Kattankudy Public Library

Kattankudy Public Library Public Library Kattankudy

GIT பரீட்சை எழுதக்கூடிய (January 11) மாணவர்களுக்கான Learning Materials.தேவையான மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
08/01/2026

GIT பரீட்சை எழுதக்கூடிய (January 11) மாணவர்களுக்கான Learning Materials.
தேவையான மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....05.01.2026 , 06.01.2026  ஆகிய  தினங்களில் காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தினால் 2025/ 2026 ம...
06/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

05.01.2026 , 06.01.2026 ஆகிய தினங்களில் காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தினால் 2025/ 2026 ம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக GIT பாட நெறிக்கான கருத்தரங்கு ஒன்று ஹிஸ்புல்லாஹ் கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.

MMM. ZINDA MUFAS
BSC (HONS) IN IT, MSC IN CYBER SECURITY, SOFTWARE ENGINEER. UNIVERSITY OF MORATUWA. அவர்களை வளவாளராகக் கொண்டு நடாத்தப்பட்ட இக் கருத்தரங்கில் மாணவர்களுக்கான GIT பாட நெறி தொடர்பான பயனுள்ள பல்வேறுபட்ட விடயங்களுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் கடந்த கால வினாத் தாள்களும் பயிற்றுவிக்கப்பட்ட பட்டது.

காத்தான்குடி நகர சபை பொது நூலகம் நடத்தும் 2025 / 2026 மாணவர்களுக்கான GIT கருத்தரங்கு.காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த ...
04/01/2026

காத்தான்குடி நகர சபை பொது நூலகம் நடத்தும்

2025 / 2026 மாணவர்களுக்கான GIT கருத்தரங்கு.

காத்தான்குடி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

அனுமதி முற்றிலும் இலவசம்.

அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்......தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் 2024ம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாதத்தில் " உலகை வென்றவர்...
20/11/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......

தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் 2024ம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாதத்தில் " உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" எனும் தொனிப்பொருளுக்கமைவாக சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிகழ்ச்சிகளை முன்னெடுத்தமைக்காக இலங்கையில் உள்ள 39 நூலகங்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் கேட்போர் கூடத்தில் 20.11.2025ம் திகதி இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காத்தான்குடி நகரசபை பொது நூலகத்திற்கும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இவ்விருதினை கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் Dr மகேஷ் அவர்கள் காத்தான்குடி நகர சபை தவிசாளர் SHM. அஸ்பர் JP UM அவர்களுக்கு வழங்கி கெளரவித்தார்.

இரவு நேர சுய கற்றல் பிரிவு ஆரம்பம் எதிர்வரும் உயர்தர பரீட்சையை முன்னிட்டு 2025.11.09ம் திகதி  தொடக்கம்  உயர்தர பரீட்சை ந...
09/11/2025

இரவு நேர
சுய கற்றல் பிரிவு ஆரம்பம்

எதிர்வரும் உயர்தர பரீட்சையை முன்னிட்டு 2025.11.09ம் திகதி தொடக்கம் உயர்தர பரீட்சை நடை பெற்று முடியும் வரையும் காத்தான்குடி நகரசபை பொது நூலகத்தின் ஆண்களுக்கான இரவு நேர சுயக்கற்றல் பிரிவு இரவு 9.00 மணிவரை திறக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம் .

எனவே பரீட்சை எழுதும் அனைத்து மாணவர்களும் சிறந்த பெருபேற்றைப் பெறுவதற்கு இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.........தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி நகரசபை பொது நூலகத்தினால் நடாத்தப்பட்ட போட...
09/11/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.........

