Divisional Secretariat Thunukkai

Divisional Secretariat Thunukkai Service Public Service

பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி - 2025===================================துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதி...
01/11/2025

பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி - 2025
===================================
துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 2025ம் ஆண்டுக்கான பரிசளிப்பு நிகழ்வானது 30.10.2025ம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. சி.நித்தியா அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் திரு. இ.ரமேஸ் அவர்களும் விருந்தினர்களாக கணக்காளர், சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்ட விளையாட்டு பயிற்றுனர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழக வீரர்கள் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் அணிகளுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்ட துடன் நிகழ்வானது சிறப்பாக முறையில் நடைபெற்றது.

ஊடகப் பிரிவு
பிரதேச செயலகம்
துணுக்காய்.

சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் துணுக்காயில் 31.10.2025 நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது..துணுக்காய் பிரதேச செயலக சமுர்த்தி கர...
01/11/2025

சமுர்த்தி ஆரோக்கிய உணவகம் துணுக்காயில் 31.10.2025 நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது..

துணுக்காய் பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் திருமதி த.பத்மரேபா அவர்கள் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

துணுக்காய் பிரதேச செயலக வளாகத்தினுள் அமைக்கப்பட்ட மேற்படி சமுர்த்தி ஆரோக்கிய உணவகத்தினை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த துணுக்காய் பிரதேச செயலாளர் மதிப்பார்ந்த திரு இ.ரமேஸ் அவர்கள் பெயர்ப்பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததுடன் உணவகத்தையும் நாடாவை வெட்டி உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.

மேற்படி நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக உதவி பிரதேச செயலாளர் திருமதி சி.நித்தியா அவர்களும் கணக்காளர் திரு வை.கஜந்தன் அவர்களும் ,நிர்வாக உத்தியோகத்தர் திருமதி கா.பானுமதி அவரகளும் சிரேஸ்ர அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கே.நாளாயினி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கெளரவ விருந்தினர்களாக சமுர்த்தி வங்கிச் சங்க நிறைவேற்றுக்குழு தலைவர் திரு. நி.விதுசன் அவர்களும் சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை தலைவர் திருமதி த.ஞானேஸ்வரி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்..

மேலும் சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி வீ சுஜிதா வங்கிச் சங்க முகாமைத்துவ பணிப்பாளர் திரு இ.தரணிவாசன் அவர்களோடு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் துணுக்காய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் சமுதாய மட்ட அமைப்பு தலைவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஆரோக்கியமான உணவுகளையும் நஞ்சற்ற போசாக்கான உணவுகளையும் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க செய்வதற்காக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஆரோக்கிய உணவகத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு
பிரதேச செயலகம்
துணுக்காய்.

30/10/2025
பனம் விதை நடுகை===================வடக்கு மாகாணத்தில் அழிவடைந்து வரும் பனை  வளத்தை பாதுகாக்கும் நோக்கமாக கொண்டு பனை அபிவி...
30/10/2025

பனம் விதை நடுகை
===================

வடக்கு மாகாணத்தில் அழிவடைந்து வரும் பனை வளத்தை பாதுகாக்கும் நோக்கமாக கொண்டு பனை அபிவிருத்தி சபையின் நிதி உதவியுடன் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில் இந்த வருடம் 1200 பனை விதைகள் நாட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக 200 பனம் விதைகள் 29.10.2025புதன்கிழமை காலை 10.00 மணிக்கு பிரதேச செயலக சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நளாயினிதேவி கேதீஸ்வரன் தலைமையில் நடுகை செய்யப்பட்டது.
இதில் பனை அபிவிருத்தி சபையின் வெளிக்கள உத்தியோகத்தர் , கிராமசேவையாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகப் பிரிவு
பிரதேச செயலகம்
துணுக்காய்.

பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டு குழுக்கூட்டம் - 2025===============================துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட...
27/10/2025

பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டு குழுக்கூட்டம் - 2025
===============================

துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு, விவசாயம், வர்த்தகம் ஆகிய நோக்கங்களுக்காக காணி வழங்குவதற்கான அனுமதியைப் பெறும் நோக்கத்திற்காக 2025 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டிற்கான பிரதேச மட்ட காணிப்பயன்பாட்டுக் குழுக்கூட்டம் இன்றைய தினம் (27.10.2025) துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் உதவிப்பிரதேச செயலாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர், துணுக்காய் பிரதேச சபையின் கௌரவ உதவித் தவிசாளர், செயலாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், நில அளவை திணைக்கள உத்தியோகத்தர், வன வள தினைக்கள உத்தியோகத்தர் குடியேற்ற உத்தியோகத்தர், காணிப்பயன்பாட்டு உத்தியோகத்தர், கிராம அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்ததுடன், குடியிருப்பு, விவசாய மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்ட காணிகள் தொடர்பாக ஆராய்ந்து சிபர்சுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு
பிரதேச செயலகம்
துணுக்காய்.

வடமாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினல் இடம்பெற்ற திறன்சார் முகாமைத்துவப் போட்டி 2025 இல் தேறாங்கண்டல் விநாயகர் முதியோர் பகல...
23/10/2025

வடமாகாண சமூகசேவைகள் திணைக்களத்தினல் இடம்பெற்ற திறன்சார் முகாமைத்துவப் போட்டி 2025 இல் தேறாங்கண்டல் விநாயகர் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் வடமாகாணத்தில் முதலாமிடத்தினைப்பெற்றுள்ளதுடன் தேசிய முதியோர் செயலகத்தினால் நடாத்தப்பட்ட சம்மேளனங்களுக்கிடையிலான போட்டியிலும் துணுக்காய் முதியோர் சம்மேளனம் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. தேறாங்கண்டல் விநாயகர் பகல் பராமரிப்பு நிலையத்தைச் சேர்ந்த முதியவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் இதற்கு வழிகாட்டிய முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கிய தேறாங்கண்டல் கிராம அலுவலர் ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஊடகப் பிரிவு
பிரதேச செயலகம்
துணுக்காய்.

