PPAF

PPAF Puttalam District Political Awareness Forum

31/12/2024
புத்தளம் தொகுதியில் நீண்ட காலமாக நிலவிவரும் வெள்ளப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கும் முகமாக "வடிகால் அமைப்பு" வேலை திட்...
13/12/2024

புத்தளம் தொகுதியில் நீண்ட காலமாக நிலவிவரும் வெள்ளப் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கும் முகமாக "வடிகால் அமைப்பு" வேலை திட்டங்களை புத்தளம் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் முன்னெடுத்தனர்.

துறை சார் நிபுணர்களான Eng. ரிபாய், Eng. நன்ஸீர், முன்னாள் நகர சபை உறுப்பினர் சகோதரர் றஸ்மி ஆகியோரிடம் பெறப்பட்ட தகவல்கள், வழிகாட்டால்களைக் கொண்டு "வெள்ளத்தால் பாதிப்படையும் புத்தளத்துக்கான வெள்ளத்தவிர்ப்பு தீர்வுகளும் மழை நீர் வடிகான் திட்ட முன்மொழிவு களும்" வரையப்பட்டது (Proposal).

நிலையான தீர்வை எதிர்பார்த்து மேற்குறித்த ஆவணம் பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களிடம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சகோதரர் பைசல், சகோதரர் கயான் ஜனக, சட்டத்தரணி ஹிருனி விஜெசிங்க ஆகியோர் முன்னிலையில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர பொறுப்பாளர் சகோதரர் ரியாஸ் அவர்களின் தலைமையில் இன்று 13.12.2024 வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது அமைச்சரினால் இதற்கான நிதி ஒதுக்கீட்டினை மிக விரைவாக செய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டதோடு இத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஊர் மக்களின் ஒத்துழைப்பையும் வேண்டினார்.

இம் மகிழ்ச்சியான நிகழ்வினை எமது மக்களுடன் பகிர்ந்து கொள்வதோடு இத்திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஊர் மக்களின் ஒத்துழைப்பையும் உதவியையும் வேண்டுகின்றோம்.

03/12/2024

புத்தளம் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசல் அவர்களின் முதலாவது பாராளுமன்ற உரை.

03/12/2024

மழை வெள்ளம் விரைவாக வழிந்து ஓடுவதற்காக அகற்றப்பட்ட வான் கதவு, பிரதேச செயலாளர் உறுதிப்படுத்திய படி மீண்டும் பொருத்தப்பட்டுள்ளது.

https://www.facebook.com/share/p/15qePwfqpn/
02/12/2024

https://www.facebook.com/share/p/15qePwfqpn/

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
புத்தளம் கற்கை நிலையம்

இலங்கை திறந்தபல்கலைக் கழகத்தின் புத்தளம் கற்கை நிலையம், புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் அது இயங்கும் கட்டிடம் பாவனைக்கு உதவாத நிலைக்கு வருவதாகவும் வேறு ஒரு கட்டிடத்தின் அவசியம் பற்றியும் மூன்று வருடங்களுக்குள் மாற்று ஏற்பாட்டை செய்யவேண்டுமெனவும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலாநிலையம், புத்தளத்தின் கல்வி அபிவிருத்தியில் அரும் பங்காற்றும் பெறுமதிமிக்க ஒரு வளம். புத்தளம் மாவட்டத்தின் தலைநகரம் புத்தளம், என்ற வகையில் எமக்குக் கிடைக்கவேண்டிய இன்னும் பல பெளதீக வளங்களை நாம் கொண்டுவரவேண்டியுள்ளது. அதேவேளை ஏற்கனவே எம்மிடம் இருப்பதை தக்கவைத்துக்கொள்ளவேண்டிய நிலையிலும் இருக்கின்றோம். இது புத்தளம் வாழ் அனைத்து சமூகத்தினதும் கூட்டுப் பொறுப்பாகும்.

