DMC Mullaitivu

DMC Mullaitivu District Disaster Management Coordinating Unit in Mullaitivu District. Land Phone 021 229 0054
CDMA 021 492 7644

சுனாமி வெளியேற்றப் பாதைகள் புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு – முல்லைத்தீவு மாவட்டம்முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாம...
05/08/2026

சுனாமி வெளியேற்றப் பாதைகள் புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு – முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவினால், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், சுனாமி வெளியேற்றப் பாதைகளை புனரமைக்கும் வேலைத்திட்டங்கள் இவ்வருடம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ், செல்வபுரம், முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் முள்ளிவாய்க்கால் மேற்கு ஆகிய பகுதிகளில் சுனாமி வெளியேற்றப் பாதைகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செல்வபுரம் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதிகளுக்கான புனரமைப்பு பணிகள் தற்போது சமூக அமைப்புகள் ஊடாக ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வெளியேற்றப் பாதையின் புனரமைப்பு வேலைகள் ஒப்பந்தக்காரர் ஊடாக மேற்கொள்ளப்படும்

சுனாமி போன்ற கடல்சார் அனர்த்தங்களின் போது மக்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேறுவதற்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு
Disaster Management Centre – DMC Mullaitivu

வறட்சியை எதிர்கொள்ள முன்கூட்டிய தயார்நிலை நடவடிக்கை – குடிநீர் விநியோக வசதி வலுப்படுத்தல்தற்போது நிலவும் வறட்சியான காலநி...
05/08/2026

வறட்சியை எதிர்கொள்ள முன்கூட்டிய தயார்நிலை நடவடிக்கை – குடிநீர் விநியோக வசதி வலுப்படுத்தல்

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் எதிர்பார்க்கப்படும் எல் நினோவின் தாக்கம் காரணமாக, எதிர்வரும் நாட்களில் வறட்சியின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

தொடர்ச்சியாக போதிய மழைவீழ்ச்சி கிடைக்காத நிலை ஏற்பட்டால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதுடன், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் குழாய் இணைப்புகள் கிடைக்காத கிராமப்புற பகுதிகளில் மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ளக்கூடிய நிலை ஏற்படலாம்.

இதனை கருத்தில் கொண்டு, வறட்சி நிலைமைகளுக்கு முன்கூட்டியே தயாராகும் நடவடிக்கையாக, துணுக்காய் பிரதேச சபையின் கோரிக்கைக்கு அமைவாக, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் உள்ள லொறி பவுசர் ஒன்று துணுக்காய் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வசதியின் மூலம், தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கும், வறட்சியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க முடியும்.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு
Disaster Management Centre – Mullaitivu

காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ தொடர்பான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிமுல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப...
05/08/2026

காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ தொடர்பான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு, சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்தி ஏற்பாட்டில், இன்று (05.08.2026) முள்ளியவளை மேற்கு கிராம அலுவலர் பிரிவில், சமூகத்தினருடன் காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ (El Niño) தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, இலங்கையின் தற்போதைய காலநிலை நிலைமைகள், எல் நினோவின் தாக்கம், அதனால் ஏற்படக்கூடிய வறட்சி, கனமழை மற்றும் எதிர்கால காலநிலை மாற்றங்களின் தாக்கங்கள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்ள மக்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டியதன் அவசியம், வீடுகளில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுதல், நீர் வளங்களை பாதுகாத்தல், விவசாய மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளை காலநிலைக்கு ஏற்ப திட்டமிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கு அதிகம் உள்ளாகக்கூடிய மாவட்டங்களில் முல்லைத்தீவு மாவட்டமும் ஒன்றாக இருப்பதால், எதிர்காலத்தில் சமூக மட்டத்தில் தழுவல் நடவடிக்கைகள் மற்றும் அனர்த்த தயார்நிலை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறான முக்கியமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மக்களின் அறிவு, தயார்நிலை மற்றும் சமூகத்தின் மீள்திறன் மேலும் வலுப்பெறும்.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு
Disaster Management Centre – Mullaitivu

05/08/2026
05/08/2026
பொது மக்களுக்கான முன்எச்சரிக்கை அறிவிப்புஇன்று மாலை வேளையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழையும்  காற்றும் ...
04/08/2026

பொது மக்களுக்கான முன்எச்சரிக்கை அறிவிப்பு

இன்று மாலை வேளையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழையும் காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் இடியால் மற்றும் பலத்த காற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பலத்த காற்று காரணமாக மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுவதற்கான சாத்தியம் காணப்படுவதால், மரங்களின் கீழ் தங்குவதைத் தவிர்க்கவும், தேவையற்ற வெளிப்புறப் பயணங்களை வரையறுக்கவும், பாதுகாப்பாக அவதானத்துடன் செயற்படவும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு,
முல்லைத்தீவு.

