Divisional Secretariat-Navithanveli

Divisional Secretariat-Navithanveli Official Page of Navithanveli Divisional Secretariat பிரதேச செயலகம் - நாவிதன்வௌி

📢வெளிவந்துவிட்டது️...‼️ "நாவெளி" ​மின்னிதழின் ​மே மாத (2026) மாத பதிப்பு📰🔗http://tiny.cc/Naveli25052026❇️ நாவிதன்வெளி பி...
26/05/2026

📢வெளிவந்துவிட்டது️...‼️
"நாவெளி" ​மின்னிதழின் ​மே மாத (2026) மாத பதிப்பு📰
🔗http://tiny.cc/Naveli25052026
❇️ நாவிதன்வெளி பிரதேச செயலக செய்திகள்
❇️ நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி செயற்பாடுகள்
❇️உலக அரசியல்
❇️கதைச்சாளரம்
❇️புதிர் போட்டிகள்
❇️மாணவர் அரங்கம்
❇️கல்விப் பாதை
❇️சட்டம் கற்போம்
❇️பெண்ணியம்
❇️கவிதைச் சாரல்
❇️மருத்துவமும் நாமும்
❇️படலையைத் தேடி…
போன்ற பல சுவாரஸ்யமான விடயங்களுடன்…

▶ பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன், வாசிப்புத்திறன், தற்துணிவு போன்றவற்றை ஊக்குவித்து அவர்களுக்கான பிரதேச ரீதியிலான அங்கீ...
25/05/2026

▶ பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன், வாசிப்புத்திறன், தற்துணிவு போன்றவற்றை ஊக்குவித்து அவர்களுக்கான பிரதேச ரீதியிலான அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் “வத்ஸர பியவர-2026” வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வௌி பிரதேச செயலக கலாசார பிரிவு மற்றும் அம்பாறை மாவட்ட செயகம் ஆகியனவற்றின் ஏற்பாட்டில் நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையேயான செய்தி வாசிப்பாளர் போட்டி நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2026 மே மாதம் 21ஆம் திகதியன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நாவிதன்வௌி பிரதேச செயலக பதில் உதவிப் பிரதேச செயலாளர் திரு. பே. பிரணவரூபன், நிருவாக உத்தியோகத்தர் திரு. ஓ. கே. கீர்த்தி குசுமிந்த, நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு. மனோஜ் இந்ரஜித், அம்பாறை மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் T. M. றின்சான், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. அ. சர்மிலராஜ் ஆகியோருடன் கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வுக்கு நடுவர்களாக கமு/கமு/புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலய அதிபர் கலாபூசணம் வித்தகர் அறிவிப்பாளர் A. M. அன்சார், ஓய்வு பெற்ற ஆசிரியை மஸூறா சுஹுறுத்தீன், T.M செய்திப் பணிப்பாளர் இளம் கலைஞர் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் A. L. M. ஷினாஸ், லங்கா புத்ர தேசபந்து ஊடகவியலாளர் கஜானா சந்திரபோஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் 10 பாடசாலைகளை சேர்ந்த 49 மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர். இதில் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்படவுள்ளன. இந்நிகழ்வுக்கான ஒத்துழைப்பை வழங்கிய குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் மாணவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் அனைவருக்கும் நாவிதன்வௌி பிரதேச செயலகம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.

▶ வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்குடியேற்ற வீடமைப்புத்...
20/05/2026

▶ வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்குடியேற்ற வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நாவிதன்வௌி பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான 1ஆம் கட்ட உதவித்தொகை மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயல் அனர்த்த நிலைமையின் காரணமாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கான 1ஆம் கட்ட கொடுப்பனவு போன்றவற்றிற்கான காசோலைகளை குறித்த பயனாளிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2026 மே மாதம் 20 ஆம் திகதியன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கௌரவ A. ஆதம்பாவா அவர்கள், நாவிதன்வௌி பிரதேச சபை உறுப்பினர் திரு. K. நிரோஜன் மற்றும் நாவிதன்வௌி பிரதேச செயலக கணக்காளர் K. றிஸ்வி யஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா, சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், வௌிக்கள உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக அபிவிருத்தி சபை தவிசாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கிவைத்தனர்.