முதலில் ஒரு விடயத்தை நாம் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம். புத்தளம் கற்கை நிலையத்தில் இணைந்து கற்கும் மாணவர்களின் தொகை குறைந்து வருவது கவலைக்கூறியது. அங்கு கல்விபயிலும் மாணவர் தொகை அதிகரிக்கவேண்டும். நகரபிதா பாயிஸ் அவர்களின் பெரு முயற்சியால் கொண்டுவரப்பட்ட இக்கலா நிலையத்தைப் பாதுகாக்க நாம் மேற்கொள்ளவேண்டிய முதலாவதும் முக்கியமானதுமான முயற்சி இது.

மேற்கூறப்பட்ட விடயம் பற்றி விழிப்புணர்வூட்டப்படல் வேண்டும் என்ற நல்லநோக்கத்துடன், கற்கை நிலையப் பொறுப்பாளரினால் ஸாஹிறா பழைய மாணவர் குழும அங்கத்தவருக்குப் பகிரப்பட்டு அக்குழுமத்துக்குள் போடப்பட்ட இந்த செய்தியே, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பின்னர் அது திரிபடைந்து பெரியபள்ளியில் பொதுக்கூட்டம் ஒன்றுக்கான ஏற்பாடாக மாறிவருகின்றது.

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் புத்தளம் கற்கை நிலையம் புத்தளம் நகருக்கோ அல்லது குறித்த ஓர் இனத்திற்கோ மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. இதன் உருவாக்கத்தில் அனைத்து சமூகத்தினரும் பிரதி அமைச்சர் பாயிஸ் அவர்களுடன் இணைந்து பாடுபட்டனர். எனவே இதனை பாதுகாப்பதன் அவசியம் அனைவருக்கும் உணர்த்தப்படல் வேண்டும். ஆனால் இம்முயற்சி, சிறந்த திட்டமிடலுடன் படிப்படியாக மேற்கொள்ளப்படுவதே சிறந்தது. அதேவேளை பெரியபள்ளிவாசலில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு பள்ளி நிருவாகமே அழைப்புவிடுக்கவேண்டும்.

ஒரு நல்ல நோக்கம் கருதி நாம் அவசரப்பட்டு தீர்மானித்து மேற்கொள்ளும் முடிவுகள் இறுதியில் எமக்கு பாதக விளைவுகளைக்கொண்டுவரலாம். இதனைக் கருத்திற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைளை மேற்கொள்வது நன்று. - Puttalamonline

27/11/2024

வான் குளம் கதவு அகற்றப்பட்டது சம்பந்தமாக புத்தளம் பிரதேச செயலாளர் இடம் எமது அமைப்பு விளக்கம் கோரியது, அதன் போது கதவு அகற்றப்பட்டதற்கான காரணம் வெள்ள நீர் அவசரமாக வழிந்து ஓடுவதற்கு மாத்திரமே அன்றி எந்த உள்நோக்கங்களும் இல்லை என உறுதிப் படுத்தினார்.

பாராளுமன்ற தேர்தல் வரும் போதெல்லாம் பெரியப் பள்ளியில் கூடிக் கலைபவர்களாக இருந்த நாம் 2015 பாராளுமன்ற தேர்தலில்ஒரு MP இணை...
22/11/2024

பாராளுமன்ற தேர்தல் வரும் போதெல்லாம் பெரியப் பள்ளியில் கூடிக் கலைபவர்களாக இருந்த நாம்

2015 பாராளுமன்ற தேர்தலில்

ஒரு MP இணை வெற்றிபெற முடியாத 27 வருட கால பிரச்சினையை, ஒற்றுமையுடன் ஒரு அணியாக வெற்றிபெறவேண்டும் என்ற பேச்சளவில் இருந்த பொது மக்களின் வேட்கையை, பல தியாகங்களுக்கு மத்தியில் செயலுருவில் PPAF கொண்டுவந்தது. இறுதியில் தேசிய அரசியலின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டு. இந்த ஊர் தோற்கடிக்கப்பட்டது.

2020 பாராளுமன்ற தேர்தலில்

அதே முயற்சியினை மீண்டும் ஒருங்கமைத்து, பலதரப்புகளை மீண்டும் இணைத்து வெற்றிகரமாக நிறைவேற்றி MP ஐ பெற்றுக்கொண்டோம்.

