04/08/2026
பொலன்னறுவை மாநகரசபை குழுவினர் காத்தான்குடி திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தினை பார்வையிட்டனர்.
காத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கி வரும் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தினைப் பார்வையிடுவதற்காக, பொலன்னறுவை மாநகரசபையின் மேயர் தலைமையில் உயர்மட்டக் குழுவொன்று நேற்றைய தினம் (ஆகஸ்ட் 3) விசேட விஜயம் ஒன்றினை மேற்கொண்டது.
இக் குழுவில் பொலன்னறுவை மாநகரசபையின் மேயர், ஆணையாளர், வைத்திய அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர் உள்ளிட்ட பலர் இடம்பெற்றிருந்தனர்.
இவ்விஜயத்தின் போது, காத்தான்குடி நகர முதல்வர் SHM. அஸ்பர் (J.P) அவர்கள், விருந்தினர்களை வரவேற்று திண்மக் கழிவகற்றல் மேலாண்மை நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சுற்றிக் காண்பித்ததுடன் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவு மேலாண்மைச் செயற்பாடுகள், மறுசுழற்சி முறைகள் மற்றும் திண்மக் கழிவுகளைப் பயனுள்ள வகையில் கையாளுதல் தொடர்பான முழுமையான விளக்கங்களையும், தெளிவூட்டல்களையும் நகர முதல்வர் அவர்களுக்கு வழங்கினார்.
காத்தான்குடி நகர சபையின் இத்தகைய முன்மாதிரியான கழிவு மேலாண்மைச் செயற்பாடுகளைக் கண்டறிந்த பொலன்னறுவை மாநகரசபைக் குழுவினர், தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.