வானிலை அறிவித்தல் – முல்லைத்தீவு மாவட்டம்தற்போது நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மலைநாட்ட...
04/08/2026

வானிலை அறிவித்தல் – முல்லைத்தீவு மாவட்டம்

தற்போது நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மலைநாட்டுப் பிரதேசங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே, இக்காலப்பகுதியில் ஏற்படக்கூடிய இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்கள் வலுவானதாக இருக்கக்கூடியதால், பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இடி மின்னல் ஏற்படக்கூடிய அறிகுறிகள் காணப்படும் சந்தர்ப்பங்களில் கீழ்க்கண்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்:

திறந்த வெளிப் பகுதிகளில் இருப்பதை தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் தங்கவும்.

மரங்களின் கீழ் அல்லது பாதுகாப்பற்ற இடங்களில் நிற்பதை தவிர்க்கவும்.

மின்சார உபகரணங்களைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்கவும்.

கடல், குளம், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் இருப்பவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இம்முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு அலகு
முல்லைத்தீவு மாவட்டம்

வெப்பமான வானிலை தொடர்பான ஆலோசனைஆலோசனை இலக்கம்: LHA/26/07/30/01இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்எச்சரிக்கை பிரிவினால் இவ்வால...
31/07/2026

வெப்பமான வானிலை தொடர்பான ஆலோசனை

ஆலோசனை இலக்கம்: LHA/26/07/30/01

இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்எச்சரிக்கை பிரிவினால் இவ்வாலோசனை 2026 ஜூலை 31 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது 2026 ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை செல்லுபடியாகும்.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்:

கிழக்கு மாகாணம்

கிளிநொச்சி மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டம்

வவுனியா மாவட்டம்

பொலன்னறுவை மாவட்டம்

மொனராகலை மாவட்டம்

⚠️ பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பகல் நேரங்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை (Heat Index) "எச்சரிக்கை மட்டம் (Caution Level)" வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களுக்கான ஆலோசனைகள்:

தேவையற்ற வெளிப்புறச் செயற்பாடுகளை நண்பகல் (11.00–3.00) நேரத்தில் தவிர்க்கவும்.

போதுமான அளவு தண்ணீர் அருந்தவும்.

இலகுவான, வெளிர் நிற ஆடைகளை அணியவும்.

சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும்.

வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியவர்கள் இடையிடையே ஓய்வெடுத்து நிழலில் இருக்கவும்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு – முல்லைத்தீவு ஆகியவற்றின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு அனைத்து மக்களும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேர்மை வாரத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலக ஊழியர்களால் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைநேர்மை வாரத்தை ம...
31/07/2026

நேர்மை வாரத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலக ஊழியர்களால் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தல் நடவடிக்கை

நேர்மை வாரத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலக ஊழியர்களின் பங்களிப்புடன் முல்லைத்தீவு நகரப் பகுதியில் அமைந்துள்ள மரநடுகைப் பகுதிகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள இடங்களை சுத்தப்படுத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட செயலகம் என்பது மாவட்டத்தின் ஏனைய நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியான நிறுவனமாக செயற்பட வேண்டும் என்ற நோக்கில், மாவட்ட செயலாளரின் தலைமையில் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே இச்சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறான செயற்பாடுகளின் பிரதிபலிப்புகள் மாவட்டம் முழுவதும் பரவலடைந்து, மக்கள் அனைவரும் நேர்மையான பொறுப்புணர்வுடன் தமது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். சுத்தமான சுற்றுச்சூழல் என்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

மேலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களின் பயன்பாட்டை இயன்றளவு குறைக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறான பொருட்கள் எமது சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

அதேபோன்று, கழிவுகளை தரம் பிரித்து அகற்றும் நடைமுறையையும் அனைவரும் பின்பற்ற வேண்டும். இன்றைய கண்காணிப்பின் போது சில இடங்களில் கழிவுத் தொட்டிகள் காணப்பட்டாலும், அவை முறையாக பராமரிக்கப்படாமலும், கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படாமலும் காணப்பட்டன.

எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு குழுவின் பொறுப்பு மாத்திரமல்ல; அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டிய ஒரு சமூகப் பொறுப்பாகும். இந்த விடயத்தில் மாவட்ட செயலகம் ஒரு முன்னோடி பங்குதாரராக தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்படுவதன் மூலம், முல்லைத்தீவு மாவட்டத்தை சுற்றுச்சூழல் நேயமான, தூய்மையான மற்றும் பொறுப்புணர்வுள்ள சமூகத்தைக் கொண்ட மாவட்டமாக உருவாக்க முடியும்.

"தூய்மையான சூழல் – நேர்மையான செயற்பாடு – பொறுப்பான சமூகம்" என்ற நோக்குடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

---

Address

District Secretariat
Mullaitivu
42000

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94773957886

Alerts

Be the first to know and let us send you an email when DMC Mullaitivu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DMC Mullaitivu:

Shortcuts

Share