Balu Mahendra Library

Balu Mahendra Library பாலு மகேந்திரா நூலகம் - கிளிநொச்சி | திரைப்பட நூலகம் மற்றும் கற்கை வள நிலையம்

ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீனக் கட்டமைப்புடனான திரைப்பட நூலகம் மற்றும் கற்கை வள நிலையம் ‘பாலு மகேந்திரா நூலகம்’ ஆகும்.

இன்று எமது நூலகத்திற்கு கிளி/ கிளிநொச்சி மத்திய கல்லூரியின் 2025 கலைப்பிரிவு மாணவர்கள் வருகை தந்திருந்தனர். மாணவர்கள் சி...
23/10/2024

இன்று எமது நூலகத்திற்கு கிளி/ கிளிநொச்சி மத்திய கல்லூரியின் 2025 கலைப்பிரிவு மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.

மாணவர்கள் சில நூல்களைத்தெரிவுசெய்து வாசித்ததுடன், ‘The Elephant Whisperers’ (2022) ஆவணக்குறும்படத்தை பார்வையிட்டனர்.
தாய் யானையை இழந்த ஆதரவற்றக் குட்டி யானைகளுக்கும் அதைப் பராமரிக்கும் பழங்குடி இனத் தம்பதியர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியேர்களிடையே உருவாகும் பாசப் பிணைப்பைப் பற்றி இக்குறும்படம் விவரிக்கிறது. இது 95வது ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது.

நூலகத்திற்கு வருகைதந்த மாணவி ஒருவரின் கருத்து:

“இன்று பாலுமகேந்திரா நூலகத்திற்கு எமது கலைத்துறை மாணவர்களுடன் வருகை தந்தோம். நான் இந்த நூலகத்தில் மிதயா கானவி எழுதிய ‘கருணை நதி’ நாவலை தெரிவு செய்து வாசித்தேன். மிகவும் அமைதியான நூலகமாக காணப்பட்டது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். புதிய விடயங்களை பார்வையிட்டேன். மிகவும் அருமையான நூல்கள் காணப்பட்டது, வாசிப்பதற்குரிய முறையாக காணப்பட்டது.”

நன்றி
கு. கீர்த்திகா
கிளி / கிளிநொச்சி மத்திய கல்லூரி

ஆசிரியரின் கருத்து:

“இன்று பாலுமகேந்திரா நூலகத்தின் கலை பிரிவு மாணவர்களை அழைத்து வந்திருந்தேன். சினிமா தொடர்பான நூலக ஆவண படங்கள் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மிகப் பெறுமதியான முயற்சி. ‘The Elephant Whisperers’ ஆவணப்படத்தினை பார்வையிட்டோம். அறிவார்ந்த சமூகம் ஒன்றை கட்டமைக்கும் முயற்சிக்கு இந்த நூலகத்தின் பங்களிப்பு இன்னும் விரிய வேண்டும். ஈழத்து சினிமா படங்களும் தொகுக்க பட வேண்டும். இன்னும் மக்களை நோக்கி பயணிக்க வாழ்த்துகிறேன்.”

நன்றி
அ. சத்தியானந்தம்
ஆசிரியர்
கிளி / கிளிநொச்சி மத்திய கல்லூரி

வணக்கம்,பாலு மகேந்திரா நூலகத்தின் ஐந்தாம் ஆண்டு ஆரம்ப விழா  நிகழ்வானது 05.10.2024 சனிக்கிழமை, பிற்பகல் 2.30 மணிக்கு கிளி...
06/10/2024

வணக்கம்,

பாலு மகேந்திரா நூலகத்தின் ஐந்தாம் ஆண்டு ஆரம்ப விழா நிகழ்வானது 05.10.2024 சனிக்கிழமை, பிற்பகல் 2.30 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் நடைபெற்றதுடன் அன்றைய தினம் எம்மால் இறுதியாக நடாத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற்ற சிறுகதைகளை “எங்கட கதைகள் - தொகுப்பு 02” ஆக எங்கட புத்தகங்களுடன் இணைந்து வெளியிட்டோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட நிரந்தர பதில் அரசாங்க அதிபர் திரு. எஸ்.முரளிதரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், கிளிநொச்சி வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி. கலைச்செல்வி சங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்ததுடன் எமது சிறுகதைப்போட்டியின் நடுவர்களுள் ஒருவராக பணியாற்றிய எழுத்தாளர் திரு. தீபச்செல்வன் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

இந் நிகழ்வினை பாலு மகேந்திரா நூலகத்தின் தலைவர் கம்ஜினி ஜனார்த்தன் அவர்கள் தலைமையேற்று நடாத்தியிருந்ததுடன் எங்கட புத்தகங்கள் பதிப்பகம் சார்பாக அதன் நிறுவுனர் குலசிங்கம் வசீகரன் அவர்கள் கலந்துசிறப்பித்திருந்தார்.

