22/08/2026
රාජ්ය විශ්වවිද්යාල තුළ නේවාසිකාගාර 55ක් ඉදිකිරීමේ ව්යාපෘතිය වවුනියාව විශ්වවිද්යාලයෙන් ඇරඹෙයි.
• විශ්වවිද්යාල තුළ පොහොසත් අධ්යාපන පරිසරයක් ගොඩනැගීම අපගේ ප්රධාන අරමුණයි.
-අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය -
රටේ අනාගත නායකත්වය බිහිකිරීමට අවශ්ය ශිෂ්ය ක්රියාකාරකම් සිදු කිරීම සඳහා සහාය වියහැකි වඩාත් නිදහස් පරිසරයක් විශ්වවිද්යාල තුළ ගොඩනැගීම රජයේ ප්රධාන අරමුණ වන බව අධ්යාපන, උසස් අධ්යාපන සහ වෘත්තීය අධ්යාපන අමාත්ය අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය ප්රකාශ කළාය.
දිවයින පුරා පිහිටා ඇති රාජ්ය විශ්වවිද්යාල තුළ නේවාසිකාගාර 55ක් ඉදිකිරීමේ ව්යාපෘතියේ ඇරඹුම සනිටුහන් කරමින්, 2026.08.22 දින වවුනියාව විශ්වවිද්යාලයේ නව ශිෂ්ය නේවාසිකාගාරය සඳහා මුල්ගල් තැබීමේ අවස්ථාවට එක්වෙමින් අග්රාමාත්යවරිය මේ බව ප්රකාශ කර සිටියාය.
රාජ්ය විශ්වවිද්යාල තුළ නේවාසිකාගාර 55ක් ඉදිකිරීමේ ව්යාපෘතියට අදාළව ඉදිවන ප්රථම නේවාසිකාගාරය මෙය වීම විශේෂත්වයකි.එම ව්යාපෘතිය යටතේ වවුනියාව විශ්වවිද්යාලයට හිමිවී ඇති සමස්ත නේවාසිකාගාර සංඛ්යාව 04කි.
එම ව්යාපෘතියට අනුව වවුනියාව විශ්වවිද්යාලය තුළ ඉදිකෙරෙන මෙම නේවාසිකාගාර ගොඩනැගිල්ල, මහල් හතරකින් සමන්විත වන අතර, සිසුන් 200 කට පමණ එකවර නේවාසිකාගාර පහසුකම් ලබාදිය හැකිය.ඒ සඳහා රජය ආයෝජනය කර ඇති මුදල රුපියල් මිලියන 231 කට අධිකය.
එමෙන්ම එම ව්යාපෘතිය යටතේ තවත් සිසුන් 200 කට පමණ නේවාසිකාගාර පහසුකම් ලබාදිය හැකි නේවාසිකාගාරයක් ද, සිසුන් 400 කට පමණ පහසුකම් සැපයිය හැකි නේවාසිකාගාර 02ක්ද මෙම විශ්වවිද්යාලය තුළ ගොඩනැගීමට නියමිතය.
මෙහිදී, නව ශිෂ්ය නේවාසිකාගාරය සඳහා අග්රාමාත්යවරියගේ ප්රධානත්වයෙන් මුල්ගල් තැබීම සිදුකිරීමෙන් අනතුරුව, අග්රාමාත්යවරිය මෙසේද පවසා සිටියාය,
2026 වසරේදී අපට පුළුවන් වුණා දශක ගණනාවකට පස්සේ රාජ්ය විශ්වවිද්යාල තුළ ශිෂ්ය සුබසාධනය නංවාලීම සඳහා ආයෝජනයක් කරන්න. ඒ හරහා නේවාසිකාගාර 55ක් ඉදිකිරීමට කටයුතු අප ආරම්භ කරන්න බලාපොරොත්තු වෙනවා. එම ව්යාපෘතියේ ආරම්භය වවුනියාව විශ්වවිද්යාලයෙන් පටන් ගැනීම පිළිබඳ මම ඇත්තටම සතුටු වෙනවා.
ඒ විතරක් නෙමෙයි මෙම නේවාසිකාගාරයට අමතරව තවත් නේවාසිකාගාර 03ක් මෙම ව්යාපෘතිය හරහා වවුනියාව විශ්වවිද්යාලයට හිමිවීමට නියමිතයි. ඒ හරහා එම විශ්වවිද්යාලයේ සිසුන් මුහුණදෙන නේවාසිකාගාර ගැටලුවලට තිරසාර විසඳුම් ලබාදීමට අප බලාපොරොත්තු වෙනවා.