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி நகரசபை பொது நூலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதி நாள் நிகழ்வு 06.11.2025 ம் திகதி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் கெளரவ நகர முதல்வர் SHM. அஸ்பர் JP UM அவர்களின் தலைமையில் மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதிகளாக கெளரவ கிழக்கு மாகாண ஆளுனரின் இனணப்புச் செயலாளர் அல்ஹாஜ் UK. அப்துல்லாஹ், கெளரவ துணை நகர முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்களும் மேலும்கெளரவ நகரசபை உறுப்பினர்கள் கெளரவ அதிதிகள், , நகர சபையின் செயலாளர் திருமதி. றினோஸா முப்லிஹ், கணக்காளர் MBM. இத்ரீஸ் SLAcS, பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ILA. மாஹிர் அவர்கள் கலந்து கொண்டதுடன் அதிபர்கள் ,ஆசிரியர்கள் , முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள், மாணவர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் 75 வயதிற்கு மேற்பட்ட இலக்கியத் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சாதனையாளர்களுக்கு பொன்னாடை போர்தி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் , தேசிய வாசிப்பு மாத நிகழ்சிகளை சிறப்பாக நடாத்துவதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியவர்களுக்கு நடுவர்களுக்கான கெளரவம் வழங்கப்பட்டதுடன் , உள்ளூராட்சி வாரத்தின் இறுதி நாள் நிகழ்விலும் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்விலும் எங்களுடன் இணைந்து செயற்ட்பட்ட மட்/ மம/ ஹிழுரிய்யா வித்தியாலய வரவேற்பு கீத மாணவர்கள், சிறுவர் பராமரிப்பு இல்ல மாணவர்கள் மற்றும் Hubbun Nasheedha Arts And Culture Forum மாணவர்கள், சமுக மேம்பாட்டுக் கழக ஒன்றிய இளைஞர்கள் ஆகியோருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. அத்துடன் வீட்டுக்கொரு நூலகம் எனும் செயற்த்திட்டத்திற்கு அமைவாக காத்தன்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் நூலகங்களை உருவாக்கி இயக்கிக் கொண்டிருப்பவர்களையும் கௌரவித்ததுடன் தேசிய வாசிப்பு மாத போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.

06/11/2025

தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வு -2025

கண்ணுக்குள் சுவர்க்கம் சிறுகதைகள் சர்வதேச மகளிர் தின சிறப்பு வெளியீடாக கவிஞர் சிறுகதையாளர் நாடகாசிரியரான காத்தான்குடி நஸ...
30/10/2025

கண்ணுக்குள் சுவர்க்கம்
சிறுகதைகள்

சர்வதேச மகளிர் தின சிறப்பு வெளியீடாக கவிஞர் சிறுகதையாளர் நாடகாசிரியரான காத்தான்குடி நஸீலாவின் கண்ணுக்குள் சுவர்க்கம் என்னும் இச் சிறுகதைத் தொகுப்பு புரவலர் புத்தகப் பூங்காவின் ஊடக வெளிவரும் 24வது வெளியீடாகும் . இந் நூல் பெண்ணியம் பேசும் சிறுகதைத் தொகுப்பாகும். எங்கோ ஒரு மூலையில் நான்கு சுவர்களுக்குள் இருந்து ஒவ்வொரு இரவும் தூக்கம் காணாமல் போன கண்களுடன் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் முதிர் கன்னிகளுக்கு சமர்ப்பணமாக அமைகிறது. 2009ம் ஆண்டு சாகித்திய விருது பெற்ற இந் நூல் எமது பொது நூலகத்தில் காணப்படுகின்றது .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......காத்தான்குடி நகரசபை பொது நூலகத்தினால் 2025 ம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு  29.1...
29/10/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......

காத்தான்குடி நகரசபை பொது நூலகத்தினால் 2025 ம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு 29.10.2025 ம் திகதி இன்று காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு சொற்பொழிவொன்று செய்து நூலகர் பெளமியா ஷறூக் அவர்களின் தலைமையில் ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஏற்பாடு நடாத்தப்படது.

சமகாலத்தில் மாணவர்கள் மத்தியில் காணப்படுகின்ற முக்கிய பிரச்சினைகளான

- மாணவர்களின் மன ஆளுமை வளர்ச்சி,
- தொலைபேசி மற்றும் சமூக ஊடகப் பாவனை,
- பெற்றோர், ஆசிரியர், மூத்தோருக்கு மதிப்பளித்தல்,
- சமகால ஆண்-பெண் உறவுகள்,
- மாணவர்கள் ஒழுக்கம்,
- போதைப் பொருள் பாவனையின் பரவல்,
- அழகு சாதனைப் பொருட்களின் அதிர்ச்சி விளைவுகள்,
- ஆன்மீக விழிப்புணர்வு

