01/06/2026
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் உற்பத்தித் திறன்சார் அறிவினை மேம்படுத்தல் மற்றும் பரிசோதித்தல் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு அரையாண்டு ரீதியில் பரீட்சைகள் நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த 2025 இரண்டாம் அரையாண்டுக்கான வெற்றியாளர்களுக்கு அரசாங்க அதிபரால் வெற்றிச் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
வெற்றியாளர்கள்
C.M. பெர்னாண்டோ - தாபனக்கிளை
M. மாலினி - கொள்ளல் பிரிவு
S. சரணியா - புள்ளிவிபரக்கிளை
A.S நிர்மலா - கொள்ளல் பிரிவு
J.R.C லம்பேட்- மனிதவள அபிவிருத்தி பிரிவு
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபரும், உற்பத்தித்திறன் அதிகாரியுமான திரு M. பிரதீப் அவர்களும் கலந்துகொண்டார்.