District Secretariat Mannar

District Secretariat Mannar Public Service

மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் உற்பத்தித் திறன்சார் அறிவினை மேம்படுத்தல் மற்றும் பரிசோதித்தல் செயற்பாடுகளின் ஒரு பகுதிய...
01/06/2026

மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் உற்பத்தித் திறன்சார் அறிவினை மேம்படுத்தல் மற்றும் பரிசோதித்தல் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு அரையாண்டு ரீதியில் பரீட்சைகள் நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் கடந்த 2025 இரண்டாம் அரையாண்டுக்கான வெற்றியாளர்களுக்கு அரசாங்க அதிபரால் வெற்றிச் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

வெற்றியாளர்கள்
C.M. பெர்னாண்டோ - தாபனக்கிளை
M. மாலினி - கொள்ளல் பிரிவு
S. சரணியா - புள்ளிவிபரக்கிளை
A.S நிர்மலா - கொள்ளல் பிரிவு
J.R.C லம்பேட்- மனிதவள அபிவிருத்தி பிரிவு

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபரும், உற்பத்தித்திறன் அதிகாரியுமான திரு M. பிரதீப் அவர்களும் கலந்துகொண்டார்.

மன்னாரில் உல்லாச பயண துறை விருத்தியின் ஓர் அங்கமாக ஆதாம் பனைமர உல்லாச விடுதி  ADAM'S PALM RESORT கௌரவ இராமலிங்கம் சந்திர...
29/05/2026

மன்னாரில் உல்லாச பயண துறை விருத்தியின் ஓர் அங்கமாக ஆதாம் பனைமர உல்லாச விடுதி ADAM'S PALM RESORT கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரன் கடற்றொழில் அமைச்சர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது

28/05/2026
மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோர பிரதேசங்களில் இராணுவத்தின் ஏற்பாட்டில் 'அழகிய தீவு புன்னகைக்கும் மக்கள்' எனும் கருப்பொரு...
28/05/2026

மன்னார் மாவட்டத்தில் கடற்கரையோர பிரதேசங்களில் இராணுவத்தின் ஏற்பாட்டில் 'அழகிய தீவு புன்னகைக்கும் மக்கள்' எனும் கருப்பொருளில் கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுப்பு

சிப்பியாறு புனித அந்தோனியார் தேவாவாலய திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்.எதிர்வரும் ஆனி மாதம் 2ஆம் திகதி (2026.06.02)...
27/05/2026

சிப்பியாறு புனித அந்தோனியார் தேவாவாலய திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்.

எதிர்வரும் ஆனி மாதம் 2ஆம் திகதி (2026.06.02) இடம்பெறவுள்ள மன்னார் சிப்பியாறு புனித அந்தோனியார் தேவாவாலய திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடலானது மன்னார் ஆயரின் கோரிக்கைக்கமைவாக, மறைமாவட்ட குருமுதல்வர் வண.அருட்பணி P. கிறிஸ்துநேசரெட்னம் அவர்களது ஒழுங்கமைப்பில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க. கனகேஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் சிப்பியாறு புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்றது.

குறித்த இக்கலந்துரையாடலில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் (பதில்) திரு கா.காந்தீபன், உதவி பிரதேச செயலாளர் திரு.ச.டிலக்சன், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் கௌரவ.ஞா.பிறேம்குமார் , சிப்பியாறு புனித அந்தோனியார் தேவாவாலய பரிபாலகர் வண.அருட்பணி அருட்பிரகாசம் உள்ளிட்ட பல்வேறு துறைசார் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அருட்தந்தையர்கள் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கமைவாக, எதிர்வரும் ஆனி மாதம் 2ஆம் திகதி, காலை 6.00, 7.30, 10.30, மாலை 3.00 மணி என வெவ்வேறு நான்கு நேரங்களில் திருவிழா திருப்பலி இடம்பெறவுள்ளது.

குறித்த நாளில் , பக்தர்களுக்கான பாதுகாப்பு, சுகாதாரம், நீர் வசதிகள், மேலும் ஏனைய அடிப்படை வசதிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு, குறித்த பகுதியில் மதுபானப்பாவனை மற்றும் விற்பனை விலைக்கட்டுப்பாடுகள் தொடர்பான இறுக்கமான தீர்மானங்களும் இக்கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்டன.

மன்னாரில் இன்று சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதுமன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (27) காலை ...
27/05/2026

மன்னாரில் இன்று சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது

மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று (27) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மன்னார் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் திரு. கே. கனகேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சட்டப் பிரச்சினைகளுக்கு சட்டபூர்வமான தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் சட்டத்தரணிகள், அரச அலுவலகங்களின் அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய துறையினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள், வழிகாட்டல்கள் மற்றும் விழிப்புணர்வு சேவைகளை வழங்கினர்.

காணி பிரச்சினைகள், குடும்பத் தகராறுகள், ஆவணச் சிக்கல்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, நிர்வாக மற்றும் குடிமக்கள் உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு சட்ட விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், தேவையான சட்ட உதவிகளையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வு நீதியமைச்சின் அனுசரணையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஆதரவுடன், UNICEF, UNDP, JURE திட்டம் மற்றும் சர்வோதயா அமைப்புகளின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார்  மாவட்டத்தில் உள்ளூர் உற்பத்தியாளரின் உற்பத்தி முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக எழுத்தூர் செல்வநகர் கிராமத்தில் பு...
25/05/2026

மன்னார் மாவட்டத்தில் உள்ளூர் உற்பத்தியாளரின் உற்பத்தி முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக எழுத்தூர் செல்வநகர் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளூர் உற்பத்தியாளரின் "Suji Spicy Foods (PVT) Ltd", தொழிற்சலைய இன்று மன்னார், மாவட்ட செயலாளர்/அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் அவர்களினால் சம்பிரதாய முறைப்படி திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சமயத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற உத்தியோகத்தர்களும் ,உள்ளூர் பொது அமைப்புகளின்பிரதிநிதிகளும்,பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் முப்படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்டத்தில் முப்படையினர்...
25/05/2026

மன்னார் மாவட்டத்தில் முப்படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் முப்படையினர் வசமுள்ள காணி விடுப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (25.05.2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் நெறிப்படுத்தலில், பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ. மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் கௌரவ உபாலி சமரசிங்க மற்றும் ,வன்னி மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரவிகரன் , ஜெகதீஸ்வரன் மற்றும்
முப்படைகளின் உயர்மட்ட பொறுப்பதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், மாவட்ட செயலக அலுவலகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Address

Mannar Town
41000

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Friday 09:00 - 15:00

Alerts

Be the first to know and let us send you an email when District Secretariat Mannar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share