டுடன் அவருக்கு ஆதரவாக நின்றார். அது வெறும் அரசியல் செயல் அல்ல அது ஒரு கொள்கை நிலைப்பாடு.

அதேபோல், 2020 தேர்தல் சூழலிலும் அரசியல் போட்டி இருந்தபோதிலும், அந்த தருணத்தில் ரிஷாத் அவர்கள் தோல்வியடையக் கூடாது என்ற மனப்பாங்குடன், தனது ஆதரவாளர்களிடம் திறந்தவெளியில் வாக்கு கோரியதும் மறக்க முடியாத உண்மை.

இந்த உண்மைகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவை.
இவற்றை மறந்து வைத்து இன்று சிலர் புதுக்கதைகளை உருவாக்க முயலுவது வரலாற்றை மாற்ற முடியாது.

உண்மை எப்போதும் நிலைத்திருக்கிறது.
நேர்மையும் நன்றியுணர்வும் அரசியலிலும் மதிக்கப்பட வேண்டிய உயர்ந்த பண்புகள்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில், கொழும்பிலுள்ள இந்திய ...
16/02/2026

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில், கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின்(High Commission of India, Colombo ) முதற் செயலாளர் DC ஆக பணியாற்றிய திரு. அஷோக்குமார் ,ஆர் அவர்களுக்கு, இன்று(16) நண்பகல் Galle Face ஹோட்டலில் பிரியாவிடை விருந்துபசாரம் நடைபெற்றது.
இதில், ஏனைய முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் ஆலோசகரும் அலுவலகத் தலைவருமான கலாநிதி ராம்பாபு சி., மற்றும் அரசியல் பிரிவு முதற்செயலாளரான திருமதி நவ்யா சிங்க்லா "The Hindu" பத்திரிகையின் இலங்கைக்கான செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சுஹாரா புகாரி கடந்த கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில், கட்சியின் அறிவுற...
12/02/2026

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சுஹாரா புகாரி கடந்த கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில், கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக தன்னுடைய வாக்கை என் பி பி சார்பாக வழங்கியதன் காரணமாக கட்சியினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் அவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எடுத்தார்.

இதன் விளைவாக, உரிய முறையில் சோஹாரா புகாரி தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது தேர்தலில் ஆணையாளரிடமிருந்து அனுப்பப்பட்ட அறிவித்தலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அதற்கான வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது!

Address

Kandy
20K

Alerts

Be the first to know and let us send you an email when Slmc kandy central province posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share