06/04/2026
இது புத்தளம் மாநகர சபை விடுக்கின்ற முக்கிய அறிவித்தல்.
தற்போது நாட்டில் நிலவி வருகின்ற மின்சார தட்டுப்பாட்டிற்கு முகங்கொடுக்கின்ற வகையில், அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் “சுபீட்சமான இலங்கை” எனும் தேசிய வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பின்வரும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும், வரையறைகளைக் கடைப்பிடிக்குமாறும் ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்ட வழிகாட்டலுக்கு இணங்க புத்தளம் மாநகர சபை பொதுமக்களுக்கு பின்வரும் அறிவித்தலை விடுக்கின்றது.
மாநகர சபையினால் பரிபாலிக்கப்பட்டுவருகின்ற வீதி விளக்குகள் மின்சாரம் அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற கால வரையான மாலை 6.00 மணிமுதல் இரவு 10.00 வரையான காலப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் துண்டிக்க தீர்மானிக்கப்படவுள்ளது.
மேலும் இக்காலவரையில் பொது மக்கள் தமது வீடுகளில் தொலைக்காட்சி பார்த்தல், குளிர்சாதனப்பெட்டி, A/C, சலவை இயந்திரம், மின்அழுத்தி, அறைக்கும் இயந்திரம், அவன் போன்ற இன்னோரன்ன மின்சார சாதனங்களை பயன்படுத்துவதை முடியுமான அளவு தவிர்ந்து கொள்ளுமாறும் வேண்டிக்கொள்வதோடு, வியாபார நிலையங்களிலும் மின்சார பாவனைகளை முடியுமான அளவு குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றது.
எனவே, நாட்டின் நெருக்கடி நிலையை கவனத்தில்கொண்டு இத்தேசிய வேலைத்திட்டத்திற்கு பொதுமக்கள் தமது பூரண பங்களிப்பை வழங்குமாறு புத்தளம் மாநகர சபை உங்களை அன்புடன் வேண்டிக்கொள்கின்றது.
நன்றி.
இவ்வண்ணம்,
எம்.எப். ரின்சாத் அஹமட்,
மாநகர முதல்வர்,
புத்தளம் மாநகர சபை.