එමෙන්ම, විශ්වවිද්යාල තුළ යටිතල පහසුකම් ගොඩනැගීමේදී අප අලුතෙන් පටන් ගත්ත විශ්වවිද්යාල සහ නගරබද ප්රදේශවලින් පිටත ඇති විශ්වවිද්යාල සඳහා මූලික අවධානයක් යොමු කර තිබෙනවා. ඒ අනුව රජරට, අග්නිදිග සහ නැගෙනහිර යන විශ්වවිද්යාලවලට නේවාසිකාගාර 55ක් ඉදිකිරීමේ ව්යාපෘතිය හරහා අප ප්රමුඛතාවක් ලබා දී තිබෙනවා. එම ව්යාපෘතිය හරහා ශ්රී ලංකාවේ සමස්ත විශ්වවිද්යාල පද්ධතිය තුළ සිටින සිසුන් 16000 කට පමණ නේවාසිකාගාර පහසුකම් ලබා දෙන්න අප බලාපොරොත්තු වෙනවා.
එම නේවාසිකාගාර 55ක් ගොඩනැගීමේ ව්යාපෘතිය ඔස්සේ, සබරගමුව විශ්වවිද්යාලයට සහ රජරට විශ්වවිද්යාලයට ව්යාපෘති 7 බැගින් වෙන් කරලා තියෙනවා. එසේම, අග්නිදිග විශ්වවිද්යාලයට නේවාසිකාගාර ව්යාපෘති 6කුත්, නැගෙනහිර විශ්වවිද්යාලයට ව්යාපෘති 5කුත්, ඌව වෙල්ලස්ස විශ්වවිද්යාලයටත් ව්යාපෘති 6කුත් වශයෙන් ලබා දෙන්න අප සැලසුම් කරලා තියෙනවා.
ඒ වගේම, ශ්රී ජයවර්ධනපුර විශ්වවිද්යාලයට සහ වයඹ විශ්වවිද්යාලයට ව්යාපෘති 4 බැගින් වෙන් කරලා තියෙනවා. රුහුණු විශ්වවිද්යාලයට ව්යාපෘති 4කුත්, යාපනය විශ්වවිද්යාලයට ව්යාපෘති 2කුත් ලැබෙනවා. අවසාන වශයෙන්, මොරටුව, ත්රිකුණාමලය සහ ගම්පහ වික්රමආරච්චි යන විශ්වවිද්යාල සඳහා නේවාසිකාගාර ව්යාපෘති 2 බැගින් අප එම ව්යාපෘතිය හරහා වෙන් කරලා තියෙනවා.
එසේම, මෙම නේවාසිකාගාරය ඉදිකිරීමේ ව්යාපෘතිය සිසුන්ට නිසි ප්රතිලාභ ලබාගත හැකි වන අයුරින් නිවැරදි කාල සීමාව තුළ අවසන් කිරීමට අප කටයුතු කළ යුතුයි. ඒ වගේම, නිසි පරිදි එම සම්පත් ආරක්ෂා කරමින්, නඩත්තු කටයුතු නිසි පරිදි සිදු කරමින් ඊළඟ පරම්පරාවට භාරදීමේ වගකීමද ඔබ සියලු දෙනාම භාරගත යුතු වෙනවා.
විශ්වවිද්යාල යනු රටේ අනාගත නායකත්වය බිහිකරන ස්ථාන වන බැවින්, විශ්වවිද්යාල සිසුන්ට ගුණාත්මක අධ්යයන ක්රියාකාරකම්, අංගසම්පූර්ණ යටිතල පහසුකම් මෙන්ම නිවැරදි දේශපාලන සංස්කෘතික ජීවිතයක් ද ලබාදිය යුතු වෙනවා. ඒ නිසා තමයි විශ්වවිද්යාල තුළ නිදහස් අධ්යාපන සංස්කෘතියක් තිබෙන පරිසරයක් ඇති කිරීම සඳහා අප රජයක් ලෙස ආයෝජනය කරන්නේ.
මෙම අවස්ථාව සඳහා උතුරු පළාත් ආණ්ඩුකාර එන්. වේදනායගන්, දිස්ත්රික් සම්බන්ධීකරණ කමිටු සභාපති සහ නියෝජ්ය අමාත්ය ආර්. එච්. උපාලි සමරසිංහ යන මහත්වරුන් ඇතුළු පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් වන එස්. තිලගනාදන් සහ එම්. ජෙගදීස්වරන් යන මහත්වරුන් මෙන්ම, වවුනියාව විශ්වවිද්යාලයේ උප කුලපතිතුමා ප්රමුඛ අධ්යයන හා අනධ්යයන කාර්ය මණ්ඩල නිලධාරීන් සහ සිසුන් පිරිසක් සහභාගී වූහ.
அரச பல்கலைக்கழகங்களில் 55 விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டம் வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்.
பல்கலைக்கழகங்களுக்குள் வளமான கல்விச் சூழலொன்றைக் கட்டியெழுப்புவதே எமது முதன்மை நோக்கமாகும்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
நாட்டின் எதிர்காலத் தலைமையை உருவாக்குவதற்குத் தேவையான மாணவர் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய மிகவும் சுதந்திரமான சூழலொன்றைப் பல்கலைக்கழகங்களுக்குள் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை முழுவதிலும் அமைந்துள்ள அரச பல்கலைக்கழகங்களில் 55 விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், 2026.08.22 ஆம் திகதி வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் விடுதிக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
அரச பல்கலைக்கழகங்களில் 55 விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைவாக நிர்மாணிக்கப்படும் முதலாவது விடுதி இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்திட்டத்தின் கீழ் வவுனியா பல்கலைக்கழகத்திற்குக் கிடைக்கவிருக்கின்ற மொத்த விடுதிகளின் எண்ணிக்கை 04 ஆகும்.
