21/08/2026
▶ NAITA நிறுவனத்தின் அனுசரணையுடன் விதாதா வள நிலைய மூலமாக நடத்தப்பட்ட நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான உதவித் தாதியர் பயிற்சி நெறியின் முதலாம் கட்ட கற்க்கையினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2026 ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதியன்று நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அதிதிகளாக நாவிதன்வெளி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் O.G.K. குசுமிந்த, காரைதீவு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு. பே. பிரணவரூபன், NAITA நிறுவன மாவட்ட முகாமையாளர் திரு. M. மோகன் அபேசுந்தர, மதிப்பீட்டாளர்களான திரு. N. பயோஜன், திரு. K. செல்வபிரகாஸ், ஓய்வு பெற்ற தாதி உத்தியோகத்தர் A. M. சகாப்தீன் ஆகியோரும் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் I. சுல்பிகா, நாவிதன்வெளி விதாதா அபிவிருத்தி உத்தியோகத்தர் M. N. M. உஸாமா, விதாதா வெளிக்கள இணைப்பாளர் திரு. K. நவநீதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.