26/08/2026
කරඹේ කඩොලාන වනාන්තරයත් වනස්පති යටතේ රක්ෂිතයක් ලෙස ආරක්ෂා වුණා
පුත්තලම කලපුවේ ලවණ මිශ්ර මඳ සුළඟත්, ජලජ ජීවීන්ගේ නොනවතින ජීවන රටාවත් අතර විහිදුණු කරඹේ කඩොලාන රක්ෂිත වනය, මෙරට වෙරළබඩ පරිසර පද්ධති සංරක්ෂණයේ ඓතිහාසික සන්ධිස්ථානයක්. ජගත් කඩොලාන දිනයේ දී මෙම වනාන්තරය රක්ෂිතයක් ලෙස ආරක්ෂා කිරීමට හැකිවීම ජයග්රහණයක්.
පුත්තලම දිස්ත්රික්කයේ කල්පිටිය සහ මුන්දලම ප්රාදේශීය ලේකම් කොට්ඨාස මායිම් කරගනිමින් හෙක්ටයාර් 76.82 ක සුවිසල් භූමි භාගයක පැතිර ඇති මෙම පරිසර කලාපය, ශ්රී ලංකාවේ කඩොලාන වනාන්තරයක් නිල වශයෙන් සංරක්ෂිත තත්ත්වයට පත් කරමින් නීතිමය ආරක්ෂාව තහවුරු කළ සුවිශේෂී මෙන්ම පුරෝගාමී අවස්ථාවක් ලෙස ඉතිහාසයට එක්වෙනවා.
• මුහුදු රළ, සැඩ සුළං සහ ඛාදනය හමුවේ නොසැලී සිටිමින් ගොඩබිම ආරක්ෂා කරන ස්වභාවික පවුරක් ලෙස මෙම කඩොලාන පද්ධතිය ක්රියා කරයි.
• මත්ස්යයන්, ඉස්සන්, කකුළුවන් ඇතුළු කලපු ආශ්රිත ජලජ ජීවීන්ට බිත්තර දැමීමටත්, උන්ගේ පැටවුන්ට ආරක්ෂිතව වැඩීමටත් අවශ්ය තවානක් (Nursery Ground) නිර්මාණය කරන්නේ මෙම මුල් ජාලයයි.
• ගොඩබිම් වනාන්තරවලට වඩා කිහිප ගුණයකින් කාබන් අවශෝෂණය කර ගැනීමේ අද්විතීය හැකියාවක් ඇති කරඹේ කඩොලාන පද්ධතිය, ගෝලීය දේශගුණික විපර්යාස අවම කිරීමෙහිලා ප්රබල දායකත්වයක් සපයයි.
• දුර්ලභ සංක්රමණික හා දේශීය පක්ෂි විශේෂ රැසකගේ ලැගුම්පොළක් වන අතරම, සංවේදී උභයජීවී, උරග සහ ක්ෂීරපායී විශේෂ ගණනාවකට ස්වභාවික රැකවරණය සලසයි.
කරඹේ කඩොලාන පද්ධතිය රක්ෂිතයක් ලෙස ප්රකාශයට පත් කිරීම හුදෙක් සීමා මායිම් ලකුණු කිරීමක් පමණක් නොව, මිනිසා සහ සොබාදහම අතර පවතින අන්යෝන්ය බැඳීම අනාගත පරපුර උදෙසා සුරැකීමට තැබූ ස්ථිරසාර පියවරකි.
கரம்பே கண்டல் காப்புக்காடு, வனஸ்பதி திட்டத்தின் கீழ் ஒரு பாதுகாக்கப்பட்ட காடாக பிரகடனப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.
புத்தளம் களப்பின் உவர் காற்று மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் இடைவிடாத வாழ்வியலுக்கு மத்தியில் அமைந்துள்ள கரம்பே கண்டல் காப்புக்காடு, இலங்கையின் கரையோரச் சூழல் மண்டலப் பாதுகாப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும்.
