05/08/2026
📢 அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கான மற்றுமொரு வாய்ப்பு!!! 🌟 !!!
Application - https://forms.gle/65gaPBiqTwDtTBWL7
இலங்கையின் பல்வேறு சமூகங்களுக்கிடையில் புரிதல், பரஸ்பர மரியாதை, நல்லிணக்கம் மற்றும் சமாதானமான இணை வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இவ் இளைஞர் மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதில் மதங்களுக்கு இடையிலான தலைமைத்துவம் மற்றும் சமாதானக் கட்டியெழுப்பல், சமாதானக் கலை உருவாக்கம், விழிப்புணர்வுப் பாடல் மற்றும் ஆக்கப்பூர்வ செய்தி உருவாக்கம், பாடசாலை மற்றும் சமூக விழிப்புணர்வு, சமூக சமாதானப் பிரச்சாரம் மற்றும் கண்காட்சி, சமாதானம் & பாதுகாப்பு, மத்தியஸ்தம் மற்றும் சமாதானக் கட்டியெழுப்பல் போன்ற பல்வேறு பயிற்சிகள் இடம்பெறும். 🎨🎶🤝🕊️
✨ இந்தப் பயணத்தில் இணைந்து, உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு சமாதானத்திற்கான மாற்றத்தை உருவாக்குங்கள்!
📌 முக்கிய தகவல்கள்:
🌳 செயலமர்வு: அம்பாறை & மட்டக்களப்பு மாவட்டங்களில் நடைபெறும்.
👥 30 இளைஞர் [வயது 18-35], யுவதிகள் மாத்திரமே தெரிவு செய்யப்படுவர்!
📅 திட்டக் காலம்: ஆகஸ்ட் 2026 – மார்ச் 2027
➡️ இக்காலப்பகுதியில் தொடர்ந்து இணைந்து செயற்படக்கூடியவராக இருத்தல் அவசியம்.
🔎 தெரிவின்போது கருத்தில் கொள்ளப்படும் விடயங்கள்:
⚧️ பால்நிலை | 🕌 மதப் பின்னணி | 📍 மாவட்டம் | 💼 அனுபவம் | 📊 முன்னைய பங்கேற்பு | 🎯 திட்டத்தில் இணைவதற்கான நோக்கம்
🚨🔥 விண்ணப்ப இறுதி நாள்: 09 ஆகஸ்ட் 2026 🔥🚨
👉 இன்றே விண்ணப்பியுங்கள்!