19/03/2021
#சூரரைப் போற்று .... 💥💥💥
⚡️தமிழக மலைப்பகுதிகளில் உருவாகி , கேரளா மலைப்பகுதியில் கிழக்கு நோக்கி ஓடி , வீணாகக் கடலில் கலந்து கொண்டிருந்த ஒரு ஆறு தான் முல்லை ஆறு . அப்படி வீணாக கடலில் கலந்த தண்ணீரை மேற்கு நோக்கி , அதாவது தமிழகத்தை நோக்கி திருப்பினால் , வறட்சியின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருந்த ஐந்து மாவட்டங்கள் வளம் பெறும் என்பதற்காக 300 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய சேதுபதி மன்னர்கள் காலத்திலும் , அதற்கு அடுத்து வந்த பிரிட்டிஷ் அரசாலும் , கிழக்கு நோக்கி செல்லும் முல்லை ஆற்றின் போக்கை தடுத்து அதை மேற்கு நோக்கி , தமிழ்நாட்டை நோக்கித் திருப்ப ஒரு திட்டம் போடப்பட்டது . அருமையான அந்தத் திட்டம் , திட்டம் என்றளவிலேயே காகிதத்திலேயே நின்றுவிட்டது . காரணம் , அந்தத் திட்டத்தில் இருந்த மிகக் கடினமான சவால்கள் . எந்த விதமான வசதிகளும் இல்லாத , முறையான பாதை கூட இல்லாத அடர்த்தியான வனப்பகுதி , வன விலங்குகள் , மலேரியா போன்ற கொள்ளை நோய்களைப் பரப்பும் கொசுக்கள் , அட்டைப் பூச்சிகள் .... என நீண்ட சவால்களுக்குப் பயந்து அந்த அணை கட்டும் திட்டத்தில் எந்தப் பொறியாளருமே ஆர்வம் காட்டவில்லை . இப்படியான ஒரு சூழ்நிலையில் சவால்களை உடைத்து அணையை சாத்தியமாக்கும் ஒரு சாகசக்காரனை பிரிட்டீஷ் அரசு வலை வீசித் தேடிக் கொண்டிருந்தது . 1885 களில் சென்னை மாகாணத்தில் ஓரிடத்தில் கிரிக்கெட் போட்டி நடத்திக் கொண்டிருந்த " அவரின் " காலில் வந்து அந்த வலை வந்து விழுந்தது .
To , Mr. " கர்னல் ஜான் பென்னி குவிக் " என்று தொடங்கிய அந்த கடிதம் , " மிஸ்ட்டர் , ஜான் , மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் , ஒரு அணையைக் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்துள்ளது.அதை நீங்கள் தான் செய்ய வேண்டும்.உடனடியாக மதுரைக்கு வரவும் .. " --அவரது கைகளுக்குக் கிடைத்தது . கிரிக்கெட் பேட்டை கீழே வைத்துவிட்டு இன்ஜீனியரிங் டிராப்ட்டரை கையில் எடுத்துக் கொண்டு மதுரைக்கு கிளம்பினார் பென்னி குவிக்.அவரிடம் அணை கட்டும் திட்டத்திற்கான வரைவு உட்பட பல விவரங்கள் தரப்பட்டது .
