Kattankudy Divisional Secretariat

Kattankudy Divisional Secretariat Divisional Secretariat, Kattankudy
Ministry of Home Affairs

*வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னாயத்தமாதல்  குழுக்கூட்டம் -2024*காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த  நிவாரணப்பிரிவின...
08/10/2024

*வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னாயத்தமாதல் குழுக்கூட்டம் -2024*

காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த நிவாரணப்பிரிவின் ஏற்பாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழைக்கு முன்னாயத்தமாதல் குழுக்கூட்டம் 2024.10.07 ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர், மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், மாவட்ட அனர்த்த நிவாரண உத்தியோகத்தர்கள், ஏனைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், மேலும் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் போது எதிர்வரும் காலங்கள் மழை காலம் என்பதால் வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள், தோணாக்கள் மற்றும் நீர் வழிந்தோடக்கூடிய இடங்களை துப்பரவு செய்தல், டெங்கு நோயை குறைப்பதற்கான பொறிமுறைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் -2024கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (...
08/10/2024

கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் -2024

கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (08) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் போது அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.கே.கோபாலசிங்கம், MN.நஜ்மி அஹமட், மற்றும் சமுகம் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வீ.கிரிஜா ஆகிய உத்தியோகத்தர்களின் முதலாம் காலாண்டுக்கான முன்னேற்ற அறிக்கை விளக்க காட்சிகள் மூலமாக
( Presentation) மூலமாக தெளிவுபடுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காணி உத்தியோகத்தர், HRDA, Skill Development officer, DOs ( Elders, Deseble) மற்றும் Foreign Do, Agriculture DO, Aswasuma DO, Indurstiyal DO ஆகிய உத்தியோகத்தர்களின் வேலை முன்னேற்றம் தொடர்பாக பிரதேச செயலாளரினால் மீளாய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் மற்றும் கள உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடியில் டெங்கு பரவலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் -2024*காத்தான்குடியில் டெங்கு பரவலை தடுப்பது தொட...
08/10/2024

காத்தான்குடியில் டெங்கு பரவலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் -2024*

காத்தான்குடியில் டெங்கு பரவலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டமானது இன்று (08) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் நாட்டில் தற்போது பருவ மழை ஆரம்பித்துள்ளதனால் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய நிலைமையானது காத்தான்குடியில் மிகவும் அதிகமாக காணப்படுவதாகவும் 100 வீடுகளில் 15 வீடுகளில் டெங்கு நுளம்பின் அபாயம் கண்டறியப்பட்டுள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்ட RDHS நிபுணர் குழுவினால் தகவல் வெளியிடப்பட்டது.

அந்த வகையில் இவ் டெங்கு நுளம்புகள் பரவலை உடனடியாக கட்டுப்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள முடியும். எனவே கள உத்தியோகத்தர்கள் ஒவ்வொரு வீடாக களவிஜயத்தினை மேற்கொண்டு குளிர்சாதனப்பெட்டிகள், சமையலறை, பாவிக்கப்படாத மலசலகூடம், மற்றும் வீட்டில் நீர் தேங்கும் இடங்களை கண்காணிப்புக் களை மேற்கொண்டு டெங்கு அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்படும் இடங்களை பிரிவிற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்குமாறும் , டெங்கு கள விஜயம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி , எம்.எஸ்.சில்மியா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ்.தனுஜா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், மற்றும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி DR.நஸீர்தீன், Deputy RDHS N.சண்முகபவான் , கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வீட்டுத் தோட்ட அறுவடை விழா -2024காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 167 சீ, பிரிவில் வசிக்கும் வீட்டுத் தோட்ட ப...
08/10/2024

வீட்டுத் தோட்ட அறுவடை விழா -2024

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 167 சீ, பிரிவில் வசிக்கும் வீட்டுத் தோட்ட பயனாளியான முகமட் அமித் என்பவரது வீட்டில் செய்கை பண்ணப்பட்ட புடோல், பூசணிக்காய், கத்தரி ஆகிய மரக்கறிகளின் அறுவடை விழாவானது 2024.10.07 ஆந் திகதி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களினால் அறுவடை செய்யப்பட்டது.

இவ் அறுவடை நிகழ்வில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரிவு EDO, DO ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்வதேச முதியோர் தின நிகழ்வு -2024சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி  அபிவி...
04/10/2024

சர்வதேச முதியோர் தின நிகழ்வு -2024

சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி பிரிவின் முதியோர்களுக்கான சிந்தனை அணுகுமுறை வேலைத்திட்டத்தின் கீழ் சமூக பராமரிப்புப் பிரிவும் இணைந்து பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களது வழிகாட்டலின் கீழ் " *,"வலுவான பராமரிப்பு மற்றும் ஆதரவுடன் முதியோர்களை கௌரவிப்போம்"* எனும் தொனிப்பொருளில் முதியோர் தின நிகழ்வு 2024.10.03 ஆந் திகதி வியாழக்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் சமூகப் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிரேக்ஷ்ட பிரஜைகள் 50 பேர் கலந்து கொண்டதுடன் அவர்களை மகிழ்விப்பதற்கான ஆடல், பாடல் , நாடகங்கள் போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமூக சேவை உத்தியோகத்தர், சமூகப் பராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம் -2024காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுவர் பெண்கள் பிரிவு மற்றும் சமுர்த்தி அபிவிருத...
03/10/2024

சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம் -2024

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சிறுவர் பெண்கள் பிரிவு மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களது வழிகாட்டலின் கீழ்
" பிள்ளைகளைப் பாதுகாப்போம் சமமாக நடத்துவோம்"எனும் தொனிப்பொருளிலான சிறுவர் தினக் கொண்டாட்ட நிகழ்வானது 2024.10.01 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் மட்/ கிழுறியா வித்தியாலய மைதானத்தில் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக சிறுவர்களே காணப்பட்டமை சிறம்பம்சமாகும்.

இக் கொண்டாட்ட நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் கலந்து கொண்டதுடன் மிட்டாய் ஓட்டம், குளம் கரை விளையாட்டு, பலூன் ஊதி உடைத்தல் மற்றும் நீர் நிரப்புதல், Balance cup, River crossings, Guide the blind, banana came, நாயும் இறைச்சியும் , பூக்குட்டி, ஆடும் வீடும், நூலில் மணி கோர்த்தல் ஆகிய சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றது.

கலந்து கொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.ரஊப், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .

கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் -2024கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (...
01/10/2024

கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் -2024

கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (01) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தின் போது கள உத்தியோகத்தர்கள் கள விஜயம் மேற்கொள்ளும் போது கள விஜய புகைப்படங்கள் மற்றும் தகவல்களை உடனடியாக Progress galary பதிவிட வேண்டுமெனவும், கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கடமை புரியும் GSO,EDO,SDO,DOs அனைவரும் அனைத்து தகவல்களும் புதிய தரவுகளாக வைத்திருக்க வேண்டுமெனவும் பிரதேச செயலாளரினால் வலியுறுத்தப்பட்டது.

மேலும் காத்தான்குடி பிரதேசத்தின் பிரதேச செயலாளர் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது நகரசபை, இலங்கை போக்குவரத்து சபை, வைத்தியசாலை , ஆகிய திணைக்களங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி எதிர்வரும் 10,11 ஆகிய திகதிகளில் ஹிஸ்புல்லா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து
சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.கே.விமலாதேவி , மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.ஆர்.சந்திரமோகன்(164,164C), திருமதி.ஜே.ரவீந்திரன்(165,166) ஆகிய உத்தியோகத்தர்களின் முதலாம் காலாண்டுக்கான முன்னேற்ற அறிக்கைகள் விளக்க காட்சிகள் (Presentation) மூலமாக தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் காணிக்கிளை உத்தியோகத்தர்கள், Aswasuma DO, skill Development officer, Foreign Do, மற்றும் Agriculture Do, Disaster Do, RDO, ஆகிய உத்தியோகத்தர்களின் முன்னேற்றம் தொடர்பாக பிரதேச செயலாளரினால் மீளாய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக கிராம உத்தியோகத்தர் மற்றும் கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திறன் விருத்தி மற்றும் உளவளத்துனை தொடர்பான சான்றிதழ் கற்கை நெறியின் பயிற்சி வகுப்புக்கள் இடம்பெறல் காத்தான்குடி பிரதேச ச...
19/09/2024

திறன் விருத்தி மற்றும் உளவளத்துனை தொடர்பான சான்றிதழ் கற்கை நெறியின் பயிற்சி வகுப்புக்கள் இடம்பெறல்

காத்தான்குடி பிரதேச செயலகம் நடாத்தும் சவால்களை வெற்றி கொள்ளும் இளைய சமுதாயத்தினை உருவாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி நெறியானது 2024.09.18 ஆந் திகதி புதன்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சி வகுப்பின் வளவாளராக பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மதுல்லா ஆகியோரினால் அவசர நிலைமைகளின் போது செயற்படும் விதம் தொடர்பான அடிப்படை கற்றல் பயிற்சி சிறந்த
முறையில் செய்முறைப் பயிற்சி யாக இடம்பெற்றது.

48 மணித்தியாலங்கள் கொண்ட பயிற்சி வகுப்புக்களில் 34 இளைஞர் யுவதிகள் பயிற்சி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* *மாவட்ட செயலகத்தில் விவாதப் பயிற்சியில் பங்குபற்றிய சிறார்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு -2024* சர்வதேச சிறுவ...
18/09/2024

*
*மாவட்ட செயலகத்தில் விவாதப் பயிற்சியில் பங்குபற்றிய சிறார்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு -2024*

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு ( ஒக்டோபர் 01) மாவட்ட செயலகத்தில் 2024.09.14 ஆந் திகதி இடம்பெற்ற விவாதப் பயிற்சியில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் சிறுவர் சபை சார்பில் 06 சிறார்கள் பங்குபற்றியிருந்தனர்.

