06/05/2026
▶ நாவிதன்வௌி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் 2026 ஆம் ஆண்டிற்க்கான கூட்டமானது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் திரு. A. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் 2026 ஏப்ரல் மாதம் 29ஆம் திகதியன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும், இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. M. S. உதுமா லெப்பை, M. S. அப்துல் வாஸித், M. A. M. தாஹிர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் கௌரவ புவனரூபன் ஆகியோருடன் நாவிதன்வௌி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன், கணக்காளர் க. றிஸ்வி யஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. தி. கிருபைராஜா மற்றும்
நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பல்வேறு துறைசார் நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக செயலாளர்கள், இணைப்பாளர்கள், சகல திணைக்களங்களின் பொறுப்புவாய்ந்த தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நாவிதன்வௌி பிரதேச செயலக வௌிக்கள உத்தியோத்தர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள், திட்ட முன்மொழிவுகள், பிரேரணைகள் மற்றும் பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என்பன கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.