போன்ற பல்வேறு விடயங்கள் உளவியல் நிபுணர் அஷ்ஷேக் ஹமீத் ஷரஈ அவர்களால் அறிவியல் ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் மார்கத்தை அடிப்படையாகக் கொண்டும் மாணவர்களை நெறிப்படுத்தும் வகையில் பெறுமதி மிக்க கருத்துக்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இப்புத்தகத்தில் சிறுமை கண்டு பொங்கும் கவிதைகளே அனேகமாக இடம் பெற்றுள்ளது. சில கவிதைகள் சாடுகின்றன.. சில கவிதைகள் சினத்தால...
27/10/2025

இப்புத்தகத்தில் சிறுமை கண்டு பொங்கும் கவிதைகளே அனேகமாக இடம் பெற்றுள்ளது. சில கவிதைகள் சாடுகின்றன.. சில கவிதைகள் சினத்தால் சீறுகின்றன.. சில கவிதைகள் நையாண்டி பண்ணுகின்றது.. சில கவிதைகள் பாராட்டுகின்றன.. சில கவிதைகள் துயரத்தால் கசிகின்றன. இப்படி உணர்வுக் கலவைகளான கவிதைகளின் மொத்த வடிவமாக இத்தொகுதி அமைந்திருக்கின்றது. கவிதை இலக்கிய காரனுக்கு மொழி வல்லமை முக்கியமானது. மதியன்பனின் மொழி எளிமையானது, இயல்பானது. அடுத்தடுத்து வந்து விழும் வார்த்தைகள் தாம் அவரை நிமிர்ந்து பார்க்க வைக்கின்றன. எனவே இப்புத்தகமானது பொது நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......காத்தான்குடி நகரசபை பொது நூலகத்தினால் 2025 ம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பல்வே...
27/10/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......

காத்தான்குடி நகரசபை பொது நூலகத்தினால் 2025 ம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு அங்கமாக 27.10.2025 இன்று வில்லுப் பாட்டுப் போட்டி நூலகர் பெளமியா ஷறூக் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இதில் காத்தான்குடி நகர சபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து கனிஷ்ட பிரிவில் 35ற்கு மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

தேசிய வாசிப்பு மாதம் – 2025தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தினால், உயர்தரம் கற்கும் ப...
23/10/2025

தேசிய வாசிப்பு மாதம் – 2025

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு, காத்தான்குடி நகர சபை பொது நூலகத்தினால், உயர்தரம் கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு உளவள விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திகதி: 29.10.2025
இடம்: ஹிஸ்புல்லாஹ் மண்டபம், காத்தான்குடி
நேரம்: காலை 9.00 மணி முதல்

இக்கருத்தரங்கில்,
- மாணவர்களின் மன ஆளுமை வளர்ச்சி,
- தொலைபேசி மற்றும் சமூக ஊடகப் பாவனை,
- பெற்றோர், ஆசிரியர், மூத்தோருக்கு மதிப்பளித்தல்,
- சமகால ஆண்-பெண் உறவுகள்,
- மாணவர்கள் ஒழுக்கம்,
- போதைப் பொருள் பாவனையின் பரவல்,
- அழகு சாதனைப் பொருட்களின் அதிர்ச்சி விளைவுகள்,
- ஆன்மீக விழிப்புணர்வு

போன்ற தலைப்புகள் குறித்த உணர்வூட்டும் உரையை உளவியல் நிபுணர் அஷ்ஷேக் ஹமீத் ஷரஈ அவர்கள் வழங்க உள்ளார்.

அனைத்து உயர்தர மாணவர்களும் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டியதுடன், அவர்களது பெற்றோர்களும் பங்கேற்று விழிப்புணர்வை பெற்றிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


காத்தான்குடி நகர சபை
பொது நூலகம்

Address

Kattankudi
30100

Opening Hours

Monday 08:30 - 17:30
Tuesday 08:30 - 17:30
Wednesday 08:30 - 17:30
Thursday 08:30 - 17:30
Saturday 08:30 - 17:30
Sunday 08:30 - 17:30

Telephone

+94654929190

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kattankudy Public Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share