இத்திட்டத்திற்கு அமைய வவுனியா பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த விடுதிக் கட்டிடம், நான்கு மாடிகளைக் கொண்டதாக அமைவதோடு, ஒரே நேரத்தில் சுமார் 200 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கக்கூடியதாகும். இதற்காக அரசாங்கம் முதலீடு செய்துள்ள தொகை 231 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமானதாகும்.
இந்தப் பல்கலைக்கழக விடுதித் திட்டத்தின் கீழ் மேலும் சுமார் 200 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கக்கூடிய ஒரு விடுதியும், சுமார் 400 மாணவர்களுக்கு வசதிகளை வழங்கக்கூடிய 02 விடுதிகளும் இந்தப் பல்கலைக்கழகத்தில் கட்டியெழுப்பப்படவுள்ளன.
பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டதனைத் தொடர்ந்து, அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,
பல தசாப்தங்களின் பின்னர் 2026 ஆம் ஆண்டிலேயே அரச பல்கலைக்கழக மாணவர்களின் நலன்புரித் துறையினை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்ய எம்மால் முடிந்தது. இதன் மூலம் 55 விடுதிகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை நாம் ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம். இத்திட்டத்தின் ஆரம்பம் வவுனியா பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்குவது குறித்து நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றேன்.
அதுமட்டுமன்றி, இந்த விடுதிக்கு மேலதிகமாக மேலும் 03 விடுதிகள் இத்திட்டத்தின் மூலம் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு கிடைக்க இருக்கின்றன. அதனூடாக இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எதிர்நோக்கிவரும் விடுதிப் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
பல்கலைக்கழகங்களுக்குள் உட்கட்டமைப்பு வசதிகளைக் கட்டியெழுப்பும்போது, புதிதாக ஆரம்பித்த பல்கலைக்கழகங்கள் மற்றும் நகரப் பகுதிகளுக்கு வெளியில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கின்றோம். அதற்கமைய ரஜரட்ட, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆகிய பல்கலைக்கழகங்களுக்கே இந்த 55 விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டத்தில் முன்னுரிமையளித்துள்ளோம். இத்திட்டத்தினூடாக இலங்கையின் ஒட்டுமொத்த பல்கலைக்கழகக் கட்டமைப்பிலுள்ள சுமார் 16,000 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
இந்த 55 விடுதிகளைக் கட்டியெழுப்பும் திட்டத்தினூடாக, சபரகமுவா பல்கலைக்கழகத்திற்கும் ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கும் தலா 7 விடுதித் திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 6 விடுதித் திட்டங்களும், கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 5 திட்டங்களும், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு 6 திட்டங்களும் பெற்றுக்கொடுக்க நாம் திட்டமிட்டிருக்கின்றோம்.
அதேபோல, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கும் வயம்ப பல்கலைக்கழகத்திற்கும் தலா 4 திட்டங்கள் வீதம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ருஹுணு பல்கலைக்கழகத்திற்கு 4 திட்டங்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு 2 திட்டங்களும் கிடைக்க இருக்கின்றன. இறுதியாக, மொறட்டுவை, திருகோணமலை மற்றும் கம்பஹா விக்ரமாரச்சி ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு தலா 2 விடுதித் திட்டங்கள் வீதம் இத்திட்டத்தின் மூலம் நாம் ஒதுக்கியுள்ளோம்.
அத்துடன், இந்த விடுதியை நிர்மாணிக்கும் திட்டமானது மாணவர்களுக்கு உரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யப்பட வேண்டும். அதேபோன்று, உரிய முறையில் அந்த வளங்களைப் பாதுகாத்து, பராமரிப்புப் பணிகளைச் சரியாக மேற்கொண்டு அடுத்த தலைமுறையிடம் கையளிக்கும் பொறுப்பையும் நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் என்பவை நாட்டின் எதிர்காலத் தலைமையை உருவாக்கும் இடங்கள் என்பதால், பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தரமான கற்றல் செயற்பாடுகள், முழுமையான உட்கட்டமைப்பு வசதிகளைப் போன்றே சரியான அரசியல் மற்றும் கலாச்சார வாழ்க்கையையும் வழங்க வேண்டியுள்ளது. அதனாலேயே பல்கலைக்கழகங்களுக்குள் சுதந்திரமான கல்விக் கலாச்சாரமொன்று நிலவும் சூழலை உருவாக்குவதற்காக நாம் ஓர் அரசாங்கம் என்ற வகையில் இந்த முதலீட்டைச் செய்கின்றோம், எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கௌரவ மாகாண ஆளுநர் என். வேதநாயகன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான ஆர். எச். உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், எம். ஜெகதீஸ்வரன் ஆகியோரும், வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்ட கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான மாணவர்களும் கலந்துகொண்டனர்.