04/06/2026
"கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று மார்தட்டினோம் நமது ஆட்சியில்.
சூத்திரனுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்த சாத்திரச் சதிகளை உடைத்து, நீதிக்கட்சி காலத்திலேயே தொடங்கியது நமது கல்வி உரிமைப் போராட்டம்.
நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மாகாணம் முழுவதும் எண்ணற்ற பள்ளிகள் திறக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
பின்னர் வந்த காங்கிரஸ் ஆட்சியில், முதலமைச்சர் ராஜாஜி நிதிச்சுமையை காரணம் காட்டி ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடினார்.
அந்த மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்து வைத்து, கல்வி வளர்ச்சிக்கு புதிய வேகம் கொடுத்த காமராஜர், இன்று வரை "கல்விக்கண் திறந்தவர்" என்று போற்றப்படுகிறார். நீதிக்கட்சி சென்னைப் பகுதிகளில் செயல்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்திய பெருமையும் அவருக்கே சேர்கிறது.
அது இருக்கட்டும்.
"இல்லம் தேடிக் கல்வி" என்று கல்வியை வீடுகளுக்கே கொண்டு சென்றது நமது அரசு.
ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்ததும், பள்ளிகளை மூடத் தொடங்குகிறார்கள்.
ஒருவேளை, பள்ளிகளை மூடிவிட்டு சில காலம் கழித்து மீண்டும் திறந்து வைத்து, காமராஜரைப் போல வரலாற்றில் இடம் பிடிக்கலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ?
விஜய் அண்ணா ஆள வேண்டும். அவருக்காக இதைக் கூட பொறுத்துக்க மாட்டீங்களா?
DMK ITWing
DMK Youth Wing
கத்தார் திமுக
Black & Red Brigade