1887 ல் அணை கட்டும் பணி தொடங்கியது . தொடங்கியது என்ற இந்த வார்த்தையை எளிதாக வாசிப்பதைப் போல இருக்கவில்லை அந்தப் பணி.எந்தவொரு பொருள் தேவைப்பட்டாலும் , அந்த சிறியதோ , பெரிதோ , அது மதுரையில் இருந்து தான் வர வேண்டும்.கடுமையான காட்டுப் பகுதியின் வழியாக , வர பல நாட்களாகும்.இப்படியான சூழ்நிலையில் அணை கட்டும் பணி தொடங்கியது . எக்காரணம் கொண்டும் அணை கட்டும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைத் துன்புறுத்தக் கூடாது.அவர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும்.நமக்கு இருக்கிறதோ இல்லையோ , தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் .... என்பன போன்றவைகளில் , தான் கட்டப் போகும் அணையை விட உறுதியாக இருந்தார் , பென்னி குவிக் . அணை கட்டும் பணியும் வேகமாக வளர்ந்தது.பாதி அணை கட்டி முடிவடைந்த நிலையில் காட்டில் கடுமையான மழை வெளுத்தெடுத்தது.அந்த மழையில் பாதி கட்டப்பட்ட அணை உடைந்து , வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.சர்வ நாசம்.மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் . மனம் தளரவில்லை பென்னி குவிக்.மீண்டும் தொடங்கினார் . ஓரளவு வளர்ந்த நிலையில் இருந்த அணைக்கான சவால் , இம்முறை வன விலங்குகள் வடிவத்தில் வந்தது.மிகப் பெரும் யானைக் கூட்டம் வந்து அணையை முட்டி , மோதி , உடைத்துச் சிதைத்துப் போட்டன . இரண்டாவது முறையாக துவங்கிய இடத்திலேயே பூஜ்ஜியத்தில் வந்து நின்றார் பென்னிகுவிக் . மூன்றாம் முறை பணியைத் தொடங்கலாம் என்று நினைத்த பென்னி குவிக்கின் படைகளை மலேரியா தாக்கியது .
இப்படி தொடர்ச்சியான துன்பங்களைப் பார்த்த பிரிட்டீஷ் அரசு , அணை கட்டும் பணியை நிறுத்தி விடலாம் என்று முடிவு செய்து பென்னி குவிக்கை திரும்ப அழைத்தது . சென்னையில் வைத்து நடந்த பிரிட்டீஷ் அதிகாரிகள் கூட்டத்தில் பென்னி குவிக்கிடம் அணை கட்டும் பணியை அப்படியே நிறுத்திவிட்டு , நீங்கள் வட இந்தியாவில் பணிக்குச் செல்லுங்கள் என்ற உத்திரவு தரப்பட்டது . ஆனால் அந்த உத்திரவை பென்னி குவிக் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் . " நான் இந்த பூமிக்கு வருவது ஒரு முறை மட்டுமே.ஆகையால் நான் வந்து சென்றதன் அடையாளமாக மக்களுக்கு ஏதேனும் செய்ய நினைக்கிறேன் . அந்த அணை கட்டப்பட்டால் , அதனால் பல லட்சக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறும்.லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகும்.எனவே நான் என் சொந்தத் பணத்தில் அணையைக் கட்டப் போகிறேன் ... " --என்று கூறிவிட்டு வெளியேறினார் .
வெளியே வந்தவர் , உடனடியாக தன் சொந்த நாடான இங்கிலாந்துக்கு - அயர்லாந்துக்கு கப்பலேறினார்.அங்கு சென்று தனக்கு சொந்தமானது என்றிருந்த சகலத்தையும் விற்றார்.எதையும் விடவில்லை.தன் பாட்டனார் தனக்குத் தந்த வீட்டையும் விற்றார்.ஓரளவிற்குப் பணம் கிடைத்தது.எடுத்துக் கொண்டு மதுரைக்கு வந்தார் . மீண்டும் அணையைக் கட்டும் பணியைத் தொடங்கினார் . இம்முறை இயற்கை ஒத்துழைத்தது . அணை வேகமாக வளர்ந்தது . கடல் மட்டத்தில் இருந்து 2980 அடிகள் உயரத்தில் , அடர்ந்த காட்டின் நடுவே , முல்லை என்ற ஒரு காட்டாற்றின் போக்கை மாற்றியவாறு , 146 அடிகள் கொள்ளளவுடன் , 1895 ல் முல்லைப் பெரியாறு அணை கம்பீரமாக எழுந்து நின்றது .
💥பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் அவர்களுக்கு ,
179 வது பிறந்தநாள் வாழ்த்துகள் ..💥💥
✨தடுக்கி விழுந்தோம் என்பதில் நிற்பதல்ல
வாழ்க்கை ✨
⚡️விழுந்த இடத்திலிருந்து எழுந்தோம் என்பதே
முதன்மை ⚡️
படித்ததில் பிடித்தது