2024 பாராளுமன்ற தேர்தலில்

மாற்று அரசியலை நோக்கி முழு இலங்கையும் மாறுகின்ற போது. அதன் வழியில் ஆளும்தரப்பில் ஒரு MP இணை பெற்றுக்கொள்ளும் முயற்சியில்.அதன் தலைமைகளுடன் புரிந்துணர்வுடன் கலந்துரையாடி சரியான தரவுகளின் அடிப்படையில் மிக பொறுப்புணர்வுடன் தனது பயணத்தை தொடர்ந்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

PPAF

12 வருடங்களாக புத்தளத்தின் சமுக பொறுப்பை சுமந்த தெளிவாக பயணிக்கும் ஒரு சுயாதீன அமைப்பாகும். நல்ல மனம் கொண்ட யாவரும் இப்பயணத்தின் பங்காளியாக அன்புடன் அழைக்கிறோம்.

இறைவன் நாடினால் எதிர் வரும் தேர்தல்களிலும் அக்கால சூழலுக்கு ஏற்ப அதன் திசை, அதன் பயணம் எல்லா தேர்தல்களிலும் தொடரும். அது புத்தளத்தின் நன்மைக்காகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அற்ப அரசியலுக்காக PPAF யிணை போட்டியாக கருதுபவர்கள், அல்லது எப்போதுமே காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் விமர்சனங்களை ஒவ்வொரு காலங்களிலும் அது கடந்தே பயணித்துள்ளது, தொடர்ந்தும் பயணிக்கும்.

Deputy Ministers.
21/11/2024

Deputy Ministers.

Congrats Prof. Chandhana Abeyrathna
19/11/2024

Congrats Prof. Chandhana Abeyrathna

புத்தளம் மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் பைசல் அவர்களுடன் ஒரு சிநேக பூர்வ சந்திப்பு.
17/11/2024

புத்தளம் மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் பைசல் அவர்களுடன் ஒரு சிநேக பூர்வ சந்திப்பு.

பாராளுமன்றத் தேர்தல் 2024 - புத்தளம் மாவட்டம்புத்தளம் தேர்தல் தொகுதி வரலாற்றில், பெரும்பான்மை கட்சி ஒன்றில் போட்டியிட்டு...
16/11/2024

பாராளுமன்றத் தேர்தல் 2024 - புத்தளம் மாவட்டம்

புத்தளம் தேர்தல் தொகுதி வரலாற்றில், பெரும்பான்மை கட்சி ஒன்றில் போட்டியிட்டு சிறுபான்மையினருக்கான பாராளமன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்ள முடியாத வரலாற்றை கொண்ட நாம், முதல் தடவையாக அந்த வரலாற்றை மாற்றி, ஒரு சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொண்டுள்ளோம், அல்‌ஹம்துலில்லாஹ். இவ்வெற்றிக்காக எமது வகிப்பாகத்தை வழங்கியமைக்கு நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.

கடந்த காலத்தில், பெரும்பான்மை கட்சியில் இருந்து சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பெற முடியாது என்பதற்கு தரவுகளுடன் விளக்கங்களை வழங்கிய நாம், இம்முறை நிகழ்கால அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்ந்து, சிறுபான்மை பிரதிநிதித்துவம் கிடைக்கலாம் என நம்பியதை பலர் ஏளனம் செய்ததும், மிரட்டல்கள் விடுத்ததும் இன்றும் மனதில் நிற்கின்றது.

அல்லாஹ்வை சாட்சியாக கொண்டு, எவ்வித சுயநலமும் இன்றி, நல்லாட்சியின் தேவையை முன்னிட்டு, அதனை சாத்தியப்படுத்திய வெற்றிக்கு பங்களிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டோம்.

எம்மை தூற்றியவர்கள், மிரட்டியவர்கள், மற்றும் விமர்சித்தவர்களின் தடைகளைக் நம்பிக்கையால் வெற்றி கொண்டு, புதியதொரு வரலாற்றை படைத்திருக்கின்றோம்.

நன்றி. மீண்டும் சந்திப்போம்!

Address

Puttalam
61300

Telephone

+94767455335

Website

Alerts

Be the first to know and let us send you an email when PPAF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share