இந் நிகழ்வில் கலந்துசிறப்பித்திருந்த பாலு மகேந்திரா நூலகத்தின் நலன் விரும்பிகள், பயனாளர்கள், வாசகர்கள், செயற்பாட்டாளர்கள், புத்தியீவிகள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அத்துடன் “எங்கட கதைகள் - தொகுப்பு 02” நூலொன்றின் விலை 600 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இப் புத்தகங்களை வாசகர்கள் வெண்பா புத்தகசாலை, யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை மற்றும் Book lab ஆகிய விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் பாலு மகேந்திரா நூலகத்தையோ, எங்கட புத்தகங்கள் பதிப்பகத்தையோ தொடர்புகொள்வதன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம். ஈழத்தின் ஏனைய பகுதிகளிலும் புலம்பெயர் நாடுகளிலும் இப் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

இவ்வண்ணம்,
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
06.10.2024


#எங்கட_கதைகள் #எங்கட_புத்தகங்கள்

வணக்கம்,பாலு மகேந்திரா நூலகத்தின் வளர்ந்துவரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பட்டறை மற்றும் எங்கட புத்தகங்களுடன்...
02/10/2024

வணக்கம்,

பாலு மகேந்திரா நூலகத்தின் வளர்ந்துவரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பட்டறை மற்றும் எங்கட புத்தகங்களுடன் இணைந்து எம்மால் நடாத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற்ற சிறுகதைகளை “எங்கட கதைகள் - தொகுப்பு 02” ஆக எங்கட புத்தகங்களுடன் இணைந்து வெளியிடவுள்ளோம்.

இப்புத்தக வெளியீட்டு நிகழ்வானது 05.10.2022 சனிக்கிழமை, பிற்பகல் 2.30 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். இந் நிகழ்விற்கு பாலு மகேந்திரா நூலகத்தின் நலன் விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

எம்மால் நடாத்தப்பட்ட சிறுகதைப்போட்டிக்கு எமக்கு 105 ஈழத்து எழுத்தாளர்களிடமிருந்து மொத்தம் 135 சிறுகதைகள் கிடைக்கப்பெற்றன. இவற்றில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுடைய சிறுகதைகள் “எங்கட கதைகள் - தொகுப்பு 02” ஆக வெளிவரவுள்ளன..

இச் சிறுகதைத்தொகுப்பில் வெளிவரவுள்ள சிறுகதைகளின் விபரம்:

சிறுகதைப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற
“மலர்” - கேசலா சுந்தரம்பிள்ளை - வவுனியா

இரண்டாம் இடம் பெற்ற
“வரலாறு இனி மாறுமோ ?” - சா.ஜனனி - யாழ்ப்பாணம்

மூன்றாம் இடம் பெற்ற
“எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத நிகழ்வுகள்” - சுப்பிரமணியம் நவமணி - இரத்தினபுரி

ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதைகள் அகரவரிசையில்

"உறவுகள் தொடர்கதை" - மஹின் சுப்பிரமணியம் - கம்பஹா
"ஓர் உயர்மட்ட தீர்மானம்" - அப்தல் வாகிது. முஹ்சீன் - திருகோணமலை
"கருணையில்லா காலம்" - சுவஸ்திகா ராஜ்பிரகாஷ் -கொழும்பு
"கொல்லாமற் கொல்கிறீர்கள்" - சிற்றம்பலம் சண்முகநாதன் - முல்லைத்தீவு
"சந்திராக்கா" - இரத்தினம் பிரதீபன் - ஜேர்மனி
"தீராசாபம்" - குமார் சுகுணா - தலவாக்கலை
"பதுங்கு குழி" - பொன் குலேந்திரன் - கனடா
"மரணம் ஈன்ற ஜனனம்" - சுதாமா செல்வரெட்ணம் - மட்டக்களப்பு
"மருதாயி" - மதிவதனி குருச்சந்திரநாதன் - யாழ்ப்பாணம்
"வயிறு" - தங்கராசா இராஜராயேஸ்வரி - யாழ்ப்பாணம்

இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
02.10.2024

#எங்கடகதைகள் #எங்கடபுத்தகங்கள்

வணக்கம்,பாலு மகேந்திரா நூலகத்தின் ஐந்தாம் ஆண்டு ஆரம்ப விழா  நிகழ்வானது 05.10.2024 சனிக்கிழமை, பிற்பகல் 2.30 மணிக்கு கிளி...
30/09/2024

வணக்கம்,

பாலு மகேந்திரா நூலகத்தின் ஐந்தாம் ஆண்டு ஆரம்ப விழா நிகழ்வானது 05.10.2024 சனிக்கிழமை, பிற்பகல் 2.30 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

