12/12/2024
கல் எளிய முஸ்லீம் மகளிர் அரபுக் கல்லூரி தனது இருப்பு தொடர்பில் தொடுத்த வழக்கில் முக்கிய திருப்பம்.
அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களின் வக்பு சொத்துக்கள் தொடந்து சூறையாடப்படுவது சம்பந்தமாக அவ்வப்போது பேசிவிட்டு எமது உம்மத் அமைதியாகிவிடுகிறது. ஆனால் ஒருசிலர் தமது சமூகத்தின் மீதான கடமையை தம் தோள்கள் மீது சுமந்து போராடி வருகின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரியட்டுமாக.
இலங்கையின் பாரம்பரிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியான கல் எளிய முஸ்லீம் மகளிர் அரபுக் கல்லூரிக்கும் அதன் உடமைகளுக்கும் இவ்வாறான ஓர் ஆபத்து ஏற்பட்டிருப்பதை அறிந்த அதன் பழைய மாணவிகள், ஒருசிலரது ஒத்துழைப்போடு கல்லூரியையும் அதன் உடமைகளையும் பாதுகாக்க முன்வந்து எடுத்த பல முயற்சிகளில் ஒன்று தற்போது வெற்றியளித்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
கல் எளிய முஸ்லீம் மகளிர் அரபுக் கல்லூரி போன்றே மஹரகம கபூரிய்யா அரபுக்க கல்லூரியும் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. மஹரகம கபூரிய்யாவும் அதன் உடமையுமான Grandpas இடமும் இன்று தனியார் உடமைகளாக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பழைய மாணவர்களும் கல்லூரி நலன்விரும்பிகளும் உள்ளனர்.
நீண்ட காலமாக இலங்கை வக்பு சபையிலும் முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திலும் பதிவு செய்யப்பட்டு, இலங்கை வக்பு சபைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களும் செலுத்தப்பட்டு, அவ்வப்போது ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு வக்பு சபை மத்தியஸ்தம் வழங்கி பாதுகாத்து வந்த இந்த உடமைக்கு எதிராக சமூகத்தில் பிரபல்யம் பெற்ற முஸ்லீம் சட்டத்தரணிகளை களமிறங்கியிருப்பது கவலையளிப்பதாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.
இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய வக்புடமையான கபூரிய்யாவும் அதன் உடைமையும் தனியார் உடமைகளாக்கப்படுவதை தடுத்து நிறுத்தி வக்பு சபையின் நேரடி கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்படுவதற்கான பழைய மாணவர்களின் முயற்சியோடு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.