MS Abdul Wazeeth

MS Abdul Wazeeth Member of Parliament
Organizer SLMC Pottuvil

Workshop for Members of the Parliament of Sri Lanka in China
01/06/2026

Workshop for Members of the Parliament of Sri Lanka in China

தகப்பல்லாஹூ மின்னா வமின்கும் “ஈதுல் அழ்ஹா” பெருநாள் வாழ்த்துஈகை, தியாகம், ஒற்றுமை மற்றும் மனித நேயத்தின் உயரிய பண்புகளை ...
27/05/2026

தகப்பல்லாஹூ மின்னா வமின்கும்
“ஈதுல் அழ்ஹா” பெருநாள் வாழ்த்து

ஈகை, தியாகம், ஒற்றுமை மற்றும் மனித நேயத்தின் உயரிய பண்புகளை எடுத்துரைக்கும் புனித நாளான ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தை முன்னிட்டு ஈத் முபாரக் உலகெங்கும் வாழும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அல்லாஹவின் அருளும் அமைதியும் நம் அனைவரின் வாழ்விலும் நிலைத்திருக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

இந்த ஹஜ்ஜூப் பெருநாள் எம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தினை கொண்டு வரட்டும்.

அன்புடன்
எம்.எஸ். அப்துல் வாஸித்
பாராளுமன்ற உறுப்பினர்

பொத்துவில் அல் கலீஜ் பெண்கள் மத்ரசாவில் கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ...
27/05/2026

பொத்துவில் அல் கலீஜ் பெண்கள் மத்ரசாவில் கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஊடக பிரிவு
எம்.எஸ். அப்துல் வாஸித்
பாராளுமன்ற உறுப்பினர்

வாஸித் MP சீனா நாட்டிற்கு பயணம் 🇨🇳இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக சீனா நாட்டில் நடைபெறவுள்ள 10 நாட்கள் கொண்ட அரசியல...
24/05/2026

வாஸித் MP சீனா நாட்டிற்கு பயணம் 🇨🇳

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக சீனா நாட்டில் நடைபெறவுள்ள 10 நாட்கள் கொண்ட அரசியல் செயற்பாட்டு செயலமர்வில் பங்கேற்பதற்காக 20 பாராளுமன்ற உறுப்பினர்களும் 04 அதிகாரிகளும் பயணமாகவுள்ளனர்.

அதில் எமது கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் அவர்களும் இன்று நள்ளிரவு சீனா நாட்டிற்கு உத்தியோகபூர்வ பயணமாக செல்லவுள்ளார்.

அவரது பயணம் வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் அமைய அனைவரும் பிரார்த்திப்போம். 🤲

ஊடக பிரிவு
அப்துல் வாஸித்
பாராளுமன்ற உறுப்பினர்

24/05/2026

கடந்த 22ஆம் திகதி அம்பாறை மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் அவர்களினால் பொத்துவில் கல்வி வலயம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட பதில்

நேற்றைய தினம் (22) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அம்பாறை மாவட்...
23/05/2026

நேற்றைய தினம் (22) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எமது மண்ணிண் மகிந்தன் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்.

1. யானை மனித பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்.

2. மாவட்டத்தின் பிரதான பொருளாதாரச் செயற்பாடுகளின் ஒன்றான பசுமாடு வளர்ப்பிற்கு போதியளவு மேய்ச்சல் நிலம் இல்லாமை தொடர்பான பிரச்சினையை கலந்துரையாடல்.

3. பொத்துவில், திருக்கோவில் மற்றும் பதியத்தலாவ பிரதேசங்களில் வன விலங்குகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் காணப்படுகின்ற காணிகள் தொடர்பாக விவசாயிகளுடன் நிலவி வரும் பிணக்குகள் தொடர்பாக கலந்துரையாடல்.

4. இலங்கை விமானப் படை பானமை பஹினாங்கையில் அமைந்துள்ள காணிக்கு முன்பாக உள்ள கடற்கரைக்கு பல்வேறு அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக் கொள்ளல் தொடர்பாக.

5. அம்பாறை மாவட்டத்தில் சகல பாடசாலைகளிலும் பொதுவாக காணப்படுகின்ற ஆசிரியர் வெற்றிட பிரச்சினை, பாடசாலைகளில் காணப்படுகின்ற பெளதீக வளங்கள் பற்றாக்குறை மற்றும் வலயக் கல்வி அலுவலகம் தொடர்பான பிரச்சினை.

21/05/2026

இன்றைய (21) பாராளுமன்ற அமர்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் அவர்களின் உரை

இன்றைய உரையில் பின்வரும் விடயங்கள் பேசப்பட்டது.
1. காணி விடயங்கள்
2. ஆற்று மண் அகழ்விற்கான உத்தரவு பத்திரம் வழங்கள்

அம்பாறை பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்டப் பதிவாளராக கடமையாற்றிய, பொத்துவிலைச் சேர்ந்த ஏ. பாரீஸ் அவர்கள் தற்போது பொத்துவ...
21/05/2026

அம்பாறை பிரதேச செயலகத்தில் மேலதிக மாவட்டப் பதிவாளராக கடமையாற்றிய, பொத்துவிலைச் சேர்ந்த ஏ. பாரீஸ் அவர்கள் தற்போது பொத்துவில் பிரதேச செயலகத்தில் தற்காலிக மேலதிக மாவட்டப் பதிவாளராக கடமைப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அப்துல் வாஸித்
பாராளுமன்ற உறுப்பினர்

இலங்கை கணக்காளர் சேவையில் (SLAcS) இணைந்து, கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தில் கணக்காளராக கடமையாற்றும் அப்துல் அ...
21/05/2026

இலங்கை கணக்காளர் சேவையில் (SLAcS) இணைந்து, கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தில் கணக்காளராக கடமையாற்றும் அப்துல் அஸீஸ் முஹம்மட் சிர்பான் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பொத்துவில் பிரதேசத்திலிருந்து இலங்கை கணக்காளர் சேவைக்கு உள்வாங்கப்பட்ட முதல் நபர் என்பதும் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

அவரது அரச சேவைப் பயணம் மேலும் சிறக்கவும், எதிர்காலத்தில் உயர்ந்த நிலைகளை அடையவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

எம்.எஸ். அப்துல் வாஸித்
பாராளுமன்ற உறுப்பினர்

இலங்கை போக்குவரத்து சபையின் தவிசாளரை இன்று (20) கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தித்து கலந்துரையாடினார்.பொத்துவில் பிரதேச...
20/05/2026

இலங்கை போக்குவரத்து சபையின் தவிசாளரை இன்று (20) கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சந்தித்து கலந்துரையாடினார்.

பொத்துவில் பிரதேசமானது சுற்றுலாத்துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக இருப்பதுடன், அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தரும் முக்கிய இடமாகவும் திகழ்கிறது. இதன் காரணமாக, தூர பிரதேசங்களான கட்டுநாயக்க மற்றும் எல்லே போன்ற பகுதிகளுக்கு புதிய பஸ் சேவைகளை ஏற்படுத்தித் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

மேலும், பொத்துவில் பஸ் டிப்போவில் நிலவும் ஆளணி பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் அவர் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஊடகப் பிரிவு
அப்துல் வாஸித்
பாராளுமன்ற உறுப்பினர்

Address

Pottuvil
32500

Alerts

Be the first to know and let us send you an email when MS Abdul Wazeeth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MS Abdul Wazeeth:

Share