அன்றைய தினம் எம்மால் இறுதியாக நடாத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற்ற சிறுகதைகளை “எங்கட கதைகள் - தொகுப்பு 02” ஆக எங்கட புத்தகங்களுடன் இணைந்து வெளியிடவுள்ளோம்.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட நிரந்தர பதில் அரசாங்க அதிபர் திரு. எஸ்.முரளிதரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், கிளிநொச்சி வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி. கலைச்செல்வி சங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அத்துடன் சிறுகதைப்போட்டியின் நடுவர்களுள் ஒருவராக பணியாற்றிய எழுத்தாளர் திரு. தீபச்செல்வன் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். இந் நிகழ்வினை பாலு மகேந்திரா நூலகத்தின் தலைவர் கம்ஜினி ஜனார்த்தன் அவர்கள் தலைமையேற்று நடாத்தவுள்ளார்.

இந் நிகழ்விற்கு பாலு மகேந்திரா நூலகத்தின் நலன் விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இந் நேரத்தில் எமது நூலகத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும் பயனாளர்கள், வாசகர்கள், செயற்பாட்டாளர்கள், புத்தியீவிகள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் எமது நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வண்ணம்,
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
30.09.2024


#எங்கட_கதைகள் #எங்கட_புத்தகங்கள்

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்❤️
15/01/2024

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்❤️

தென்னிந்திய சினிமாவில் தேசிய விருதுபெற்ற திரைப்பட இயக்குநரும், திரு. பாலு மகேந்திராவின் மாணவனுமான சீனு ராமசாமி Seenu Ram...
25/10/2023

தென்னிந்திய சினிமாவில் தேசிய விருதுபெற்ற திரைப்பட இயக்குநரும், திரு. பாலு மகேந்திராவின் மாணவனுமான சீனு ராமசாமி Seenu Ramasamy அவர்களிடமிருந்து ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ எனும் அவரது கவிதைத் தொகுப்பு நூல்கள் இரண்டு 24.10.2023 அன்று எமக்கு நன்கொடையாகக் கிடைக்கப்பெற்றன.

இவ்விரண்டு நூல்களுடன் சேர்த்து எம்மிடம் மொத்தம் 852 புத்தகங்களும் 12,986 திரைப்படங்களும் உள்ளன.

வணக்கம்,திரை இரசனையை மேம்படுத்தும் நோக்குடன் பாலு மகேந்திரா நூலகமானது BML box இனை அறிமுகப்படுத்தவுள்ளது. BML box இனூடாக ...
26/09/2023

வணக்கம்,

திரை இரசனையை மேம்படுத்தும் நோக்குடன்
பாலு மகேந்திரா நூலகமானது BML box இனை அறிமுகப்படுத்தவுள்ளது.

BML box இனூடாக பாலு மகேந்திரா நூலகத்திலுள்ள பத்தாயிரத்துக்கும் அதிகமான திரைப்படங்களை நிகழ்நிலையில் பார்வையிடுவதற்கான வசதியை செய்துள்ளதுடன், இவற்றில் நூற்றுக்கும் அதிகமான உலகத் திரைப்படங்களிற்கு தமிழ்த்துணைத்தலைப்புடன் பார்வையிடுவதற்கான வசதியையும் செய்துள்ளோம்.

மேலும் எதிர்காலத்தில் BML box இனூடாக எம்மிடமுள்ள ஒலி நூல்களையும், 200 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட கற்கைக்காணொளிகளையும் பயனாளர்கள் பயன்படுத்தக்கூடிய வசதிகளையும் செய்து வருவதுடன், முதற் கட்டமாக இதனை சில பாடசாலைகளிலும் திரை இரசனை இயக்கங்களிலும் அறிமுகப்படுத்தவுள்ளோம் என்பதனை பாலு மகேந்திரா நூலகத்தின் நான்காம் ஆண்டு ஆரம்ப நாளான இன்று மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
26.09.2023

வணக்கம்,பாலு மகேந்திரா நூலகத்தின் மூன்றாம் ஆண்டு ஆரம்பத்தை முன்னிட்டு, வளர்ந்துவரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்ட...
26/09/2023

வணக்கம்,

பாலு மகேந்திரா நூலகத்தின் மூன்றாம் ஆண்டு ஆரம்பத்தை முன்னிட்டு, வளர்ந்துவரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சென்ற வருடம் (2022) பட்டறை மற்றும் எங்கட புத்தகங்களுடன் இணைந்து சிறுகதைப் போட்டி ஒன்றினை நாம் நடாத்தியிருந்தமை நீங்கள் அறிந்ததே.