22/10/2025

வாகன வருமான வரி பத்திரங்களை வழங்கும் (Tax) சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
===================================

இதுவரை காலமும் தடைப்படிருந்த சேவைகள் தற்போது மீளவும் இயங்க ஆரம்பித்துள்ளன.
அதற்கமைய வழமை போல் 21.10.2025 முதல் எமது கருமபீடம் ஊடாக வாகன வருமான வரி பத்திரங்களை (Tax) பெற்றுக்கொள்ள முடியும்.

ஊடகப் பிரிவு
பிரதேச செயலகம்
துணுக்காய்.

உத்தியோகத்தர்களுக்கான இயலுமை திறன்விருத்தி பயிற்சி நெறி - 2025துணுக்காய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான இயலுமை திறன்...
17/10/2025

உத்தியோகத்தர்களுக்கான இயலுமை திறன்விருத்தி பயிற்சி நெறி - 2025

துணுக்காய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான இயலுமை திறன்விருத்தி பயிற்சி நெறியானது 16.10.2025 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணியளவில் பிரதேச செயலாளர் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.

குறித்த பயிற்சி நெறியின் வளவாளராக மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதீப் அவர்கள் கலந்து கொண்டதுடன் தற்போது அலுவலக வேலைகளில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக இப்பயிற்சி நெறி அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பிரிவு
பிரதேச செயலகம்
துணுக்காய்.

16/10/2025

⚡ மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்
👤 தனிநபர் பாதுகாப்பு
✅ மின்னல் நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
✅ 🌳 மரத்தின் கீழ் நிற்பதைத் தவிர்க்கவும் — மின்னல் மரத்தின் மீது விழும் வாய்ப்பு அதிகம்.
✅ 🪑 இரும்பு பொருட்கள், சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற உலோகப் பொருட்களை தொடாதீர்கள்.
✅ 📞 கைப்பேசி அல்லது மின் இணைப்புள்ள தொலைபேசியில் பேச வேண்டாம்.
✅ 💧 நீரில் (தண்ணீரில்) நடப்பது அல்லது விளையாடுவது தவிர்க்கவும்.
✅ ⛰️ திறந்த நிலம், வயல், கடற்கரை போன்ற இடங்களில் மின்னல் அடிக்கும்போது உடனே தாழ்ந்த இடத்திற்குச் செல்லவும்.
✅ 🤲 கைகள், கால்கள் உடலை சுருக்கி அமருங்கள் (மின்னல் தாக்க வாய்ப்பு குறையும்).
✅ ⛪ மின்சாரம் இல்லாத கான்கிரீட் கட்டடம் அல்லது வாகனத்தின் உள்ளே தஞ்சம் அடையவும்.

🏠 வீட்டு பாதுகாப்பு
🔌 மழை மற்றும் இடியுடன் கூடிய மின்னல் ஆரம்பிக்கும் முன் மின்சார சாதனங்களை (TV, கம்ப்யூட்டர், ஃபிரிட்ஜ் முதலியன) ப்ளக் அவுட் செய்யவும்.
⚙️ மின்னல் தடுப்பு (Lightning Arrestor) அமைப்பு வீட்டின் கூரையில் பொருத்தி வைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
🚪 கதவுகள், ஜன்னல்கள் மூடப்பட்டிருக்கட்டும் — மின்னல் காற்றுடன் சேர்ந்து உள்ளே வராமல் தடுக்க.
🌧️ மின் இணைப்புள்ள நீர்வெப்பகைகள் அல்லது மின் சாதனங்களை மழையின் போது பயன்படுத்த வேண்டாம்.
📺 டிவி ஆண்டெனா அல்லது கேபிள் இணைப்பை மழை நேரத்தில் துண்டிக்கவும்.
💡 நிலத்தின் மின்தடுப்பு (Earthing) சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
⚠️ மின்னல் தாக்கம் ஏற்பட்டால்
🚑 யாரேனும் மின்னல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்.
🫀 உயிர் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் உடனடி சிகிச்சை தேவைப்படலாம் — CPR (மூச்சுத் துடிப்பு மீட்டல்) உதவியையும் பயன்படுத்தலாம்.
இவை போன்ற எளிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உயிர் மற்றும் சொத்தை பாதுகாக்கும்.
“மின்னல் விழும் முன் சிந்தி — பாதுகாப்பே உயிர்” ⚡

*50% மானிய அடிப்படையில் விதை தானிய பாசிப்பயறு வழங்கிவைப்பு* ==================================விவசாயத்தை ஊக்குவிக்கும் ந...
14/10/2025

*50% மானிய அடிப்படையில் விதை தானிய பாசிப்பயறு வழங்கிவைப்பு*
==================================

விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் விவசாய அமைச்சினால் 50% மானியத் திட்டத்தின் கீழ் துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு பிரதேச செயலகத்தில் பாசிப்பயறு விதை தானியம் வழங்கப்படுகின்றது.

ஊடகப் பிரிவு
பிரதேச செயலகம்
துணுக்காய்.

Address

Thunukkai
Mallavi

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94212285262

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat Thunukkai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Divisional Secretariat Thunukkai:

Share