District Secretariat Mannar

District Secretariat Mannar Public Service

மன்னார் மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம் 2026 தயாரிப்பு பூர்த்திகாணிப் பயன்பாட்டுக் கொள்கை திட்டமிடல் திணைக்களத...
01/09/2026

மன்னார் மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம் 2026 தயாரிப்பு பூர்த்தி

காணிப் பயன்பாட்டுக் கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் மாவட்ட காணிப்பயன்பாட்டு அலுவலகத்தால் மன்னார் மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம் மன்னார் மாவட்டத்திற்கான காணிப் பயன்பாட்டு திட்டம்தயாரித்தல் தொடர்பான இறுதி பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் 01.09.2026 இன்று மாவட்ட செயலாளரின் தலைமையில் மாவட்ட செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது உதவிப் பணிப்பாளர் (காணிப் பயன்பாடு) அவர்களினால் இத்திட்டம் தொடர்பான விரிவான PowerPoint Presentation முன்வைக்கப் பட்டது. இத்திட்டம் மன்னார் மாவட்டத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள், குறைந்த பயன்பாடுடைய விவசாய நிலங்கள், அரசுக்கு சொந்தமான பாவிக்கப்படாத நிலங்கள், காணிப் பயன்பாட்டு பிரச்சினைகள் காணப்படும் இடங்கள், மேய்ச்சல் தரைக்கு பொருத்தமான இடங்கள் மற்றும் மக்களின் பயன்பாட்டுக்கென சம்மந்தப்பட்ட திணைக்களங்களால் விடுவிக்கப்பட வேண்டிய இடங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து பிரதேச செயலாளர்கள், வனவள மற்றும் வனவிலங்கு பரிபாலன திணைக்களம், நிலஅளவை திணைக்களம் , புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம், நீர்பாசனத் திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களங்களம் உள்ளிட்ட முக்கியமான பல திணைக்களங்களின் பங்குதாரர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mr Sivananthan assumed duty as district psyco social officer on today
01/09/2026

Mr Sivananthan assumed duty as district psyco social officer on today

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!சேவைப் பிரமாணக் குறிப்பை உடனடியாக அமுல்படுத்தக் கோரி போராட்...
31/08/2026

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

சேவைப் பிரமாணக் குறிப்பை உடனடியாக அமுல்படுத்தக் கோரி போராட்டம் – அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நீண்டகால சேவைப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி, சேவைப் பிரமாணக் குறிப்பை (Service Minute) உடனடியாக அமுல்படுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (31.08.2026) திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

காலை 10 மணியளவில் இடம்பெற்ற இப்போராட்டத்தில், மன்னார் மாவட்டத்தின் பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். சுகயீன விடுமுறை போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால், அரச திணைக்களங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்படும் சில பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பை தாமதமின்றி அமுல்படுத்துதல், சேவை உரிமைகள் மற்றும் சேவை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், பதவி உயர்வு மற்றும் சம்பள நிர்ணயம் உள்ளிட்ட நீண்டகால பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவை நிலை தொடர்பாக நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி, நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தின் நிறைவில், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சார்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களை சந்தித்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும் வகையில் அரசாங்க அதிபரிடம் கையளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இந்த தொழிற்சங்க நடவடிக்கையினால், மாவட்டத்தின் பல்வேறு அரச நிறுவனங்களில் அவர்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் நிர்வாகப் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னாரில் கனிமவள அகழ்வுக்கு புதிய நடைமுறைமன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிமவளங்களை அகழ்ந்த...
29/08/2026

மன்னாரில் கனிமவள அகழ்வுக்கு புதிய நடைமுறை

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிமவளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையிலான நடைமுறைகள் குறித்த விசேட கலந்துரையாடல், நேற்று (28) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் ஒழுங்குபடுத்தல், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த காலங்களில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் அகழ்வில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு புதிய நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் கனிம வள அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது, மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான சிறப்புக் குழுவின் அனுமதியும் பெறப்பட வேண்டும் எனப் புதிய நடைமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் அடங்கிய 26/1298/110/046 இலக்கமுடைய புதிய சுற்றுநிருபம், 2026 ஜூலை 6 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்பு மற்றும் வீதி புனரமைப்பு உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளுக்குக் கனிம வளங்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. இருப்பினும், அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் பல அபிவிருத்தித் திட்டங்கள் பின்னடைவைச் சந்தித்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு, அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கான நடைமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதுடன், விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும் எனப் புதிய சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான கனிம வள அகழ்வைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய சுற்றுநிருபத்தில் பல்வேறு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அபிவிருத்தி திட்டங்களுக்குத் தேவையான கனிம வளங்களை உரிய அனுமதிகளுடன், கட்டுப்பாட்டு விலைகளில் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