எம்மால் நடாத்தப்பட்ட சிறுகதைப்போட்டிக்கு எமக்கு 105 ஈழத்து எழுத்தாளர்களிடமிருந்து மொத்தம் 135 சிறுகதைகள் கிடைக்கப்பெற்றன. இவற்றில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, வெற்றி பெற்ற சிறுகதைகள் சிறுகதைப்புத்தகத் தொகுப்பாக வெளியிடப்படும் என நாம் முன்னர் அறிவித்திருந்தோம்.

அதற்கமைய அடுத்த வருடம் தைப்பொங்கல் தினத்தன்று அச் சிறுகதைத்தொகுப்பாகிய “எங்கட கதைகள் - தொகுப்பு 02” ஐ வெளியிட நாம் உத்தேசித்துள்ளோம் என்பதை பாலு மகேந்திரா நூலகத்தின் 4 ஆம் ஆண்டு ஆரம்ப நாளான இன்று மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

இச் சிறுகதைத்தொகுப்பில் வெளிவரவுள்ள சிறுகதைகளின் விபரம்:

சிறுகதைப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற
“மலர்” - கேசலா சுந்தரம்பிள்ளை - வவுனியா

இரண்டாம் இடம் பெற்ற
“வரலாறு இனி மாறுமோ ?” - சா.ஜனனி - யாழ்ப்பாணம்

மூன்றாம் இடம் பெற்ற
“எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத நிகழ்வுகள்” - சுப்பிரமணியம் நவமணி - இரத்தினபுரி

ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதைகள் அகரவரிசையில்
"உறவுகள் தொடர்கதை" - மஹின் சுப்பிரமணியம் - கம்பஹா

"ஓர் உயர்மட்ட தீர்மானம்" - அப்தல் வாகிது. முஹ்சீன் - திருகோணமலை

"கருணையில்லா காலம்" - சுவஸ்திகா ராஜ்பிரகாஷ் -கொழும்பு

"கொல்லாமற் கொல்கிறீர்கள்" - சிற்றம்பலம் சண்முகநாதன் - முல்லைத்தீவு

"சந்திராக்கா" - இரத்தினம் பிரதீபன் - ஜேர்மனி

"தீராசாபம்" - குமார் சுகுணா - தலவாக்கலை

"பதுங்கு குழி" - பொன் குலேந்திரன் - கனடா

"மரணம் ஈன்ற ஜனனம்" - சுதாமா செல்வரெட்ணம் - மட்டக்களப்பு

"மருதாயி" - மதிவதனி குருச்சந்திரநாதன் - யாழ்ப்பாணம்

"வயிறு" - தங்கராசா இராஜராயேஸ்வரி - யாழ்ப்பாணம்

இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
26.09.2023

#எங்கடகதைகள் #எங்கடபுத்தகங்கள்

வணக்கம்,ஈழத்திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீன கட்டமைப்புடனான திரைப்பட நூலகம...
26/09/2023

வணக்கம்,

ஈழத்திரைப்படத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இலாப நோக்கமற்றுச் செயலாற்றும் சுயாதீன கட்டமைப்புடனான திரைப்பட நூலகமாகிய பாலு மகேந்திரா நூலகம் இன்றைய தினம் அதனது 4 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

எமது நூலகத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும் பயனாளர்கள், வாசகர்கள், செயற்பாட்டாளர்கள், புத்தியீவிகள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
26.09.2023

வணக்கம்,சென்ற வருடம் (2021) எம்மால் நடாத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற்ற சிறுகதைகள் “எங்கட கதைகள் - தொகுப்பு 01”...
22/12/2022

வணக்கம்,

சென்ற வருடம் (2021) எம்மால் நடாத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் வெற்றிபெற்ற சிறுகதைகள் “எங்கட கதைகள் - தொகுப்பு 01” ஆக எங்கட புத்தகங்களுடன் இணைந்து வெளியிட்டிருந்தோம்.

புத்தகம் ஒன்றின் விலை 600 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இப் புத்தகங்களை வாசகர்கள் வெண்பா புத்தகசாலை, யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலை மற்றும் Book lab ஆகிய விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் பாலு மகேந்திரா நூலகத்தையோ, எங்கட புத்தகங்கள் பதிப்பகத்தையோ அல்லது குறித்த சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களையோ தொடர்புகொள்வதன் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். ஈழத்தின் ஏனைய பகுதிகளிலும் புலம்பெயர் நாடுகளிலும் இப் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

முதற் பதிப்பாக 500 புத்தகங்கள் அச்சுப் பதிப்பு செய்யப்பட்டுள்ளதுடன் இதனால் கிடைக்கும் வருமானம் சிறுகதை எழுத்தாளர்களைச் சென்றடையும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
22.12.2022


#எங்கட_கதைகள் #எங்கட_புத்தகங்கள்

Address

1st Floor, District Coop Council Building, Depot Junction
Kilinochchi
44000

Alerts

Be the first to know and let us send you an email when Balu Mahendra Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Balu Mahendra Library:

Share

Category