17/03/2026
சுற்றுலாப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் 2026 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் இன்றைய தினம் (2026.03.17) மு.ப.11.00 மணியளவில் பொதுநூலக கேட்போர்கூடத்தில் கௌரவ தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் உறுப்பினருமான (ABTA) அமைப்பின் தலைவர் எம்.ஏ.அப்துல் ரஹீம், கௌரவ உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், உலக வங்கியின் பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின்(UDA) உத்தியோகத்தர்கள், கரையோரம் பேணல் திணைக்கள(CCD) உத்தியோகத்தர், RDA உத்தியோகத்தர், சுற்றுலா பணியக அதிகாரிகள், சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர் மற்றும் துறைசார் அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், முப்படையினர், சுற்றுலாத் துறை முயற்சியில் ஈடுபடுகின்ற தரப்பினர்கள், உல்லாச விடுதி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துறையாடப்பட்டதுடன்> எதிர்காலத்தில் செயற்படுத்த வேண்டிய திட்டங்களும் முன்மொழியப்பட்டதுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒவ்வொரு தரப்பினருக்கும் பொறுப்புக்களும் ஒப்படைக்கப்பட்டன.