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பை ஒரு தேசிய இயக்கமாக முன்னெடுக்கும் வகையில், “அகன்று செல்" (Go Away) எனும் தொனிப்பொருளில் ...
19/05/2026

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பை ஒரு தேசிய இயக்கமாக முன்னெடுக்கும் வகையில், “அகன்று செல்" (Go Away) எனும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு செயற்திட்டம் 2026 ​மே மாதம் 18ஆம் திகதி நாவிதன்வெளி பிரதேச செயலக முன்னால் உள்ள பிரதான வீதியில் இடம்பெற்றது.
நாட்டில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் “போதைப்பொருள் அற்ற நாடு மகிழ்ச்சியான நாளை" என்ற தொனிப்பொருளின் கீழ் " அகன்று செல்-முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சவளக்கடை பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், சிறுவர் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் தடுப்பு வேலை திட்டத்திற்கு பொறுப்பான விடய உத்தியோகத்தர் A.C M. றினோஷன் மற்றும் போதைப் பொருள் முற் தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் A.K.ஹனா அவர்கள் இணைந்து முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினர்.
இதன் போது, மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இதில், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வழிமுறைகள், மேலும் சமூகத்தை போதைப்பொருள்களுக்கு எதிராக வலுப்படுத்தும் திட்டங்கள் உள்ளடக்கமாக இடம்பெற்றிருந்தன. இந்த செயற்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக, போதைப்பொருள் தொடர்பான முறைப்பாடுகளை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1818 என்ற இலக்கத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதும் இடம்பெறுகிறது.

▶ ஜனாதிபதி நிதியத்தின் (President's Fund) சேவைகள் பிரதேச செயலக மட்டத்திற்கு பரவலாக்கப்பட்டு நிகழ்நிலை முறையில் சமர்ப்பிக...
15/05/2026

▶ ஜனாதிபதி நிதியத்தின் (President's Fund) சேவைகள் பிரதேச செயலக மட்டத்திற்கு பரவலாக்கப்பட்டு நிகழ்நிலை முறையில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான கொடுப்பனவுகளை நேரடியாக பிரதேச செயலகங்கள் மூலமாக பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் மூலமாக நாவிதன்வௌி பிரதேச செயலகப்பிரிவில் அன்னமலை-02 கிராம உத்தியோகத்தர் பிரிவினைச் சேர்ந்த பயனாளியின் இருதய சத்திர சிகிச்சைக்கான ரூ.350,000.00 இற்கான மருத்துவ உதவிக் கொடுப்பனவு கிடைக்கப்பெற்றது. இதற்கான காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2026 மே மாதம் 14ஆம் திகதியன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், நாவிதன்வௌி பிரதேச செயலக கணக்காளர் திரு. க. றிஸ்வி யஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா, குடியேற்ற உத்தியோகத்தர் N.M.M. அஸ்லம் சுஜான் மற்றும் விடய உத்தியோகத்தர் திருமதி. த. மயூரதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

▶ வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் (மீள்குடியேற்ற) அமைச்சின் வீட்டுத்திட்டத்திற்கான தெரிவு செய்யப்பட்ட நாவிதன்வௌ...
15/05/2026

▶ வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் (மீள்குடியேற்ற) அமைச்சின் வீட்டுத்திட்டத்திற்கான தெரிவு செய்யப்பட்ட நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பயனாளிகளுக்கான தௌிவூட்டல் கலந்துரையாடலானது பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் 2026 மே மாதம் 13ஆம் திகதியன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில், நாவிதன்வௌி பிரதேச செயலக கணக்காளர் க. றிஸ்வி யஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா, நாவிதன்வௌி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர், நாவிதன்வௌி பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகள், மற்றும் கட்டிட மற்றும் மலசலகூட நிர்மாணம் தொடர்பான அனுமதிகளை பெற்றுக்கொள்ளும் முறைகள் தொடர்பாகவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

