01/09/2026
மன்னார் மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம் 2026 தயாரிப்பு பூர்த்தி
காணிப் பயன்பாட்டுக் கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் மாவட்ட காணிப்பயன்பாட்டு அலுவலகத்தால் மன்னார் மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம் மன்னார் மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம்தயாரித்தல் தொடர்பான இறுதி பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் 01.09.2026 இன்று மாவட்ட செயலாளரின் தலைமையில் மாவட்ட செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உதவிப் பணிப்பாளர் (காணிப் பயன்பாடு) அவர்களினால் இத்திட்டம் தொடர்பான விரிவான PowerPoint Presentation முன்வைக்கப் பட்டது. இத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள், குறைந்த பயன்பாடுடைய விவசாய நிலங்கள், அரசுக்கு சொந்தமான பாவிக்கப்படாத நிலங்கள், காணிப் பயன்பாட்டு பிரச்சினைகள் காணப்படும் இடங்கள், மேய்ச்சல் தரைக்கு பொருத்தமான இடங்கள் மற்றும் மக்களின் பயன்பாட்டுக்கென சம்மந்தப்பட்ட திணைக்களங்களால் விடுவிக்கப்பட வேண்டிய இடங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து பிரதேச செயலாளர்கள், வனவள மற்றும் வனவிலங்கு பரிபாலன திணைக்களம், நிலஅளவை திணைக்களம் , புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம், நீர்பாசனத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களங்களம் உள்ளிட்ட முக்கியமான பல திணைக்களங்களின் பங்குதாரர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.