இப்பயிற்சியில் 14 பிரதேச செயலகப் பிரிவிலிருந்து 72 சிறார்கள் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்ட சிறார்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (18) புதன்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்
எஸ்.சில்மியா, CRPO, ஆகியோர் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான யோகாப்பயிற்சிசுதேச வைத்திய அமைச்சின் நிதி அனுசரணையில் காத்தான்குடி பிரதே...
12/09/2024

காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான யோகாப்பயிற்சி

சுதேச வைத்திய அமைச்சின் நிதி அனுசரணையில் காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான யோகாப்பயிற்சி (11) புதன்கிழமை முற்பகல் 9.00 மணியளவில் பிரதேச செயலாளர்
உ.உதயஸ்ரீதர் அவர்களினால் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்யோகாப் பயிற்சியானது 2024.09.11ஆந் திகதி தொடக்கம் 2024.11.27 வரையும் வாரத்தின் புதன்கிழமையும் இடம்பெறவுள்ளது.

யோகாப்பயிற்சி நெறியானது உத்தியோகத்தர்களின் உடல் உள ஆரோக்கியத்தை ஏற்படுத்தி நோயற்ற ஆரோக்கியமான மனிதர்களாக வாழ்வதற்கான யோகாப்பயிற்சி முறைகளை வளவாளராக கலந்து கொண்ட ஏ.எம்.எம்.நிவாஸ் (Diploma in yoha, இந்திய பாரததாய் யோகா சபை, உடல் , உள ஆற்றுப்படுத்தல் பேச்சாளர், இஸ்லாமிய உளவளத்துணையாளர்) அவர்களினால் சிறப்பான பயிற்சிகளை உத்தியோகத்தர்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ் யோகாப்பயிற்சியில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா உட்பட அனைத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் -2024*கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்  (10) ...
11/09/2024

கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் -2024*

கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் (10) செவ்வாய்க்கிழமை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் போது CRPO, CA, ECDO, மற்றும் WDO, DO (Elders), DO (Disable), DO (Industrial), DO (foreign), TA , Do (drugs prevention), SDO, DO (Aswasuma ), DO ( Cultural ) , HRDA, LO, Science & technology officer, ஆகிய உத்தியோகத்தர்களின் வேலை முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது.

மேலும் 70 வயது பூர்த்தியடைந்த சிரேஸ்ட பிரஜைகள் மற்றும் விசேட தேவையுடையோர் ஆகிய கொடுப்பனவுகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களை விண்ணப்பிக்க செய்யுமாறு உதவிப் பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து RRDP வேலைத் திட்டங்கள் தொடர்பாக அகமட் லேன் கொங்கிறீட் றோட் மற்றும் மெத்தைப்பள்ளி காண் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், செரீப் ஹாஜ்ஜியார் கான் வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லை . DCB திட்டத்தில் இஹ்ஸான் பள்ளிவாசல், பிர்தௌஸ் பள்ளிவாசல் வேலைகள் நிறைவு பெற்றுள்ளதுடன் மரியம் பள்ளிவாசல் , உமர் செரீப் ஆகிய பள்ளிவாசல் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2024 ஆம் ஆண்டிற்கான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அஸ்வசும பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 750000 /= பெறுமதியான ரன்விமன இரண்டு முழுமையான வீடுகளுக்கு ( 167வீ, 167சீ) , 06.09.2024 ஆந் திகதி அடிக்கல் நடப்பட்டுள்ளது.
அத்துடன்
167 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவில் வீடு திருத்த வேலைகளுக்காக ஜயவிமண இரண்டு வீடுகளுக்கு 250000/= வழங்கி வைக்கப்பட்டதாக SDA வினால் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம். ஜரூப் , கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

*உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்டத்திலான சிறு விற்பனைக் கண்காட்சி-2024* காத்தான்குடி பிரதேச செயலக சிறுதொழில் ...
09/09/2024

*உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்டத்திலான சிறு விற்பனைக் கண்காட்சி-2024*

காத்தான்குடி பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்டத்திலான சிறு விற்பனைக் கண்காட்சி (Mine fair) நிகழ்வானது இன்று (09) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் கே.சித்திரா , நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.ரஊப் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் இவ் விற்பனைக் கண்காட்சியானது சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தும் நோக்கிலும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் முற்பகல் 9.00 தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை இடம் பெறவுள்ளது.

இதில் 18 சிறுதொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டதுடன் அவர்களது உற்பத்தி பொருட்களான இனிப்புப் பண்டங்கள், பாதணிகள், சிறுவர்களுக்கான அலங்காரப் பொருட்கள் மற்றும் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட முடி வளர்ச்சிக்கான எண்ணெய்கள், ஆடைகள் போன்ற பொருட்கள் தரமானதாகவும் குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்பட்டது.

Address

Main Street
Kattankudi
30100

Opening Hours

Monday 09:00 - 16:15
Tuesday 08:30 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Telephone

+94652246591

Alerts

Be the first to know and let us send you an email when Kattankudy Divisional Secretariat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share