08/05/2026
▶ பிரதேச கைத்தொழில் மேம்பாட்டு சபையின் தொழில் முயற்சியாளர்களுக்கான மனநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையடல் நாவிதன்வெளி பிரத...
06/05/2026

▶ பிரதேச கைத்தொழில் மேம்பாட்டு சபையின் தொழில் முயற்சியாளர்களுக்கான மனநிலை மாற்றம் தொடர்பான கலந்துரையடல் நாவிதன்வெளி பிரதேச செயலாளார் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் தலைமையில் 2026 மே மாதம் 05ஆம் திகதி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.
நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தொழில் முயற்சியாளர்களின் தொழில் அபிவிருத்திக்கு அவர்களின் பங்களிப்பினை அதிகரிக்கும் நோக்கில் நாவிதன்வௌி பிரதேச செயலக கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வளவாளராக கல்முனை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ஜெனீடா பிரதீபன் கலந்து கொண்டு தொழில் முயற்சி அபிவிருத்தி சம்பந்தமான தௌிவூட்டல்களை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் பிரதேச செயலக சிறு கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகதர்கள், தொழில் முயற்சி அவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் தொழில் சார் மேம்பாட்டு சபை அங்கத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

▶ நாவிதன்வௌி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் 2026 ஆம் ஆண்டிற்க்கான கூட்டமானது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மற்று...
06/05/2026

▶ நாவிதன்வௌி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் 2026 ஆம் ஆண்டிற்க்கான கூட்டமானது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் திரு. A. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் 2026 ஏப்ரல் மாதம் 29ஆம் திகதியன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
மேலும், இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான திரு. M. S. உதுமா லெப்பை, M. S. அப்துல் வாஸித், M. A. M. தாஹிர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் கௌரவ புவனரூபன் ஆகியோருடன் நாவிதன்வௌி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன், கணக்காளர் க. றிஸ்வி யஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. தி. கிருபைராஜா மற்றும்
நாவிதன்வௌி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பல்வேறு துறைசார் நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக செயலாளர்கள், இணைப்பாளர்கள், சகல திணைக்களங்களின் பொறுப்புவாய்ந்த தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நாவிதன்வௌி பிரதேச செயலக வௌிக்கள உத்தியோத்தர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள், திட்ட முன்மொழிவுகள், பிரேரணைகள் மற்றும் பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என்பன கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

▶ ஜனாதிபதி நிதியத்தின் (President's Fund) சேவைகள் பிரதேச செயலக மட்டத்திற்கு பரவலாக்கப்பட்டு நிகழ்நிலை முறையில் சமர்ப்பிக...
30/04/2026

▶ ஜனாதிபதி நிதியத்தின் (President's Fund) சேவைகள் பிரதேச செயலக மட்டத்திற்கு பரவலாக்கப்பட்டு நிகழ்நிலை முறையில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான கொடுப்பனவுகளை நேரடியாக பிரதேச செயலகங்கள் மூலமாக பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் மூலமாக நாவிதன்வௌி பிரதேச செயலகப்பிரிவில் மத்தியமுகாம்-03 கிராம உத்தியோகத்தர் பிரிவினைச் சேர்ந்த பயனாளியின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான ரூ.800,000.00 இற்கான மருத்துவ உதவிக் கொடுப்பனவு கிடைக்கப்பெற்றது. இதற்கான காசோலையை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2026 ஏப்ரல் 30ஆம் திகதியன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கௌரவ பிரதேச சபை உறுப்பினர் திரு. K. நிரோஜன், நாவிதன்வௌி பிரதேச செயலக கணக்காளர் திரு. க. றிஸ்வி யஹ்சர், சமூக சேவை உத்தியோகத்தர் திரு. கு. குணரெட்ணம், நிதி உதவியாளர் திருமதி. க. அமிர்தலிங்கம் மற்றும் விடய உத்தியோகத்தர் திருமதி. த. மயூரதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Address

Navithanveli

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94672223256

Alerts

Be the first to know and let us send you an email when Divisional Secretariat-Navithanveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Divisional Secretariat-Navithanveli:

Share