மேலும், கனிம வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்தவும், சட்டவிரோத அகழ்வுகளைத் தடுக்கவும் இந்நடவடிக்கை உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புதிய நடைமுறையானது வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளது

எல்.ஆர்.சி காணிகள் தொடர்பான விசேட  கலந்துரையாடல்============================== மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவு...
28/08/2026

எல்.ஆர்.சி காணிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்
==============================
மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் (LRC) சொந்தமான காணிகள் மற்றும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (28) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, சோழன்குளம் பகுதியில் 250 ஏக்கர் காணியை 100 பயனாளிகளுக்கு வழங்குவது, சாளம்பன் – நெடுங்குளம் பகுதியில் 50 பயனாளிகளுக்கான காணி, முக்கொம்பன் – குண்டுக்கமம் பகுதியில் காணி தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், மன்னார் நகரப் பிரிவுக்குட்பட்ட பாலமீனோடை பகுதியில் அனுமதிப்பத்திரம் அல்லது உறுதிப்பத்திரம் வழங்கப்படாமை, நேசராசா ஜெசிந்தாவின் காணி விவகாரம் குறித்தும் ஆராயப்பட்டது.
மேலும், மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் அளவீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
காணிப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்,கூட்டுறவு பிரதி அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், , வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி)
பிரதேச செயலாளர்கள் மற்றும் நகர சபை பிரதேச சபை தலைவர்கள்,திணைக்கள அதிகாரிகள்
மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் முதன் தடவையாக மருத்துவ பீட மாணவர்களுக்கான உள்ளக பயிற்சி நெறி ஆரம்பம்மன்னார் மாவட்ட ப...
28/08/2026

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் முதன் தடவையாக மருத்துவ பீட மாணவர்களுக்கான உள்ளக பயிற்சி நெறி ஆரம்பம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களுக்கான உள்ளக பயிற்சி நெறியினை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் பிரகாரம் இன்றைய தினம் இவ்வருடத்துக்கான பல்லைக்கழக உள்ளக பயிற்சி மாணவர்கள் எட்டு பேர் மன்னார் மாவட்டத்திலே தங்களுடைய உள்ளக பயிற்சியை பெற்றுக்கொள்வதற்காக இணைக்கப்பட்டிருப்பது ஒரு பெருமைக்குரிய விடயமாகும். இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த மருத்துவ பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இது அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

33 ஆண்டுகால அர்ப்பணிப்பான அரச சேவைக்கு கௌரவம் – திருமதி J. கலைவதனி அவர்களுக்கு சேவை நலன்பாராட்டு விழா !!மன்னார் மாவட்டத்...
28/08/2026

33 ஆண்டுகால அர்ப்பணிப்பான அரச சேவைக்கு கௌரவம் – திருமதி J. கலைவதனி அவர்களுக்கு சேவை நலன்பாராட்டு விழா !!

மன்னார் மாவட்டத்தில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடந்த 33 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் சேவையாற்றிய திருமதி J. கலைவதனி அவர்களின் நீண்டகால அரச சேவையை கௌரவிக்கும் வகையில் சேவை நலன்பாராட்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

மன்னார் மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

33 ஆண்டுகால அரச சேவையில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான பணிகள், பொறுப்புணர்வு மற்றும் நிறுவனத்திற்கான பங்களிப்புகளைப் பாராட்டும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

நீண்டகால அரச சேவையை நிறைவு செய்யும் திருமதி J. கலைவதனி அவர்களுக்கு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

அவரது அர்ப்பணிப்பான 33 ஆண்டுகால சேவைக்கு மனமார்ந்த பாராட்டுகளும், எதிர்காலப் பயணத்திற்கு இனிய நல்வாழ்த்துகளும்!

மன்னார் உப்பளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட  நிர்வாகக் கட்டடம் மற்றும் களஞ்சிய சாலையை  கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அ...
27/08/2026

மன்னார் உப்பளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நிர்வாகக் கட்டடம் மற்றும் களஞ்சிய சாலையை கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள் இன்று (27) திறந்துவைத்தார் .

22/08/2026

Address

Mannar Town
41000

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 15:00
Friday 09:00 - 15:00

Alerts

Be the first to know and let us send you an email when District Secretariat Mannar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share