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி மற்றும் முந்தல் பிரதேச செயலகப் பிரிவுகளின் எல்லைகளுக்குள் 76.82 ஹெக்டயர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்தச் சூழலியல் வலயம், இலங்கையில் கண்டல் காடொன்றை உத்தியோகபூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட வலயமாகப் பிரகடனப்படுத்தி, சட்டப்பூர்வ பாதுகாப்பை உறுதிசெய்த ஒரு தனித்துவமான மற்றும் முன்னோடி நடவடிக்கையாக வரலாற்றில் இடம்பிடிக்கிறது.
• இயற்கையான கரையோர அரண்: கடல் அலைகள், பலத்த காற்று மற்றும் மண்ணரிப்பு ஆகியவற்றிற்கு எதிராக உறுதியுடன் நின்று நிலப்பகுதியைப் பாதுகாக்கும் இயற்கைச் சுவராக இக்கண்டல் தொகுதி தொழிற்படுகிறது.
• நீர்வாழ் உயிரினங்களின் நாற்றுமேடை: மீன்கள், இறால்கள் மற்றும் நண்டுகள் உள்ளிட்ட களப்பு சார்ந்த நீர்வாழ் உயிரினங்கள் முட்டையிடுவதற்கும், அவற்றின் குஞ்சுகள் பாதுகாப்பாக வளர்வதற்கும் அவசியமான நாற்றுமேடையாக (Nursery Ground) இதன் வேர் வலையமைப்பு அமைகிறது.
• காபனை உறிஞ்சும் திறன்: தரைவழி காடுகளை விட பல மடங்கு அதிகமாக காபனை உறிஞ்சும் தனித்துவமான ஆற்றலைக் கொண்டுள்ள கரம்பே கண்டல் தொகுதி, உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிப்பதில் பாரிய பங்களிப்பை வழங்குகிறது.
• பல்லுயிர் புகலிடம்: பல அரிய புலம்பெயர் மற்றும் உள்நாட்டுப் பறவை இனங்களின் தங்குமிடமாக விளங்குவதுடன், உணர்திறன் மிக்க ஈரூடகவாழிகள், ஊர்வன மற்றும் பாலூட்டி இனங்கள் பலவற்றிற்கு இயற்கையான புகலிடத்தையும் அளிக்கிறது.
கரம்பே கண்டல் தொகுதியைப் பாதுகாக்கப்பட்ட காப்பாகப் பிரகடனப்படுத்தியமை என்பது வெறும் எல்லைகளைக் குறிப்பது மட்டுமல்லாது, மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான பரஸ்பர பிணைப்பை எதிர்கால சந்ததிக்காகப் பாதுகாக்கும் ஒரு நிலையான மற்றும் தீர்க்கமான படியாகும்.
The Karambe Mangrove Reserve has been safeguarded as a protected forest reserve.
Spanning amidst the brackish breeze and the vibrant aquatic life of the Puttalam Lagoon, the Karambe Mangrove Conservation Forest marks a historic milestone in the conservation of Sri Lanka's coastal ecosystems.
Covering an expansive area of 76.82 hectares across the Kalpitiya and Mundalama Divisional Secretariat divisions in the Puttalam District, this ecological zone enters history as a pioneering and exceptional initiative, securing legal protection by formally declaring a mangrove ecosystem a protected reserve in Sri Lanka.
• Natural Coastal Barrier: Standing resilient against sea waves, strong winds, and erosion, this mangrove ecosystem serves as a natural bulwark protecting the coastline.
• Aquatic Nursery: Its complex root network creates an essential nursery ground for lagoon-dwelling marine life, including fish, shrimp, and crabs, to spawn and nurture their young in safety.
• Carbon Sink: Possessing an extraordinary capacity to sequester carbon at rates several times higher than terrestrial forests, the Karambe mangrove ecosystem contributes significantly to mitigating global climate change.
• Biodiversity Haven: Serving as a roosting and nesting ground for numerous rare migratory and endemic bird species, it also provides natural sanctuary to sensitive amphibians, reptiles, and mammals.
Declaring the Karambe mangrove ecosystem a protected reserve is not merely an act of demarcating land boundaries; it represents a decisive and sustainable commitment toward preserving the vital synergy between humanity and nature for future generations.