Youth Wing - Pottuvil

Youth Wing - Pottuvil #தீர்வே_விடிவு

நெட்டிசன்கள் விளக்கு பிடிக்க ஊர் துரோகிகள் மீண்டும் களத்தில்!  இறுதியாக நடைபெற்ற பிரதேச சபை தேர்தலில்  மூக்குடைந்து வாக்...
19/11/2025

நெட்டிசன்கள் விளக்கு பிடிக்க ஊர் துரோகிகள் மீண்டும் களத்தில்!

இறுதியாக நடைபெற்ற பிரதேச சபை தேர்தலில் மூக்குடைந்து வாக்குடைந்து கடைசியில் வட்டார மக்களால் காறித்துப்பி விரட்டப்பட ஊர் துரோகிகளின் அரசியல் மோகம் மீண்டும் பிரதேச சபையின் மரத்தில் ஏறியுள்ளது.

முஷாரப் எனும் ஆளுமையின் கையில் அதிகாரம் சென்று விடக்கூடாது என்பதில் மட்டும் அல்ல கிடைக்கிற அதிகாரத்தை எல்லாம் உடைத்து ஊருக்கு சாபம் தேடி சுயநல அரசியல் அஜன்டாக்களுக்கு விலைபோகும் அரசியல் விலைமாந்தர்கள் தான் இந்த ஊர் துரோகிகள் என்றால் குறி தப்பாது.

எவ்வளவோ நல்ல விடயங்களுக்காக முஷாரப் தன்நலமின்றி ஊருக்காக போராடி வென்ற தருணங்களில் வாழ்த்த வாய் உசுப்பிய வரலாறு துரோகிகளிடம் இருந்ததில்லை மாறாக நயவஞ்சகத்தனம் ஊடாக பொத்துவில் மண்ணில் பிளவுகளை உண்டாக்கி அதனூடு கள்ளிச்செடிகளை வளர்த்து விட்டவர்கள் தான் இந்த ஊர் துரோகிகள்!

இந்த ஊரின் வரலாற்றை வறுத்து வறுத்து கொட்டுகையில் தன் சுயநலத்துக்காக காட்டியும் கூட்டியும் கொடுத்த துரோகிகளுக்கு சாவு மணி அடிக்கப்பட்டது முஷாரப் என்கிற சட்டத்தரணி சட்டமன்றம் நுழைந்த போது தான்!

மண்மலை பிரச்சினையை முடிப்பாரா? என ஏளனம் விட்டார்கள், அவர்களின் வாய்களை தீர்வுத்தீ மூலம் கொழுத்தினான். பஸ் டிப்போவை தரமுயரத்துவாரா? என்று விசும்பினார்கள். தரமுயரத்தி துரோகிகளின் குரல்வளையை நெறித்துக்காட்டினான். வைத்தியசாலை என்று வாய் திறக்கும் முன்பே மாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் இருந்த பொத்துவில் ஆதார வைத்தியசாலையை பறித்துக் கொண்டு சென்று மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து துரோகிகளின் கண்களின் மேல் குத்தினான். போனசாக ஒசுசலவை கொண்டு வந்து நிறுத்தினான். இப்படி மக்களின் கண் முன்னே விரிந்து கிடக்கும் ஆரிய காயங்களின் தழும்புகளில் எழுந்து நிற்கிற அடிப்படை உரிமைகளை மீட்டுக்கொடுத்த தலைவனுக்கு பொத்துவில் மக்கள் எப்போதும் நன்றிக்கடன் கொண்டவர்கள்!

எப்படியாவது முஷாரபை வீழ்த்த வேண்டும் என மூத்திரச்சந்துகளில் திட்டம் போட்டு எதிர்த்தவர்கள் எரித்தவர்கள் என எல்லோருக்குமாக சேர்ந்து போராடினார் முஷாரப். இலங்கையின் உயரிய சபையின் அரியாசனத்தில் முஷாரபை உட்கார வைத்து துரோகிகளின் வயிற்றை கலக்கியது கர்மா!

இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் துரோகிகள் ஒன்று கூடி வெறும் 88 வாக்குகளால் ஊரை தோற்கடிக்கச்செய்து பட்டாசு கொழுத்திய கூட்டமும் இந்த ஊர்துரோகிகளின் சின்ன வீடுகளுக்கு உள்ளாடை வாங்கிக் கொடுப்பவர்கள் தான்.

இறைவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் Jvp பெரும்பான்மை கொண்ட பாராளுமன்றம் ஊடாக எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு பேச்சுக்களால் மட்டும் காலம் கடத்துவதை விடுத்தும் ஊருக்கான கிரீடத்தை தவிசாளர் என்கிற மகுடம் கொண்டு தன் ஆளுமையை தகுதியான இடத்தில் பொருத்திக்கொண்டார்.

அந்தப்போட்டியிலும் கூட்டு துரோகிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டினார்கள்!

முஷாரப் என்கிற ஆளுமை பாராளுமன்றத்தில் சதா சமூகத்துக்கும் அபிவிருத்திக்கும் முழங்கிக்கொண்டிருந்த குரல், துரோகிகளின் திட்டத்துக்குள் அகப்பட்டிருக்கும் வாசித் எம் பி பதவி ஏற்ற இத்தனை காலத்துக்குள்ளும் எந்த ஆணியாவது புடிங்கி இருக்கிறாரா? என்றால் சைபரை சைபரால் தான் பெருக்க வேண்டி உள்ளது. இதற்குள் அல்லக்கைகளுக்கு கொண்டாட்டம் வேறு!

எல்லா வழிகளிலும் முஷாரபை தீண்ட நினைத்து மூக்குடைந்த துரோகிகள் புதிய கடிவாளம் ஒன்றை கல்முனையில் களிசன் கழட்டப்பட்ட நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரின் கழுத்தில் போட்டு பொத்துவில் பிரதேச சபையில் செயலாளர் ஆக கடமை புரிந்தவரை அவராகவே கடமைக்கு வருவது கஷ்டம் என கடிதம் எழுத வைத்து சபையின் காசோலை மற்றும் வங்கி பரிவர்த்தனைகள நிறுத்தி சபையை முடக்க திட்டம் தீட்டினார்கள்.

தவிசாளர் ஒரு சட்டத்தரணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருந்தவர், சபாநாயகர் கதிரையில் இருந்து சபையை வழி நடத்தியவர், பெயர் பெற்ற ஊடகவியளாலர், ஏற்றமிகு இளைஞன் விருதை கம்பன் கழகத்தால் சூடிக்கொண்டவன், இப்படி அவருடைய அனுபவப்பாய்ச்சல்களில் இந்த துரோகிகளின் திரைமறை திட்டங்கள் எல்லாம் வெறும் ஒல்லிக்குச்சிகள்!

சட்டரீதியில் சபையை தடங்கள் இல்லாமல் கொண்டு செல்ல சபையில் தீர்மானம் எடுத்து செயலாளருக்கு பதிலாக அவருடைய கடமைகளை செய்ய ஊழியர்களை நியமித்தார் உள்ளூராட்சி உதவி ஆணையாளருடைய அனுமதி பிரகாரம் ஒரு மாதம் மீண்டும் சபை இயங்கியது.

துரோகிகள் கல்முனையில் களிசன் கழற்றப்பட்ட நிர்வாக உத்தியோத்தருக்கு போட்ட கடிவாளத்தை கொஞ்சம் இழுத்தனர், உடனே மேதவாவி நிர்வாக உத்தியோகத்தர் பொத்துவில் பிரதேச சபையின் வங்கி கணக்குகளை இடை நிறுத்தி மீண்டும் சபையை முடக்கியுள்ளார்.

குறித்து வைத்துக்கொள்ளுங்கள் கள்ளங்கபடம் இல்லாத மக்கள் பலம் கொண்ட முஷாரப் எனும் ஆளுமையை தோற்கடிக்க துரோகிகள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் மூக்குடைவது துரோகிகளே!

Address

Pottuvil
32500

Alerts

Be the first to know and let us send you an email when Youth Wing - Pottuvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share