30/04/2024
#ஒன்லைன்_மூதூர்_வாசிகசாலை
#நூல்_அறிமுகம் - 469
ஞானக்கூத்தன் கவிதைகள்
தொகுப்பு - திவாகர்
வகை - கவிதைத் தொகுப்பு
வெளியீடு - காலச்சுவடு பதிப்பகம்
ஆண்டு - 2018
பக்கம் - 888
ஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் மிக்கவையாக அமைந்தது. தத்துவம் என்று சொல்லப்படும் விஷயம் அவரது கவிதையில் புதிய உருவத்தை மேற்கொண்டது. அதுவரை தமிழ்க்கவிதை கண்டிராத தெருக்காட்சிகள், புதிய கவிதானுபவங்களை அவரது கவிதை வாசகருக்குத் தந்தது.
நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞர்களுள் ஒருவரான ஞானக்கூத்தன், முன்னோடித்தன்மையைத் தாண்டியும் முக்கியத்துவம் கொண்ட கவிஞர்களுள் ஒருவர். 18 வயதில் தோத்திரப் பாடல்களுடன் தொடங்கிய அவரது கவிதை இயக்கம் 2016-ல் அவர் மரணமடையும் வரை 60 ஆண்டு காலம் நீடித்தது. இந்த நெடிய இலக்கியச் செயல்பாட்டின் ஆவணமாக 2018-ல் வெளியான ‘ஞானக்கூத்தன் கவிதைகள்’ நூல் திகழ்கிறது. ‘நடை’, ‘கசடதபற’ காலங்களில் எழுதிய கவிதைகளுக்காக அதிகம் அறியப்படும் ஞானக்கூத்தன், அந்தக் காலகட்டத்துக்குப் பிறகுதான் அதிகமாக எழுதியிருக்கிறார். தன் இறுதிக் காலம் வரை தொய்வின்றி எழுதியிருக்கிறார் என்பதன் சாட்சியம்தான் இந்தப் பெருந்தொகுப்பு.
நவீனத் தமிழ்க் கவிதை வாசகர்களுக்கு ஞானக்கூத்தன் என்றால், உடனடியாக அவரது பகடி, நகைச்சுவைக் கவிதைகளும் கதைசொல்லும் கவிதைகளும்தான் நினைவுக்கு வரும். இந்தப் பண்புகளெல்லாம் அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தாலும் அவரது கவிதைச் செயல்பாட்டின் பிற்பகுதியில் அழகியல் அம்சம் கொண்ட கவிதைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
அவரது கவிச் செயல்பாட்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட ‘அழிவுப்பாதை’ போன்ற ஒருசில கவிதைகளை விட்டுவிட்டால், பிற்பகுதியில் எழுதப்பட்ட கவிதைகள்தான் செறிவும் அழகும் கூடியவையாக இருக்கின்றன. பெரும்பாலான கவிஞர்களுக்கு ஏற்படும் ‘சென்றுதேய்ந்திறுதல்’ ஞானக்கூத்தனுக்கு ஏற்படவில்லை. அப்படி ஆகாமல் அவரது கவிதையானது தொடர்ந்து பரிணாமம் அடைந்துகொண்டே இருந்திருக்கிறது.
இதனால், அவரது கவிமொழி ஒரே மாதிரி இல்லாமல் பலவகைப்பட்டதாக இருக்கிறது. இதனால், ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது சலிப்பு ஏற்படுவதில்லை.
இந்நூலின் PDF வடிவிலான மின்நூலை பெற்றுக்கொள்ள
👇👇👇
👉 https://whatsapp.com/dl/
👉 https://t.me/MuturOnlineLibrary
👉 0771020030 / +94 71 789 1887